பிறரின் பரம ரகசியங்களை அறிந்து கொள்வதில் இவர்கள் கில்லாடி! ஜாக்கிரதை

பிறரின் பரம ரகசியங்களை இவர்கள் அறிந்து கொள்வதில் கில்லாடிகளாக இருப்பவர்களை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்  

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 29, 2022, 02:39 PM IST
பிறரின் பரம ரகசியங்களை அறிந்து கொள்வதில் இவர்கள் கில்லாடி! ஜாக்கிரதை title=

ஒவ்வொருவருக்கும் பரம ரகசியங்கள் என பல இருக்கும். அதனை தெரிந்து கொள்வதில் எப்போதும் பிற மனிதர்களுக்கு ஆர்வம் இருக்கும். ஆனால் எல்லோராலும் பிறரின் ரகசியங்களை தெரிந்து கொள்ள முடியாது என்றாலும், ஒரு சிலர் அந்த விஷயத்தில் கில்லாடிகளாக இருப்பார்கள். அப்படி கில்லாடிகளாக இருப்பவர்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?  

மிதுனம்

இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் ஒருவருடன் உரையாடும்போது பிறரின் விவரங்களைப் சாமார்த்தியமாக பெற்றுவிடுவார்கள். அவர்களுக்கு அந்த வித்தை தெரியும். சரியான கேள்விகளை எப்படிக் கேட்பது என்பது அவர்களுக்குத் தெரியும். மிதுன ராசிக்காரர்கள் மர்மம் மற்றும் புதிர்களைத் தீர்ப்பதை விரும்புகிறவர்கள். அதனால் ஒருவரின் ரகசியத்தை அறிந்து கொள்வது இவர்களுக்கு பெரிய விஷயமாக இருக்காது. 

கன்னி

ஒரு விஷயத்தில் எங்கே தவறு நடக்கிறது என்பதில் முன்கூட்டியே யூகிக்கும் திறமை கொண்ட கன்னி ராசிக்காரர்கள், அதற்கான திட்டத்தையும் தயார் நிலையில் வைத்திருப்பார்கள். ஒருவேளை அவர்களுடைய திட்டம் சரியாக வரவில்லை என்றால், எப்படி கையாள வேண்டும் என்பதில் கவனம் செலுத்த தொடங்குவார்கள். இதற்காக அந்த விஷயத்தின் பின்னணி ரகசியங்களை அறிந்துகொள்ள கடும் சிரத்தை எடுப்பார்கள். அதில் அவர்களுக்கு வெற்றியும் கிடைக்கும். 

விருச்சிகம்

மற்றவர்கள் பேசும்போது அல்லது ஒரு உரையாடலில் விருச்சிக ராசிக்ககாரர்கள் இருந்தால் மிகவும் அமைதியாக இருப்பார்கள். அந்த நேரத்தில் இவர்களை குறைத்து மதிப்பிட்டுவிடக்கூடாது. ஒரு தேள் மக்களை கவனிப்பதை போல் கவனித்து, ஒருவரைபற்றி நன்கு பகுப்பாய்வு செய்து வைத்திருப்பார்கள். இதன் மூலம் அவர்களின் எண்ண ஓட்டத்தையும், பின்னணியும் புரிந்து கொள்ளக்கூடிய திறமை இவர்களிடத்தில் இருக்கிறது.  

மேலும் படிக்க | நிலை மாறுகிறார் சுக்கிரன்: இந்த ராசிகளுக்கு சுக்கிர தசை, பணியிடத்தில் முன்னேற்றம் 

தனுசு

மிக எளிதாக மக்களுடன் பழகும் திறன் கொண்டவர்கள் தனுசு ராசிக்காரர்கள். இதன் மூலம் ஒருவரின் ரகசியத்தை எளிதாக தெரிந்து கொள்ளும் அவர்கள், தகவல்களை பிரித்து எடுத்து அதனை கையாளுவதில் கைதேர்ந்தவர்கள். 

மகரம்

ஒழுக்கம் மற்றும் கொள்கையின்படி செயல்படும் மகர ராசிக்காரர்கள், எந்தவொரு விஷயத்திலும் விடா முயற்சியை கைவிட மாட்டார்கள். நடந்த விஷயத்தில் எங்கே தவறு நடந்தது என்பதை கண்டுபிடிக்கும் வரை ஓயமாட்டார்கள். மூலப்பிரச்சனையை கண்டறிந்து, அதனை தந்திரமாக முடித்துவிடுவார்கள். துப்பறியும் திறன் எப்போதும் இவர்களிடம் மிக அதிகமாக இருக்கும்.

மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், கும்பம் மற்றும் மீனம் ஆகியவை மேற்கூறிய ராசிக்கார ர்களுடன் ஒப்பிடும்போது, துப்பறிவதில் கொஞ்சம் சுணக்கம் கொண்டவர்கள்.

மேலும் படிக்க | நவம்பரில் 5 கிரகங்களின் ராசி மாற்றம், இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News