Alert: ஆகஸ்ட் 1 முதல் 'இந்த' விதிகளில் முக்கிய மாற்றம்

ஆகஸ்ட் 1 முதல், நாட்டில் பல விதிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் சாமானியர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 1, 2022, 10:11 AM IST
  • ஆகஸ்ட் மாதம் இன்று பிறந்துள்ள நிலையில், பல விதிகள் மாற்றப்பட்டுள்ளன.
  • வணிக LPG சிலிண்டரின் விலை குறைந்துள்ளது.
  • காசோலைகளை செலுத்துவதற்கான பாசிடிவ் பே சிஸ்டம் முறையை இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது.
 Alert: ஆகஸ்ட் 1 முதல் 'இந்த' விதிகளில் முக்கிய மாற்றம் title=

ஆகஸ்ட் மாதம் இன்று பிறந்துள்ள நிலையில், இந்த மாத தொடக்கத்தில் பல விதிகளும் மாற்றப்பட்டுள்ளன. இந்த விதிகளில் ஏற்படும் மாற்றங்கள் நம் அன்றாட செலவுகளில் பாதிப்பை ஏற்படுத்தலாம். ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மாற்றங்களில், வர்த்தக சிலிண்டர்களின் விலை குறைந்துள்ளது மக்களுக்கு ஓரளவு நிவாரணம் கிடைத்துள்ளது.

(1) வணிக LPG சிலிண்டரின் விலை குறைந்துள்ளது. ஆகஸ்ட் 1ம் தேதி முதல் வர்த்தக சிலிண்டர் விலை ரூ.36 குறைந்துள்ளது. இதனால், இப்போது வணிக சிலிண்டர்களை குறைந்த விலையில் வாங்க முடியும்.

(2) இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) வழிகாட்டுதலின்படி, பாங்க் ஆப் பரோடா தனது வாடிக்கையாளர்களுக்கு ஆகஸ்ட் 1 முதல், 5 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட தொகை கொண்ட காசோலைகள் பாசிடிவ் பே சிஸ்டம் (Positive Pay System) முறையின் அடிப்படையில் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இதன்படி, ரூ. 5 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட தொகைக்கான காசோலைகளை வழங்குபவர்கள், SMS, நெட் பேங்கிங் அல்லது மொபைல் ஆப் மூலம் தங்கள் காசோலை தொடர்பான தகவல்களை வங்கிக்கு தெரிவிக்க வேண்டும். அதன் பிறகுதான் சம்பந்தப்பட்ட காசோலை பரிவர்த்தனைக்கு செலுத்தப்படும். 2020 ஆம் ஆண்டில், காசோலைகளை செலுத்துவதற்கான பாசிடிவ் பே சிஸ்டம் முறையை இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | LPG Price Today 1 August 2022: கேஸ் சிலிண்டர் விலை அதிரடிகுறைப்பு 

(3) PM Kisan மூலம் நிதி உதவி பெற, KYC செய்து கொள்வது அவசியம். பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா (PMKSNY) விவசாயிகளின் நன்மைக்காக நடத்தப்படுகிறது. அதன் KYC பெறுவதற்கான காலக்கெடு மே 31 முதல் ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டது, அது இப்போது அந்த காலக்கெடு முடிந்துவிட்டது. பதிவு செய்ய தவறியவர்கள் இத்திட்டத்தில் பயன்பெற முடியாது.

(4) பிரதம மந்திரி ஃபசல் பீமா யோஜனா (PMFBY) என்னும் பயிர் காப்பீட்டுத் திட்டத்திற்கான பதிவு ஜூலை 31 அன்று முடிவடைந்தது. பதிவு செய்ய தவறியவர்கள் இத்திட்டத்தில் பயன்பெற முடியாது.

(5) வருமான வரி கணக்கு தாக்கல் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31 ஆகும். 2021-22 நிதியாண்டிற்கான ITR தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி 31 ஜூலை 2022 ஆகும். ஆகஸ்ட் 1 முதல், ஐடிஆர் தாக்கல் செய்வதற்கு அபராதம் விதிக்கப்படும். ஐடிஆர் தாக்கல் செய்யும் தேதியை அரசாங்கம் நீட்டிக்கவில்லை என்றால், வரி விதிக்கக்கூடிய வருமானம் உள்ளவர்கள் ஐடிஆர் தாக்கல் செய்வதோடு அபராதமும் செலுத்த வேண்டும்.

மேலும் படிக்க: Flight Ticket Offer: வெறும் ரூ1499-ல் விமான பயணம், முந்துங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News