இதற்காகத்தான் நிர்வாணமாக நடித்தேன் - பவி டீச்சர் ஓபன் டாக்

இரவின் நிழல் படத்தில் நிர்வாணமாக நடித்தது குறித்து நடிகை பிரகிடா விளக்கமளித்துள்ளார்.  

Written by - க. விக்ரம் | Last Updated : Jul 15, 2022, 03:58 PM IST
  • இரவின் நிழல் படம் இன்று வெளியானது
  • படத்தில் பிரகிடா நிர்வாணமாக நடித்திருக்கிறார்
இதற்காகத்தான் நிர்வாணமாக நடித்தேன் - பவி டீச்சர் ஓபன் டாக் title=

கோலிவுட்டில் எப்போதும் வித்தியாசமான முறையில் படம் எடுப்பவர் பார்த்திபன். எவ்வளவு தோல்விகளை சந்தித்தாலும் தனது பரிசோதனை முயற்சியை மட்டும் அவர் கைவிட்டதே இல்லை.

கதையே இல்லாமல் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் படத்தை எடுத்து கவனம் ஈர்த்த அவர் அடுத்ததாக ஒரே ஒரு கதாபாத்திரத்தை மட்டும் வைத்து ஒத்த செருப்பு படத்தை இயக்கி அனைவருக்கும் புருவம் உயர செய்தார்.

இதனைத் தொடர்ந்து தற்போது அவர் இரவின் நிழல் படத்தை இயக்கியிருக்கிறார். சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

Parthiban

பார்த்திபன், ஆஹா கல்யாணம் சீரிஸில் பவி டீச்சர் கதாபாத்திரம் மூலம் பிரபலமான பிரகிடா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இன்று வெளியான இப்படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துவருகின்றன. அதேசமயம், சிங்கிள் ஷாட்டில் படத்தை எடுத்த பார்த்திபனுக்கு பலரும் தங்களது பாராட்டை தெரிவித்துவருகின்றனர்.

மேலும் படிக்க | சீரியல் டூ சினிமா; கதாநாயகிகளான விஜய் டிவி பிரபலங்கள்

இந்நிலையில் இரவின் நிழல் படத்தில் எதற்காக நிர்வாணமாக நடித்தேன் என்பது குறித்து அவர் விளக்கமளித்திருக்கிறார். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய அவர், சேலை அணிந்து சென்றால் சரியாக இருக்கிறதா? என பலமுறை சரிசெய்யும் பெண்தான் நான். 

ஆனால், அந்த கதாபாத்திரம் ரொம்ப புனிதமானது. அதற்கு அப்படி ஒரு விஷயம் நடக்கும் போது அந்த கோலத்தில் இருந்தால் தான் சரியாக இருக்கும் என பார்த்திபன் சார் புரியவைத்தார். ஆனால், இதை என் பெற்றோர்களிடம் எப்படி சொல்வது என்பது எனக்கு ஒரு பெரிய நெருடலாக இருந்தது.

Iravin NIzhala

எனது கதாபாத்திரம் பற்றி எல்லாம் எடுத்துக் கூறி விட்டு இப்படி ஒரு சீனும் இருக்கு. அது இருந்தால் தான் அந்த கதாபாத்திரத்திற்கு வலிமை சேர்க்கும் என்று என் பெற்றோரிடம் எடுத்துக் கூறி இருந்தார் பார்த்திபன். 

மேலும் படிக்க | சிவகார்த்திகேயனா இது? வெளியானது மாவீரன் படத்தின் அறிவிப்பு!

பின் அவர்கள் சம்மதம் தெரிவித்த நிலையில் அந்த காட்சியை எடுத்து முடித்தோம். படத்தில் இந்த காட்சி நிச்சயம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும். கவர்ச்சியாகவே இருக்காது. அங்கே புனித மட்டுமே தெரியும். இந்த படம் எனக்கு இத்தனை சீக்கிரம் கிடைத்தது மிகப்பெரிய வாய்ப்பு” என்றார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News