கண் இமைக்கும் நேரத்தில் பணக்காரர்களாகும் அதிர்ஷ்டக்கார ராசிகள் இவைதான்

Personality by Zodiac Sign: ஜோதிட சாஸ்திரத்தின் படி, எந்த ராசிக்காரர்கள் மிக விரைவில் பணக்காரர்களாக மாறுகிறார்கள் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.  

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 14, 2022, 05:29 PM IST
  • விரைவில் செல்வந்தர்களாக மாறும் ராசிகளில் முதன்மையானது ரிஷபம்.
  • கடின உழைப்பால் மிக விரைவில் பணக்காரர்களாக மாறுவார்கள்.
  • கடக ராசிக்காரர்கள் தங்கள் குடும்பத்தை மகிழ்ச்சியாக வைத்திருக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வார்கள்.
கண் இமைக்கும் நேரத்தில் பணக்காரர்களாகும் அதிர்ஷ்டக்கார ராசிகள் இவைதான் title=

பணக்கார ராசிக்காரர்கள்: பணக்காரர் ஆவது எந்த ஒரு குறிப்பிட்ட ராசிக்காரருக்கும் உரித்தான உரிமை இல்லை. கடினமாக உழைத்து இலக்கை நோக்கி பயணிக்கும் அனைவரும் பணக்காரர்களாகிறார்கள். 

இருந்தாலும் சில ராசிக்காரர்களுக்கு அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். மன உறுதியின் காரணமாக, இவர்கள் மிகுந்த கடின உழைப்பால் மிக விரைவில் பணக்காரர்களாக மாறுகிறார்கள். ஜோதிட சாஸ்திரத்தின் படி, எந்த ராசிக்காரர்கள் மிக விரைவில் பணக்காரர்களாக மாறுகிறார்கள் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

ரிஷபம்
விரைவில் செல்வந்தர்களாக மாறும் ராசிகளில் முதன்மையானது ரிஷபம். ஜோதிட சாஸ்திரப்படி ரிஷபம் சுக்கிரனால் ஆளப்படுகிறது. சுக்ர கிரகம் செல்வத்தின் காரணியாக கருதப்படுகிறது. இந்த ராசியை சேர்ந்தவர்கள், பணம் சம்பாதிப்பதற்காக மிகவும் கடினமாக உழைக்கிறார்கள். இந்த ராசியை சேர்ந்தவர்கள் விரைவில் செல்வந்தர்களாக மாற இதுவே காரணம்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு பொருள் வசதிகள் மீது பற்று அதிகமாக இருக்கும். புதிய கார், ஆடம்பரமான வீடு மற்றும் அபரிமிதமான செல்வம் அவர்களை மிகவும் ஈர்க்கும் விஷயங்களாக உள்ளன. இந்த ராசிக்காரர்கள் தங்கள் ஆசைகளை நிறைவேற்ற கடுமையாக உழைக்கிறார்கள். பெரும்பாலும் இந்த ராசிக்காரர்கள் தங்கள் கடின உழைப்பால் மிக விரைவில் பணக்காரர்களாக மாறுவார்கள்.

மேலும் படிக்க | ராகு பெயர்ச்சி 2022: ராகுவின் தாக்கத்தில் இருந்து விடுபட சில பரிகாரங்கள் 

கடகம்
இந்த ராசிக்காரர்கள் எப்பொழுதும் வாய்ப்புகளை எதிர்பார்த்துக் கொண்டே இருப்பார்கள். பண விஷயத்திலும் கடக ராசிக்காரர்கள் மற்றவர்களை விட முந்திச்செல்கிறார்கள்.

கடக ராசிக்காரர்கள் தங்கள் குடும்பத்தை மகிழ்ச்சியாக வைத்திருக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வார்கள். மேலும், அனைத்து வேலைகளிலும் மிகவும் கடினமாக உழைக்கிறார்கள். இதனால் அவர்கள் மிக விரைவில் பணக்காரர்களாகிறார்கள்.

சிம்மம்
ஜோதிட சாஸ்திரப்படி, இந்த ராசிக்காரர்கள் கூட்டத்துடன் கூட்டமாக போவதை விரும்ப மாட்டார்கள். சிம்ம ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பணத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதே சமயம் தங்கள் ஆசையை நிறைவேற்ற இரவு பகலாக உழைக்கிறார்கள். இந்த ராசிக்காரர்கள் கடின உழைப்பால் அதிக பணம் சம்பாதிப்பார்கள்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சூரியனின் ராசி மாற்றம்: சில ராசிகளுக்கு அமோக லாபம், சிலருக்கு அதிருப்தி 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News