தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை வாய்ப்பு - முழு விவரம்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Written by - க. விக்ரம் | Last Updated : Jul 1, 2022, 05:13 PM IST
  • தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை வாய்ப்பு
  • 8ஆம் வகுப்பு படித்தவர்களுக்கும் வாய்ப்பு
 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை வாய்ப்பு - முழு விவரம் title=

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் (TNCSC) தற்போது ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Assistant, Record Clerk & Security பணிகளுக்கு என்று மொத்தமாக 527 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

TNCSC காலிப் பணியிட விவரம்:

 Assistant, Record Clerk & Security பணிகளுக்கு என்று மொத்தமாக 527 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதாவது,

Assistant – 189
Security – 179
Record Clerk – 159 என்ற விகிதத்தில் ஒதுக்கப்பட்டுள்ளன.

கல்வித் தகுதி:

Record Clerk பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் / பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையங்களில் Agriculture and Engineering பாடப்பிரிவில் B.Sc டிகிரி கட்டாயம் முடித்திருக்க வேண்டும்.

Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் 12ம் வகுப்பு கட்டாயம் முடித்திருக்க வேண்டும்.

Security பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் எட்டாம் வகுப்பு கட்டாயம் முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

01.07.2022 தினத்தின்படி, விண்ணப்பதாரர்களுக்கு 32 வயது அதிகபட்ச வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 32 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

 BC / BC (M) / MBC விண்ணப்பதாரர்களுக்கு 2 ஆண்டு மற்றும் SC / SC (A) / ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டு என வயது தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

TNCSC ஊதிய விவரம்:

தேர்வாகும் பணியாளர்களுக்கு தேர்வு செய்யப்படும் பணி மற்றும் பதவிக்கு ஏற்றாற்போல் Record Clerk பணிக்கு ரூ.8,784/- ஊதியம் என்றும், Assistant மற்றும் Security பணிக்கு ரூ.8,717/- ஊதியம் என்றும் மாத ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிகளுக்கு என்று விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் தகுதி மற்றும் திறமை வாய்ந்த பணியாளர்கள் நேரடியாக நேர்முகத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தமிழக சிவில் சப்லைஸ் கார்ப்பரேஷன் பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://www.tncsc.tn.gov.in/ என்ற இணைப்பில் இருக்கும் விண்ணப்பங்களை தயார் செய்து, 08.07.2022ஆம் தேதி மாலை 5.00 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News