30 ஆண்டுகளுக்குப் பிறகு கும்ப ராசியில் சனி பெயர்ச்சி, இவர்களுக்கு ராஜயோகம்

சனி பகவானின் முக்கிய அதிசார பெயர்ச்சியும் அதைத் தொடர்ந்து வக்ர பெயர்ச்சியும் ஏப்ரல் மாதம் இறுதிக்கு தொடங்கி ஜூலை மாதம் வரை நிகழ உள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 19, 2022, 12:55 PM IST
  • 5 ஜூன் 2022 அன்று வரை சனி பகவான் வக்ர பெயர்ச்சி
  • 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்
  • சனி பகவான் கும்ப ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார்
30 ஆண்டுகளுக்குப் பிறகு கும்ப ராசியில் சனி பெயர்ச்சி, இவர்களுக்கு ராஜயோகம் title=

ஏழரை சனி காலம் என்றாலே எல்லோருக்கும் பயம்தான். இப்போது தனுசு, மகரம், கும்பம் ராசிக்கு ஏழரை சனி நடைபெறுகிறது. இன்னும் சில மாதங்களில் தனுசு ராசிக்கு ஏழரை சனி முடிகிறது மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலம் தொடங்குகிறது. சனிபகவான் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டு காலம் பயணம் செய்வார். ராசிக்கு 12ஆம் வீடு, ஜென்ம ராசி, இரண்டாம் வீடுகளில் சனிபகவான் கோச்சார ரீதியாக அமரும் காலங்கள் ஏழரை சனி.

அதன்படி சனி பகவானின் முக்கிய அதிசார பெயர்ச்சியும் அதைத் தொடர்ந்து வக்ர பெயர்ச்சியும் ஏப்ரல் மாதம் இறுதிக்கு தொடங்கி ஜூலை மாதம் வரை நிகழ உள்ளது. 29 ஏப்ரல் 2022 அன்று சனி பகவான் மகரத்திலிருந்து, கும்ப ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார். பின்னர் 5 ஜூன் 2022 அன்று வரை சனி பகவான் வக்ர பெயர்ச்சியாக கும்பத்தில் இருப்பார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி கும்ப ராசிக்கு வருவதால் 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டங்கள் கைகொடுக்கும்.

மேலும் படிக்க | இந்த 5 ராசிக்காரர்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும் 

மேஷம்: மேஷ ராசிக்காரர்களின் பொருளாதார நிலை சிறப்பாக மேம்படும். இவர்களுக்கு அலுவலகத்தில் பாராட்டுக்கள் குவியும். புதிய வாய்ப்புகள் வீடு தேடி வந்து கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும் அதனால் எதிர்பாரத பண வரவு உண்டாகும். பணியிடத்தில் உங்களுக்கு நல்ல அனுபவம் கிடைக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபம் தரக்கூடிய அமோக வெற்றி கிடைக்கும். அத்துடன் பெரிய அளவில் ஜாக்பாட் அடிக்கும்.

ரிஷபம்: சனியின் வக்ர பெயர்ச்சியானது ரிஷப ராசிக்காரர்களின் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். வெற்றி தரக்கூடிய அதிர்ஷ்டம் அமையும். தொழிலில் புதிய வாய்ப்புகள் உங்கள் வாழ்க்கையை முன்னேற்றம் தரும் அளவிற்கான பலன்கள் கிடைக்கும். இந்த காலத்தில் நீங்கள் முயலக்கூடிய எந்த ஒரு தடைப்பட்ட வேலையும் சிறப்பாக நடந்து முடியும். 

சிம்மம்: இந்த சனி பெயர்ச்சி மிகவும் மங்களகரமானதாக இருக்கும். கடின உழைப்புக்கு அதற்கான முழு பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களுக்கு அமையும். உத்தியோகஸ்தர்களின் கடின உழைப்பை மேலதிகாரிகள் அலட்சியப்படுத்துவதாக இருந்தாலும், பணியிடத்தில் மேன்மை தருவதான அற்புத பலன்கள் தொடர்ந்து கிடைக்கும்.

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர பெயர்ச்சி சாதகமான பலன்கள் தருவதாக இருக்கும். குறிப்பாக போட்டித் தேர்வுகளுக்காக முயன்று வரக்கூடிய இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பதோடு, வெற்றியும் நிச்சயம் கிடைக்கும். உங்களின் நிதி நிலைமை மேம்படும். திடீர் பண வரவு, பண ஆதாயம் கிடைக்கும்.

​துலாம்: மாணவர்களுக்கு கல்வி மேம்பாடு இருக்கும். உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் அமைவதோடு, இலக்கை சிறப்பாக அடைய வாய்ப்புள்ளது. தொழில் முன்னேற்றம் ஏற்படும். உங்களுக்கு புதிய நல்ல ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

மேலும் படிக்க | பிப்ரவரி 19 முதல் இந்த ராசிக்காரர்களுக்கு பிரச்சனை: 30 நாட்களுக்கு இக்கட்டான நிலை 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News