IPL _2018: சென்னை அணிக்கு 128 ரன்கள் இலக்கு!

முதலில்  பேட்டிங் செய்த பெங்களூர் அணி சென்னை அணிக்கு 128 ரன்கள் இலக்கை விதித்துள்ளது! 

Last Updated : May 5, 2018, 05:54 PM IST
IPL _2018: சென்னை அணிக்கு 128 ரன்கள் இலக்கு! title=

ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11-வது சீசன் நடந்து வருகிறது. ஐ.பி.எல்-ன் 35-வது லீக் ஆட்டம் இன்று மாலை 4 மணியளவில் புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் நடக்க உள்ளது.

ஐ.பி.எல். தொடரில் இன்று (மே-05) நடைபெறும் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிகள் மோதுகின்றன.பெங்களூர் அணி இதுவரை தான் விளையாடிய 8 போட்டிகளில் 3 வெற்றியையும் 5 தோல்வியையும் பெற்றுள்ளது. அந்த அணி தொடர்ச்சியாக வெற்றியை பெற முடியாமல் திணறி வருகிறது. இனிவரும் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற வேண்டிய நிலையில் பெங்களூர் அணி உள்ளது. 

இந்நிலையில் இன்று நடைபெறும் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி வெற்றிக்காக போராடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கடந்த போட்டியில் மும்பை அணிக்கு எதிராக பெற்ற வெற்றியின் காரணமாக பெங்களூர் அணி புதிய உத்வேகத்துடன் சென்னை அணியை எதிர்க்கொள்கிறது.

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி இதுவரை தான் விளையாடிய 9 போட்டிகளில் 6 வெற்றியையும், 3 தோல்வியையும் பெற்றுள்ளது. 6 வெற்றிகளில் 4 வெற்றிகள் கடைசி ஓவரில் அந்த அணி பெற்றுள்ளது என்பது குறிப்பிடதக்கது. சென்னை அணி இதுவரை சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறது. சென்னை அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தன் ப்ளே-ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை அதிகப்படுத்திக் கொள்ள முயலும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

புனேயில் நடக்கும் ஆட்டத்தில் முதலில்  பேட்டிங் செய்த பெங்களூர் அணி சென்னை அணிக்கு 128 ரன்கள் இலக்கை விதித்துள்ளது! 

 

Trending News