Diabetes: கிடுகிடுவென அதிகரிக்கும் நீரிழிவு நோய்! கோவா மக்களே உஷார்

Diabetes In India: இந்தியாவில் 101 மில்லியன் நீரிழிவு நோயாளிகள் மற்றும் 136 மில்லியன் மக்கள் முன் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். வளர்சிதை மாற்ற நிலை, நாட்டின் மக்கள்தொகையில் சுமார் 11.4 சதவீதத்தை பாதிக்கிறது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 10, 2023, 10:10 AM IST
  • இந்தியாவில் நீரிழிவு நோயாளிகள் அதிகம் உள்ள மாநிலம்
  • உத்தரப்பிரதேசத்தை முந்தும் கோவா
  • கோவாவில் நீரிழிவு நோயாளிகள் அதிகம்
Diabetes: கிடுகிடுவென அதிகரிக்கும் நீரிழிவு நோய்! கோவா மக்களே உஷார் title=

நியூடெல்லி: லான்செட்டில் வெளியிடப்பட்ட சமீபத்திய அறிக்கையின்படி, இந்தியாவில் 101 மில்லியன் நீரிழிவு நோயாளிகள் மற்றும் 136 மில்லியன் மக்கள் முன் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். வளர்சிதை மாற்ற நிலை நாட்டின் மக்கள்தொகையில் சுமார் 11.4 சதவீதத்தை பாதிக்கிறது என்பதை இது குறிக்கிறது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மற்றும் இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஆகியவை இணைந்து நீரிழிவு மற்றும் நாள்பட்ட தொற்றாத நோய்கள் (NCDs) பற்றிய நாட்டின் மிகப்பெரிய தொற்றுநோயியல் ஆராய்ச்சிக்கு நிதியளித்தன. இந்தியாவின் 28 மாநிலங்கள், இரண்டு யூனியன் பிரதேசங்கள் மற்றும் நாட்டின் தலைநகரான டெல்லி ஆகியவை ஆராய்ச்சியில் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்தக் கணக்கெடுப்பில் 1,13,043 பேரின் மாதிரிகள் பயன்படுத்தப்பட்டன. சர்வதேச அளவில் பிரபலமான லான்செட் மருத்துவ சஞ்சிகை, நீரிழிவு மற்றும் நாளமில்லா சுரப்பி ஆய்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளது.

கோவாவில் 26.4 சதவீதம் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், அதே சமயம் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் மிகக் குறைவாக, 4.8 சதவீதம் பேர் உள்ளனர். ப்ரீடியாபயாட்டீஸ் தவிர, நகர்ப்புறங்களில் அனைத்து வளர்சிதை மாற்ற என்சிடிகளும் கிராமப்புறங்களை விட அதிகமாக இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | கல்லீரல் பிரச்சனை அண்டாமல் இருக்க... தினசரி டயட்டில் சேர்க்க வேண்டிய உணவுகள்!

அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 315 மில்லியன் அமெரிக்கர்கள் அதிக இரத்த அழுத்தத்தைக் கொண்டுள்ளனர், 254 மில்லியன் பேருக்கு உடல் பருமன் அதிகமாக உள்ளது, 351 மில்லியன் பேர் நடுத்தரமான உடல் பருமனைக் கொண்டுள்ளனர்.  213 மில்லியன் நபர்கள் ஹைபர்கொலஸ்டிரோலீமியா அல்லது உயர்ந்த கொலஸ்ட்ரால் கொண்டுள்ளனர்.

"இந்தியாவில் கணிசமான மக்கள் தொகையில் இருதய நோய் மற்றும் வளர்சிதை மாற்ற என்சிடிகள் காரணமாக நீண்ட கால உறுப்பு சிக்கல்கள் ஏற்படும் அபாயம் உள்ளது என்பது ஆய்வு முடிவுகளின் மூலம் தெளிவாகத் தெரிகிறது" என்று தெரியவந்துள்ளது.

"இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை, ஏனெனில் அவை நாட்டிற்கான NCD களின் வலுவான மதிப்பீடுகளை வழங்குகின்றன. முந்தைய மதிப்பீடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் தற்போது வளர்சிதை மாற்ற NCDகள் கணிசமாக அதிகமாக உள்ளன. இந்தியாவில், நீரிழிவு தொற்றுநோய் மாறுதலில் உள்ளது, சில மாநிலங்கள், ஏற்கனவே அவற்றின் உச்ச விகிதத்தை எட்டிவிட்டன. அனைத்து வளர்சிதை மாற்ற என்சிடிகளும் நகர்ப்புறங்களில் மிகவும் பொதுவானதாக இருந்தாலும், கிராமப்புறங்களில் முன்னர் அறிவிக்கப்பட்டதை விட கணிசமாக பரவியுள்ளன என்பதை ஆய்வு நிரூபிக்கிறது" என்று (Dr. Mohan’s Diabetes Specialities Centre (DMDSC) டிஎம்டிஎஸ்சி) இயக்குனர் மற்றும் மெட்ராஸ் நீரிழிவு  ஆராய்ச்சி அறக்கட்டளையின் (Madras Diabetes Research Foundation (MDRF) எம்டிஆர்எஃப்) தலைவர் டாக்டர். ஆர்.எம்.அஞ்சனா, ஹிந்துஸ்தான் டைம்ஸிடம் தெரிவித்தார்.

நீரிழிவு நோயின் அறிகுறிகள்
நீரிழிவு நோய் அறிகுறிகளின் தீவிரமானது, இரத்த சர்க்கரை அளவைக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. சிலருக்கு அறிகுறிகளை வெளிப்படுத்தாமல் இருக்கலாம், குறிப்பாக அவர்களுக்கு முன் நீரிழிவு (prediabetes), கர்ப்பகால நீரிழிவு அல்லது வகை 2 நீரிழிவு இருந்தால். மாயோ கிளினிக்கின் படி, வகை 1 நீரிழிவு நோயின் அறிகுறிகள் திடீரென்று தோன்றலாம்.

மேலும் படிக்க | 'ஸ்லோ பாய்சன்’ சர்க்கரையை உணவில் இருந்து குறைக்க சுலபமான வழிகள்

வகை 1 நீரிழிவு மற்றும் வகை 2 நீரிழிவு இரண்டும் பின்வரும் அறிகுறிகளை ஏற்படுத்தும்:

வழக்கத்தை விட அதிக தாகம் எடுப்பது
அடிக்கடி சிறுநீர் கழித்தல்.
எந்தவித முயற்சியும் இல்லாமல் திடீரென உடல் எடை குறைவது
சிறுநீரில் கீட்டோன்கள் ஏற்படுவது. போதுமான இன்சுலின் கிடைக்காதபோது, தசை மற்றும் கொழுப்பு உடைந்து, கீட்டோன்களை உற்பத்தி செய்கிறது.
எரிச்சல் அல்லது பிற மனநிலை மாற்றங்களை அனுபவித்தல்.
பார்வை மங்குவது
காயங்கள் ஆற நீண்ட காலம் ஆவது.

இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால், உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும். நீரிழிவு நோய் என்பது, அனைவருக்கும் பொதுவான ஒன்றாக மாறிவரும் காலகட்டத்தில் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம்.

மேலும் படிக்க | தொற்று நோய்களுக்கு நிவாரணம் கொடுக்கும் கிராம்பு! அற்புத மருத்துவ பலன்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News