பயணிகளின் கனிவான கவனத்திற்கு! ரயில்வேயின் ‘இந்த’ முக்கிய சேவை மீண்டும் தொடக்கம்

ரயில்வே பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி. இப்போது உங்கள் ரயில் பயணத்தை மேலும் இனிமையாக ஆக்கும் வகையில், ரயில்வே மிக முக்கிய சேவை ஒன்றை மீண்டும் தொடக்கியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 24, 2021, 05:19 PM IST
பயணிகளின் கனிவான கவனத்திற்கு! ரயில்வேயின் ‘இந்த’ முக்கிய சேவை  மீண்டும் தொடக்கம் title=

Indian Railways Latest News:  ரயில்வே பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி. இப்போது உங்கள் ரயில் பயணத்தை மேலும் இனிமையாக ஆக்கும் வகையில், ரயில்வே மிக முக்கிய சேவை ஒன்றை மீண்டும் தொடக்கியுள்ளது. கொரோனா தொற்று பரவல் தொடங்கியதன் காரணமாக நிறுத்தப்பட்ட சிறப்பு சேவை இப்போது மீண்டும் தொடங்குகிறது. 

கொரோனா தொற்று காரணமாக, நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது. நிலைமை சீரானதும், படிப்படியாக ரயில் சேவை தொடங்கியது. ஆனால், தொற்றுநோயைக் கட்டுப்படுத்தவும், கோவிட் வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும் ரயில்களில்  வழங்கப்பட்டு வந்த பல சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன.

மீண்டும் சமைத்த உணவு கிடைக்கும்

ஆனால் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு தற்போது மீண்டும் ரயில்களில் சமைத்த உணவை வழங்கத் தொடங்கியுள்ளது ரயில்வே. இது குறித்து ரயில்வே வாரியம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இருப்பினும், சாப்பிடுவதற்குத் தயாராக இருக்கும் Ready-to-Eat உணவும் கிடைக்கும்.

ALSO READ | ரயில் டிக்கெட் தொலைந்து விட்டதா; டூப்ளிகேட் ரயில் டிக்கெட் பெறும் முறை

சேவை கிடைக்கும் ரயில்கள் 

எனினும் தற்போது அனைத்து ரயில்களிலும் பேன்ட்ரி வசதி வழங்கப்படாது என ரயில்வே தெரிவித்துள்ளது. தற்போது, ​​ராஜ்தானி, துரந்தோ, சதாப்தி, தேஜாஸ், கதிமான் எக்ஸ்பிரஸ் போன்ற ரயில்களில் மட்டுமே கேட்டரிங் சேவை கிடைக்கும். இதில் புதிதாக சமைக்கப்பட்ட உணவு ரயிலிலேயே பயணிகளுக்கு வழங்கப்படும். ஆனால், படிப்படியாக மற்ற ரயில்களிலும் இந்த வசதி தொடங்கப்படும்.

சுற்றறிக்கை வெளியீடுரயில்வே வெளியிட்ட சுற்றறிக்கையில், வழக்கமான ரயில் சேவையை மீட்டெடுப்பதில்,  பயணிகளின் தேவைகளையும் நாடு முழுவதும் உள்ள உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் பிற இடங்களில் கோவிட் லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதைக் கருத்தில் கொண்டு, சமைத்த உணவு சேவையை மீண்டு தொடங்குவதாக கூறப்பட்டுள்ளது. 

இருப்பினும், பல ரயில்களில் படுக்கைகள் வழங்கப்படுவது மற்றும் பிற சலுகைகள் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. படிப்படியாக அனைத்து சேவைகளும் தொடங்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ALSO READ | IRCTC உடன் இணைந்து மாதம் ₹80,000 சம்பாதிக்கும் சிறந்த வழி..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News