ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு லாட்டரி, 150 கிலோ அரிசி இலவசம்

Ration Card Update: ரேஷன் கார்டுதாரர்களுக்கு  அரசு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இனி ரேஷன் கார்டு மூலம் அதிக ரேஷன் பொருட்களை மக்கள் பெறுவார்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Dec 7, 2022, 12:04 PM IST
  • ரேஷன் பயனாளர்களுக்கு ஒரு குட் நியூஸ்.
  • இலவச ரேஷன் திட்டத்தை டிசம்பர் 2022 வரை நீட்டிக்கிறது.
  • ரேசன் கடைகளில் இலவச அரிசி.
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு லாட்டரி, 150 கிலோ அரிசி இலவசம் title=

இலவச ரேஷன் பொருட்கள்: ரேஷன் கார்டு பயனாளிகளுக்கு மீண்டும் ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. அதன்படி இனி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 150 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. உண்மையில், அரசு சார்பில், ரேஷன் கார்டுகளில் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. பணவீக்க உயர்வால் சிரமப்படும் மக்கள் அரசின் இத்திட்டத்தின் மூலம் பெரும் பலன்களைப் பெற்று வருகின்றனர்.

அரசு வெளியிட்ட மிகப் பெரிய அறிவிப்பு
இந்த நிலையில் தற்போது ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரசு மிகப் பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் இனி மக்கள் முன்பை விட தங்களின் ரேஷன் கார்டு மூலம் அதிக ரேஷன் பொருட்களை பெறுவார்கள். தற்போது இந்த திட்டத்தின் கீழ், ஏழைகளுக்கு 135 முதல் 150 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. ஆனால் இனி வரும் மாதங்களில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு 135 கிலோ அரிசி வழங்கப்படும். அதே நேரத்தில், சில அட்டைதாரர்களுக்கு மட்டும் 150 கிலோ வரை இலவச அரிசி கிடைக்கும். ஆனால், இதற்கு சில நிபந்தனைகளையும் அரசு விதித்துள்ளது. அவை என்ன என்பதை தெரிந்துக்கொள்வோம்.

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு அசத்தல் செய்தி: மீண்டும் வருகிறதா பழைய ஓய்வூதியத் திட்டம்? 

இந்த அற்புத அறிவிப்பை சத்தீஸ்கரின் பிபிஎல் கார்டு வைத்திருப்பவர்களுக்காக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. எனவே, இதைப் பயன்படுத்திக் கொள்ள, நீங்கள் சத்தீஸ்கரில் வசிப்பவராக இருக்க வேண்டும். இதன் கீழ், 45 கிலோ முதல் 135 கிலோ வரையிலான அரிசி முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். இது தவிர, மாநிலத்தின் முன்னுரிமை ரேஷன் கார்டுதாரர்களுக்கு 15 கிலோ முதல் 150 கிலோ வரை விநியோகம் செய்யப்பட உள்ளது.

இந்த நிலையில் இனி சத்தீஸ்கர் அரசு அதன் அட்டைதாரர்களுக்கு 15 முதல் 150 கிலோ அரிசியை இலவசமாக வழங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இதன் கீழ் ரேஷன் கார்டுதாரர்களுக்கு குடும்ப உறுப்பினர் அடிப்படையில் 15 முதல் 150 கிலோ வரையிலான இலவச அரிசி வழங்கப்படும்.

மேலும் படிக்க | SBI: என்ஆர்ஐ வட்டி விகிதங்களை அதிகரித்தது எஸ்பிஐ! சூப்பர் வட்டி விகிதம் & கால்குலேட்டர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News