ATM விதிமுறைகளை மாற்றிய SBI வங்கி; புது வழிமுறை இதோ

தற்போது ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 15, 2022, 11:01 AM IST
  • எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு புதிய விதிமுறைகள் அமல்
  • 10,000 மற்றும் அதற்கு மேல் எடுக்க OTP கட்டாயம்
  • OTPயின் முழுமையான செயல்முறையை அறிந்து கொள்ளுங்கள்
ATM விதிமுறைகளை மாற்றிய SBI வங்கி; புது வழிமுறை இதோ title=

புதுடெல்லி: எஸ்பிஐ ஏடிஎம் மூலம் பணம் எடுப்பதற்கான விதி மாற்றம்: வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய செய்தி வந்துள்ளது. ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான விதிகள் மாற்றப்பட்டுள்ளன. ஏடிஎம் பரிவர்த்தனைகளை மிகவும் பாதுகாப்பானதாக மாற்ற எஸ்பிஐ இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. எஸ்பிஐ ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்க ஓடிபி ஐ உள்ளிடுவது தற்போது கட்டாயமாகும். புதிய விதியின் கீழ், வாடிக்கையாளர் ஓடிபி இல்லாமல் பணத்தை எடுக்க முடியாது. இதில், பணம் எடுக்கும் நேரத்தில், வாடிக்கையாளர்களின் மொபைல் போனில் ஓடிபி வரும், அதை உள்ளிட்ட பிறகே, ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்கப்படுகிறது.

இந்த தகவலை வங்கி ட்வீட் செய்துள்ளது
எஸ்பிஐ ஏடிஎம்களில் பணப்பரிவர்த்தனை செய்வதற்கான எங்களின் ஓடிபி அடிப்படையிலான பணத்தை திரும்பப் பெறும் முறை மோசடி செய்பவர்களுக்கு எதிரான தடுப்பூசியாகும் என்றும் வங்கி ட்வீட் செய்து தெரிவித்துள்ளது. மோசடியிலிருந்து உங்களைப் பாதுகாப்பதே எங்களின் முதன்மையான முன்னுரிமையாக இருக்கும். ஓடிபி அடிப்படையிலான பணத்தை திரும்பப் பெறும் முறை எவ்வாறு செயல்படும் என்பதை எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் அறிந்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | புதிய விதி அமல்; பழைய வாகனங்கள் மறுபதிவு கட்டணம் 8 மடங்கு உயரும்! 

விதி என்ன தெரியுமா?
10,000 மற்றும் அதற்கு மேல் பணம் எடுக்கப்பட்டால் இந்த விதிகள் பொருந்தும். எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு முறையும் தங்கள் ஏடிஎம்மில் இருந்து ரூ. 10,000 மற்றும் அதற்கு மேல் பணத்தை எடுக்க அவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் டெபிட் கார்டு பின்னுக்கு அனுப்பப்படும் ஓடிபி ஐ அனுமதிக்கிறது. அதன் முழுமையான செயல்முறையை அறிந்து கொள்வோம்.

முழு செயல்முறையை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
* எஸ்பிஐ ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்க ஓடிபி தேவைப்படும்.
* இதற்கு உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி அனுப்பப்படும்.
* இந்த ஓடிபி ஆனது நான்கு இலக்க எண்ணாக இருக்கும், அதை வாடிக்கையாளர் ஒரு முறை பரிவர்த்தனைக்கு பெறுவார்.
* நீங்கள் எடுக்க விரும்பும் தொகையை உள்ளிட்டதும், ஏடிஎம் திரையில் ஓடிபி ஐ உள்ளிடுமாறு கேட்கப்படுவீர்கள்.
* வங்கியில் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட ஓடிபி ஐ பணம் எடுக்க இந்தத் திரையில் உள்ளிட வேண்டும்.

மேலும் படிக்க | பான் கார்டு பயன்படுத்துவோருக்கு முக்கிய தகவல்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News