அழகுக்கும் ஈர்ப்புக்கும் புகழ் பெறுவதற்கும் காரணம் சுக்கிரன்: சுக்கிர பலம் பெற வழி இதுதான்

ஜோதிட சாஸ்திரத்தின்படி, அழகுக்கும் பிரபலத்துக்கும், பிறரை ஈர்ப்பதற்கும் உண்டான அருளை வழங்குபவர் சுக்கிர பகவான்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 26, 2022, 08:34 PM IST
  • அழகுக்கும் பிரபலத்துக்கும், பிறரை ஈர்ப்பதற்கும் அருளை வழங்குபவர் சுக்கிர பகவான்
  • சுக்கிரனின் பலம் நன்றாக இருந்தால் வாழ்வில் வளம் பெருகும்
  • ஆடம்பரமான வாழ்வுக்கு காரணம் சுக்கிரனின் ஆசி
அழகுக்கும் ஈர்ப்புக்கும் புகழ் பெறுவதற்கும் காரணம் சுக்கிரன்: சுக்கிர பலம் பெற வழி இதுதான் title=

புதுடெல்லி: கவர்ச்சியான ஆளுமை மற்றவர்களிடமிருந்து ஒருவரை வேறுபடுத்துகிறது, முதல் சந்திப்பிலேயே பிறரின் அன்பை பெறுபவர்கள் சிலர் தான்.

கவர்ச்சிகரமான ஆளுமை கொண்டவர்களுக்கு மட்டும் என்ன நம்மை விட அதிக தகுதி இருக்கிறது? இந்த கேள்வி பலருக்கு எழும். அதற்கு காரணம் சுக்கிரனின் அருள் அவர்களுக்கு பூரணமாக இருக்கும்.

ஜோதிட சாஸ்திரத்தின்படி, அழகுக்கும் பிரபலத்துக்கும், பிறரை ஈர்ப்பதற்கும் உண்டான அருளை வழங்குபவர் சுக்கிர பகவான். அதுமட்டுமல்ல, செல்வத்துக்கும் காரகர் சுக்கிரனே.

மேலும் படிக்க | என்றென்றும் செல்வ செழிப்புடன் திகழ செய்ய வேண்டிய வெள்ளிக்கிழமை பரிகாரங்கள்

வாழ்க்கைத் தரம், ஆடம்பரமான வாழ்க்கை என சொகுசுக்கும் ஆடம்பரத்துக்கும் அருள் புரியும் சுக்கிரன் ஒருவரின் ஜாதகத்தில் நீச்சமாகவும் இருப்பார்.

ஜோதிட சாஸ்திரத்தின்படி, சுக்கிர பகவான் சுபமான யோககாரகன் என்று அழைக்கப்படுகிறார். உலக வாழ்வில், உள்ள நிம்மதிக்கும் சந்தோஷங்களுக்கும் அதிபதி அவரே.

குறிப்பாக மகிழ்ச்சியான மணவாழ்க்கை, குழந்தைப்பேறு அளிப்பவர் சுக்கிரன். கணவன் மனைவிக்கு இடையில் அடிப்படையான தாம்பத்ய வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதும் சுக்கிரனின் ஆசியால் தான்.

சுக்கிரன் ஜாதகத்தில் இக்கட்டான இடத்தில் அமர்ந்து இக்கட்டு செய்தால், சிரமமான காலமாக இருக்கும். செல்வம் இருந்தாலும் அனுபவிக்க முடியாது. அழகாய் இருந்தாலும் யாரும் அதை  பொருட்படுத்த மாட்டார்கள். வாகனங்கள் வசதி இருந்தாலும் அது பெரிய சுகத்தைக் கொடுக்காது.

மேலும் படிக்க | சுக்ரனின் ராசி பரிவர்த்தனையால் அமோகமாய் அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள்

எல்லாம் இருந்துமே எதுவும் இல்லாமல் இருந்தால் எப்படி என்ற கேள்வி வருகிறதா? அதற்கு சில உபாயங்கள் இருக்கின்றன.

சுக்கிர யோகம் இருந்தால் ஒருவருக்கு சுகபோக வாழ்வு அமையும். சுக்கிர பகவானை வெள்ளிக்கிழமையில் பிரார்த்தனை செய்தால் அவருடைய அருள் அபாரமாய் கிடைக்கும்.

பசுவுக்கு உணவு வழங்குவது நல்ல பலனைக் கொடுக்கும். வெள்ளிக்கிழமைகளில் வெள்ளை பசுவுக்கு உணவளிப்பதால் சுக்கிர பகவானின் அருள் பரிபூரணமாய் கிடைக்கும். பசுவுக்கு உணவளித்து வருவது சுக்கிரனுக்கு மனம் குளிரச் செய்து ஜாதகத்தில் சுக்கிரனின் பலம் அதிகரிக்கத் தொடங்கும்.

அதேபோல, ராசியில் சுக்கிரனின் சஞ்சாரம் சரியாக இல்லையென்றாலும், சுக்கிரன் பாவ கிரகங்களோடு சேர்ந்து இருந்தாலும், பாவ கிரகங்களின் பார்வை பட்டாலும் ஏற்படும் அசுப பலன்களை சீர்செய்ய, சுக்கிரனுக்கு கிரக சாந்தி செய்யலாம். இதற்கு ‘சுக்கிர சாந்தி’ என்று பெயர்.

இந்த சாந்தியை செய்தால் வாழ்வில் எல்லா வளமும் கிடைத்து, சாந்தமான வாழ்வை வாழலாம்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | 2022-ல் 2 முறை ராசி மாறுகிறார் சனிபகவான்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News