அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்: விபூதி அடித்து சத்தியம் செய்த ஷண்முகம்.. அடுத்தது என்ன?

Anna TV Serial Today (31.7.2024) Episode: இன்றைய அண்ணா சீரியல் எபிசோட்டில் அடுத்து என்ன நடக்க போவது என்பது குறித்து அறிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 5, 2024, 01:23 PM IST
அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்: விபூதி அடித்து சத்தியம் செய்த ஷண்முகம்.. அடுத்தது என்ன?  title=

Tamil Serial Anna Latest Episode: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டியால் சண்முகத்தின் அம்மா சூடாமணி தான் என்பது அனைவர்க்கும் தெரிய வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, சூடாமணி கோவில் நகையை திருடியவள் என்று அவள் மீது பழியை போட சண்முகமும் அவனது தங்கைகளும் எங்க அம்மா உத்தமி, அதை நான் நிரூபித்து காட்டுறேன் என்று சவால் விடுகிறான் ஷண்முகம்.

மேலும் சௌந்தரபாண்டி தான் குற்றவாளி என்று சொல்ல அவர் எதுக்கு என் மேல பழி சுமத்துறீங்க என்று கேட்க சூடாமணி நீ தான் எல்லா தப்பையும் பன்னேனு நிரூபித்து ஜெயிலுக்கு அனுப்புவோம். அப்படி நிரூபிக்க முடியலைன்னா நான் தூக்குளித்து செய்து போய்டுவேன் என்று சபதம் எடுக்கிறாள் சூடாமணி.

சௌந்தரபாண்டியால் நடந்த கலவரத்தால் அவரது திட்டத்தின் படி இந்த நிச்சயம் நடக்காமல் போகிறது, வீட்டிற்கு வந்ததும் சூடாமணி நிச்சயம் நின்றதை நினைத்து வருத்தப்பட ரத்னா என் நிச்சயமா முக்கியம், உன்னை அப்படி பேசிடங்களே என்று வருத்தப்படுகிறாள்.

ஷண்முகம் நீ உத்தமினு இந்த ஊர் முன்னாடி நிரூபித்து காட்டுவேன் என்று விபூதி தட்டில் அடித்து முருகன் மீது சத்தியம் செய்கிறான். அடுத்து வெங்கடேஷ் வீட்டிற்கு வந்து நடந்த விஷயத்துக்காக மன்னிப்பு கேட்கிறான். ஆனால் ரத்னா அவனது மன்னிப்பை ஏற்க மறுக்கிறாள்.

நிச்சயதார்த்த மேடையில் எதுவும் பேசாமல் வேடிக்கை பார்த்திட்டு இப்போ எதுக்கு வந்த என்று ஆவேசப்படுகிறாள். வெங்கடேஷ் அவளை சமாதானம் செய்ய முயற்சி செய்கிறாள். ஆனால் சமாதானம் ஆகாத ரத்னா எனக்கு இந்த கல்யாணமே வேண்டாம் எனவும் இந்த கல்யாணத்த பத்தி வீட்டில் யாரும் பேச கூடாது எனவும் சொல்லி விட ஷண்முகம் என்ன செய்வது என்று தெரியாமல் நிற்கிறான்.

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க - போலீசை வைத்து பதற விட்ட ஆதி.. துரைக்கு நடந்தது என்ன? இதயம் சீரியல் இன்றைய அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News