Ration Card புதிய விதி, அரசாங்கம் எடுத்த மிகப்பெரிய முடிவு

நீங்கள் ரேஷன் கார்டு பயனாளியாக இருந்தால், உங்களுக்கான முக்கியமான செய்தி உள்ளது. அதன்படி ரேஷன் கடைகளில் பயனாளிகளுக்கு தேவையான அளவு உணவு தானியங்கள் கிடைக்கும் வகையில் மத்திய அரசு தேவையான விதிமுறைகளை உருவாக்கப்பட்டுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 14, 2022, 12:14 PM IST
  • ரேஷன் கார்டு பயனாளிகளுக்கு முக்கிய செய்தி
  • மத்திய அரசு புதிய விதிமுறைகளை உருவாக்கல்
  • தேவையான விதிகளை அமல்
Ration Card புதிய விதி, அரசாங்கம் எடுத்த மிகப்பெரிய முடிவு title=

நீங்கள் ரேஷன் கார்டு வைத்திருப்பவராக இருந்து, அரசின் ரேஷனைப் பயன்படுத்திக் கொண்டால், உங்களுக்கான முக்கியமான செய்தி உள்ளது. ரேஷன் பயனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு, தேவையான புதிய விதிகளை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. உண்மையில், சில சமயங்களில் ரேஷன் எடையைக் குறைத்து மக்களுக்கு ரேஷன் வழங்குகின்றன. எனவே, இது போன்ற அசௌகரியத்தை தவிர்க்க ரேஷன் கடைகளில் மின்னணு விற்பனை புள்ளியை தற்போது அரசு கட்டாயமாக்கியுள்ளது.

தேவையான விதிகளை அமல்படுத்தப்பட்டுள்ளது
இந்த நிலையில் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி, ரேஷன் பயனாளிகள், ரேஷன் கடைகளில் மின்னணு தராசுகளுடன் கூடிய மின்னணு விற்பனை புள்ளி கருவிகளை சரியான அளவு ரேஷனுக்காக இணைக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கவும், பயனாளிகளுக்கு உணவு தானியங்களை எடை போடுவதைத் தடுக்கவும், குறைக்கப்படுவதைத் தடுக்கவும் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

மேலும் படிக்க | Ration Card: மக்களே உஷார், இதை செய்யவில்லை என்றால் ரேஷன் பொருட்கள் கிடைக்காது

அத்துடன் அரசாங்கத்தின் கூற்றுப்படி, இலக்கு பொது விநியோக அமைப்பின் செயல்பாட்டின் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதன் மூலம் சட்டத்தின் பிரிவு 12 இன் கீழ் உணவு தானிய எடைகளில் சீர்திருத்த செயல்முறையை முன்னெடுத்துச் செல்லும் முயற்சியாகும். இதனிடையே தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், ஒரு நபருக்கு ஐந்து கிலோகிராம் கோதுமை மற்றும் அரிசி (உணவு தானியங்கள்) ஒரு கிலோவுக்கு முறையே 2-3 ரூபாய் மானிய விலையில், நாட்டின் சுமார் 80 கோடி மக்களுக்கு அரசாங்கம் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு
இதைகிடையில் தற்போது சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் இன்று மே மாதத்திற்கான ரேஷன் கார்டு குறைதீர் முகாம் நடைபெறுகிறது. இன்று காலை 10.00 மணிக்கு தொடங்கிய இந்த முகாம் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறுகிறது.

இந்நிலையில் குடும்ப அட்டைகளில் மாற்றங்கள் செய்யப்படுவது குறித்த முகாம் இன்று காலை 10 மணி முதல் சென்னையில் தொடங்கியது. அதன்படி ரேஷன் கார்டுகளில் ஏதாவது மாற்றம் செய்ய விரும்புவர்கள் இன்று நடைபெற உள்ள முகாமில் கலந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாம் மூலம் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை / நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களைப் பதிவு செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்படும். அத்துடன் இந்த சிறப்பு முகாமை குடும்ப அட்டைதாரர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு தமிழக அரசு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | அடுத்த 5 மாதங்களுக்கு இலவச ரேஷன் வேண்டுமானால் இத பண்ணுங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News