Viral: உங்க அலும்புக்கு ஒரு அளவே இல்லையா.... இணையத்தை கலக்கும் சீரியல் சீன்..!

மருத்துவமனையில் நோயாளிக்கு ஷாக் கொடுக்க ஸ்காட்ச் பிரைட் பாத்ரூம் ஸ்க்ரப்பர்-யை பயன்பதுத்திய சீன் வைரலாகி வருகிறது..!

Last Updated : Aug 23, 2020, 01:08 PM IST
Viral: உங்க அலும்புக்கு ஒரு அளவே இல்லையா.... இணையத்தை கலக்கும் சீரியல் சீன்..! title=

மருத்துவமனையில் நோயாளிக்கு ஷாக் கொடுக்க ஸ்காட்ச் பிரைட் பாத்ரூம் ஸ்க்ரப்பர்-யை பயன்பதுத்திய சீன் வைரலாகி வருகிறது..!

இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம்; அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகலாவும் இருக்கலாம். அந்த நிகழ்வுகள் அனைத்து இணையதளம் மூலம் நம்மிடம் வந்து சேர்க்கிறது. அது வாழ்நாளில் நம்மால் மறக்க முடியாத நிகழ்வாக கூட அமையலாம். இந்நிலையில், ஒரு நோயாளியின் உயிரைக் காப்பாற்ற பங்களா சீரியல் ஸ்க்ரப்பர்களை டிஃபிபிரிலேட்டராகப் பயன்படுத்திய வீடியோ வைரலாகி வருகிறது. 

ஜீ பங்களாவின் கிருஷ்ணகோலியின் (Krishnakoli) சீரியலின் ஒரு காட்சி இணையத்தில் வைரலாகி உள்ளது. அங்கு ஒரு மருத்துவர் ஒரு டிஃபிபிரிலேட்டருக்கு (defibrillator) பதிலாக ஸ்காட்ச் பிரைட் பாத்ரூம் ஸ்க்ரப்பர் தூரிகையைப் (Scotch Brite bathroom scrubber brush) பயன்படுத்துகிறார். காட்சியின் ஸ்கிரீன் ஷாட்கள் சமூக ஊடகங்களில் காட்டுத்தீ போல் பரவியது. இதை கண்டு மக்கள் அமைதியாக இருக்க முடியாது. 

ALSO READ | செல்ஃபி புகைப்படம் இதய நோயைக் கண்டறிய உதவும் என்று ஆய்வு கூறுகிறது..!

ஒரு ட்விட்டர் பயனர் கிருஷ்ணகோலியின் காட்சியில் இருந்து திரைக்காட்சிகளைப் பகிர்ந்து, அதை "ஜீ பங்களா டிவி சீரியல்" என்று தலைப்பிட்டார்.

ஆகஸ்ட் 19 அன்று கிருஷ்ணகோலியின் ஒரு முன்மாதிரி பகிரப்பட்டது, அங்கு ஒரு நோயாளியின் உயிரைக் காப்பாற்ற ஒரு மருத்துவர் போராடுவதைக் காணலாம், அதே நேரத்தில் நோயாளியின் மனைவி ஒரு மூலையில் பிரார்த்தனை செய்கிறார். இருப்பினும், அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது நோயாளி அல்லது மருத்துவர் அல்ல, ஆனால் நிகழ்ச்சியில் மருத்துவர் பயன்படுத்தும் பச்சை ஸ்க்ரப்பர் தூரிகை.

டிஃபிபிரிலேட்டர்கள் என்பது இதய துடிப்பை அல்லது அதிர்ச்சியை இதயத்திற்கு அனுப்புவதன் மூலம் சாதாரண இதயத் துடிப்பை மீட்டெடுக்கப் பயன்படும் சாதனங்கள்.

ஒரு ட்விட்டர் பயனர் கருத்து தெரிவிக்கையில், "நோயாளியின் கோமாவிலிருந்து அவரை திரும்ப அழைத்து வருவதற்காக மருத்துவர் நோயாளியின் மார்பு முடியை துடைத்தார் என்று நினைக்கிறேன். அத்தகைய மேதை (sic)." என குறிப்பிட்டுள்ளார். 

இது குறித்து பலரும் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். கொரோனாவுக்கு மத்தியில் மக்கள் படும் கஷ்டங்களின் பட்டியல் குறைந்தபாடில்லை. இன்னும் மக்களை எப்படி எல்லாம் ஏமாற்ற போறார்களோ. 

Trending News