ஆணுறுப்பில் சிலிக்கான் காகிதம்; ஆஸி., இளைஞர் விபரீத முடிவு!

ஆஸ்திரேலியான் இளைஞர் ஒருவர், மற்றவர்களிடன் இருந்து தான் வித்தியாசமாக தெரியவேண்டும் என தனது ஆணுறுப்பில் சிலிக்கான் காதிதத்தினை செலுத்த முயற்சித்து வருகின்றார்!

Last Updated : Dec 11, 2018, 05:05 PM IST
ஆணுறுப்பில் சிலிக்கான் காகிதம்; ஆஸி., இளைஞர் விபரீத முடிவு! title=

ஆஸ்திரேலியான் இளைஞர் ஒருவர், மற்றவர்களிடன் இருந்து தான் வித்தியாசமாக தெரியவேண்டும் என தனது ஆணுறுப்பில் சிலிக்கான் காதிதத்தினை செலுத்த முயற்சித்து வருகின்றார்!

ஆஸ்திரேலியானவின் மெல்பர்ன் நகரை சேர்ந்தவர் ஈதன் ப்ராம்பள் (வயது 22). சிறுவயது முதலே தனது உடலினை மற்றவர்களின் தோற்றத்தோடு வேறுப்படுத்தி காட்ட விரும்பியவர். இதன் காரணமாக தனது 11-வது வயதில் இருந்து உடலில் டேட்டோ, அறுவை சிகிச்சை மேற்கொள்ளுதல், நாக்கை இரண்டாக வெட்டிக்கொள்ளுதல், தொப்புள் கொடி அகற்றல் என 40-க்கு மேற்பட்ட செயல்முறைகளை மேற்கொண்டுள்ளார்.

தனது உடம்பில் எத்தனை டேட்டோக்கள் உள்ளது என இவருக்கு தெளிவாக தெரியவில்லை, எனினும் இவரது 80% உடல் பகுதி டேட்டோவினாலா மறைக்கப்பட்டுள்ளது. இந்த கலைக்காக இவர் இதுவரை $15,000-லிருந்து $20,000 வரை செலவழித்திருப்பதாக தெரிகிறது.

இதில் தனது கருவிழியில் போட்டுக்கொண்ட டேட்டோவிற்கே அதிகமாக செலவு செய்துள்ளார். கண்ணின் கருவிழியில் டேட்டோ என்பது எளிதான காரியம் இல்லை, காரணம் சற்று தவறினால் கண் நிரந்தர குருடாக மாற வாய்ப்புள்ளது. 

இந்த நாகரீக மாற்றத்திற்கான படியில் அடுத்தப்படியாக இவர் தனது ஆணுறுப்பில் சிலிக்கான் காகிதத்தினை செலுத்த உள்ளதாக தெரிவிக்கின்றார். ஆணுறுப்பில் சிலிக்கான் காகிதம் செலுத்துவது எளிதாக காரியம் அல்ல, சிலிக்கான் பேப்பரை செலுத்திக்கொள்வோருக்கு மட்டும் அல்லாமல், அவருடன் வாழ்பவருக்கும் அது பிரச்சணையாக அமைய கூடும். 

இதன் காரணமாகவே ஈதன் ப்ராம்பளின் காதலி இவரை பிரிந்து சென்றுள்ளார். ஆரம்பத்தில் ஈதனின் கலை உணர்விற்கு ஆதரவு அளித்த அவரது காதலி பின்னாநாளில் இவரது ஆர்வத்தினை தாங்கிக்கொள்ள முடியாமல் விட்டுச்சென்றுள்ளார்.

எனினும் ப்ராம்பளின் இதுகுறித்து கவலைப்பட்டதில்லை, காரணம் தனது உடலில் இருக்கும் மாற்றங்கள் தன்னை வேமறுப்படுத்தி காட்டுவது மட்டுமல்லாமல், தனது கலை ஆர்வத்தினையும் உணர்த்துகிறது. இதனை யாரும் எளிதில் புரிந்துக்கொள்வதில், ஆனால் புரிந்துக்கொண்டால் அவர்களிடன் தனக்கு கிடைக்கும் மரியாதை அளவற்றது. அந்த மகிழ்ச்சி தனக்கு போதும் என வாழ்ந்து வருகின்றார் ஈதன்.

Trending News