17 வருடம் கழித்து, உலக அழகியான இந்திய பெண்!!

இந்த ஆண்டுக்கான 67-வது உலக அழகி போட்டி சீனாவில் உள்ள சான்யா நகரில் நடைபெற்றது. இந்த போட்டியின் இங்கிலாந்து, பிரான்ஸ், கென்யா, மெக்சிகோ, இந்தியா ஆகிய நாடுகளை சேர்ந்த 5 பெண்கள் இறுதிச் சுற்றில் இடம் பெற்றிருந்தனர்.

Last Updated : Nov 19, 2017, 08:43 AM IST
17 வருடம் கழித்து, உலக அழகியான இந்திய பெண்!!  title=

இந்த ஆண்டுக்கான 67-வது உலக அழகி போட்டி சீனாவில் உள்ள சான்யா நகரில் நடைபெற்றது. இந்த போட்டியின் இங்கிலாந்து, பிரான்ஸ், கென்யா, மெக்சிகோ, இந்தியா ஆகிய நாடுகளை சேர்ந்த 5 பெண்கள் இறுதிச் சுற்றில் இடம் பெற்றிருந்தனர்.

அதில்இறுதிச் சுற்றில் இந்தியாவை சேர்ந்த மனுஷி சில்லார் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டு, வெற்றி மகுடத்தை தட்டிச் சென்றார். 

மனுஷி சில்லார் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர். அவர் இந்த ஆண்டுக்கான இந்திய அழகியா தேர்வானார். தற்போது அவர் மருத்துவம் பயின்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2000-ம் ஆண்டு இந்தியாவை சேர்ந்த பிரியங்கா சோப்ரா உலக அழகியாக தேர்வானார். 17 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியாவை சேர்ந்த மனுஷி சில்லார் உலக அழகியாக தேர்வாகி இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

Trending News