பண்டிகைக்கு கணவர் புடவை வாங்கி தராததால் குழந்தையை அடித்து கொன்ற கொடூர தாய்!!

பண்டிகைக்கு கணவர் புதிய ஆடைகளை வாங்கி தர மறுத்ததை அடுத்து பெண் 6 மாத குழந்தையை அடித்து கொலை செய்த தாய்!!

Last Updated : Mar 2, 2020, 03:35 PM IST
பண்டிகைக்கு கணவர் புடவை வாங்கி தராததால் குழந்தையை அடித்து கொன்ற கொடூர தாய்!!  title=

பண்டிகைக்கு கணவர் புதிய ஆடைகளை வாங்கி தர மறுத்ததை அடுத்து பெண் 6 மாத குழந்தையை அடித்து கொலை செய்த தாய்!!

உத்தரபிரதேசத்தின் அலிகார் மாவட்டத்தில் நடந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தில், ஹோலி பண்டிகைக்கு 25 வயது பெண் ஒருவர் தனது ஆறு மாத மகளை அடித்து கொலை செய்துள்ள கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் ராம்பூர் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்துள்ளது. 

புதிய ஆடைகளை வாங்க சந்தைக்கு செல்ல மறுத்தபோது குற்றம் சாட்டப்பட்ட பிங்கி சர்மா மற்றும் அவரது கணவர் ராகுல் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, பிங்கி தனது கைக்குழந்தை மகள் சோனி மீது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதையடுத்து, அவர் தனது ஆறு மாத கைக்குழந்தையை சுவற்றில் மோசமாக வீசியடித்துள்ளார்.

இதையடுத்து, காவல்துறையினரிடம் ராகுல் அளித்த புகாரின் பேரில், பிங்கி மீது IPC பிரிவு 302 (கொலை) இன் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். தனது மகளை வேண்டுமென்றே கொல்லவில்லை என்று பிங்கி போலீசாரிடம் கூறியதாக நிலைய பொறுப்பாளர் நரேஷ்குமார் சிங் தெரிவித்தார்.

வீட்டு பிரச்சினைகள் மற்றும் கணவருடனான தொடர்ச்சியான வாக்குவாதங்களால் அவர் விரக்தியடைந்ததாகவும், குழந்தை இறந்துவிடுவார் என்பதை உணராமல், மகள் மீது தனது விரக்தியை வெளிப்படுத்தியதாகவும் அவர் கூறினார். பிங்கி நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பூட்டு தொழிற்சாலை தொழிலாளியான ராகுலை மணந்தார், அவர்களுக்கு மூன்று வயது மகனும் இருக்கிறார். 

 

Trending News