ரத்னா கேட்ட கேள்வி.. அடிக்க பாய்ந்த ஷண்முகம்.. அண்ணா சீரியல் இன்று நடப்பது என்ன?

Anna Serial Today Episode: இன்றைய எபிசோட்டில் அண்ணா சீரியலில்  என்ன நடக்கப் போகிறது என்பது குறித்து அறிந்துக்கொள்ள இரவு 8:30 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியை பாருங்கள்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 16, 2024, 01:52 PM IST
ரத்னா கேட்ட கேள்வி.. அடிக்க பாய்ந்த ஷண்முகம்.. அண்ணா சீரியல் இன்று நடப்பது என்ன? title=

Zee Tamil TV Serial: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சூடாமணி இசக்கியை பார்க்க ஆசைப்பட வைகுண்டம் அதற்கான ஏற்பாடுகளை செய்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, ஷண்முகம் வைகுண்டத்திடம் எதுக்கு பா இப்படி பண்ண என்று கோபப்பட அவன் சூடாமணி இசக்கியை பார்க்கணும்னு ஆசைப்பட்டா அவளை வீட்டிற்கு கூப்பிட முடியாது, அதனால் தான் கோவிலுக்கு வர சொன்னதாக சொல்ல ரத்னா இதை அரைகுறையாக கேட்டு விடுகிறாள். 

யார் நீங்க? நீங்க எதுக்கு இசக்கியை பார்க்கணும் என்று சூடாமணியை நிற்க வைத்து கேள்வி மேல் கேள்வி கேட்க ஷண்முகம் உட்பட எல்லாரும் அதிர்ச்சி அடைகின்றனர், ஷண்முகம் ரத்னாவை அமைதியாக இருக்க சொல்லியும் அவள் கேட்காமல் சூடாமணியிடம் கோபப்பட ஷண்முகம் அவளை அடிக்க கை ஓங்குகிறான். இதனால் ரத்னா இன்னும் கோபமாகிறாள். 

இதுவரைக்கும் எங்க அண்ணன் எங்களை அடிச்சது கிடையாது, ஆனால் இப்போ என் அண்ணனே என்னை அடிக்க கை ஓங்கிருச்சி.. இதுக்கு நீங்க தான் காரணம், நீங்க வந்த ரெண்டாவது நாளே இப்படி ஆகிருச்சு என்று கோபப்படுகிறாள். இதனால் சூடாமணி ரத்னா பாவம் பா, புள்ளைங்க யாரும் சாப்பிடல.. நான் கூட இந்த வீட்டை போயிடுறேன் என்று சொல்ல ஷண்முகம் அவங்க உங்களை பத்தி தெரியாமல் பேசுறாங்க என்று ஆறுதல் சொல்கிறான். 

அதன் பிறகு தங்கைகளை சமாதானப்படுத்தி அவர்களை சாப்பிட வைக்க அதை பார்த்த சூடாமணி நீ ஒரு அண்ணன் மட்டுமில்ல அம்மாவாகவும் இருக்க என்று சந்தோசப்படுகிறாள். அடுத்து கோவிலுக்கு நாங்களும் வரோம் என்று சௌந்தரபாண்டி மற்றும் முத்துப்பாண்டி சொல்ல இந்த விஷயம் சண்முகத்துக்கு தெரிய வர அவன் ஷாக் ஆகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க - நினைத்தேன் வந்தாய் சீரியல்: கையும் களவுமாக சிக்கிய செல்வி.. டிராமா போட்ட மனோகரி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News