தந்தை மரணம்...இறுதிச் சடங்கில் பங்கேற்கப்போவதில்லை..: உ.பி. முதல்வர் யோகி

ஊரடங்கை தொடர்ந்து, குறைந்தபட்சம் மக்கள் இறுதி சடங்கில் ஈடுபட வேண்டும் என்று முதல்வர் கூறினார்.

Last Updated : Apr 20, 2020, 03:23 PM IST
தந்தை மரணம்...இறுதிச் சடங்கில் பங்கேற்கப்போவதில்லை..: உ.பி. முதல்வர் யோகி title=

புதுடெல்லி: தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்கப்போவதில்லை என உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை ஆனந்த் சிங் உடல்நலக்கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டு இருந்தார்.

ஆனந்த் சிங் பிஷ்ட் மார்ச் 13 முதல் டெல்லியில் உள்ள எய்ம்ஸில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரக பிரச்சினைகள் இருந்தன. அவருக்கு காஸ்ட்ரான் துறை மருத்துவர் வினீத் அஹுஜா குழு சிகிச்சை அளித்து வந்தது. அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக கூறப்பட்டது, அவர் கடந்த பல நாட்களாக வென்டிலேட்டரில் இருந்தார். நேற்று அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்தது. டயாலிசிஸ் சிகிச்சையும் அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் காலமானார்.டயாலிசிஸ் சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

இந்தநிலையில் தனது தந்தை ஆனந்த் சிங்கின் இறுதிச் சடங்கில் பங்கேற்கப்போவதில்லை என யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். உ.பி.யில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில் அதில் கவனம் செலுத்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Trending News