அருள்நிதிதான் காரணம்! விக்ரம் பட இயக்குனரின் பேச்சு!

அருள்நிதி நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற 'டிமான்டி காலனி' படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது.  

Written by - RK Spark | Last Updated : May 23, 2022, 04:00 PM IST
  • விரைவில் உருவாகப்போகும் டிமான்டி காலனி பார்ட்-2.
  • அருள்நிதி கதாநாயகனாக நடிக்கிறார்.
  • அஜய் ஞானமுத்து உதவி இயக்குனர் இப்படத்தை இயக்குகிறார்.
அருள்நிதிதான் காரணம்! விக்ரம் பட இயக்குனரின் பேச்சு! title=

கடந்த 2015ம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் வெளியான ஹாரர் படமான டிமான்டி காலனி ரசிகர்கள் மத்தியில் அதிகளவு வரவேற்பை பெற்றது, இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டை பெற்றது.  இப்படத்தில் ரமேஷ் திலக், சனந்த்,எம்.எஸ்.பாஸ்கர், சிங்கம்புலி, அபிஷேக் ஜோசப் ஜார்ஜ் போன்றோர் நடித்திருந்தனர்.  ஏழு வருடங்களுக்கு பிறகு தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தினை உருவாக்க இயக்குனர் அஜய் ஞானமுத்து திட்டமிட்டுள்ளார்.  இதில் அருள்நிதி தான் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கப்போகிறார், மேலும் இப்படத்தை அஜய் ஞானமுத்துவின் இணை இயக்குனரான வெங்கி வேணுகோபால் இயக்கவுள்ளார்.

demontecolony

மேலும் படிக்க | மீண்டும் விஜய்யுடன் இணைவதை உறுதிப்படுத்திய யுவன் ஷங்கர் ராஜா!

இப்படத்திற்கு கதை எழுதுவது மட்டுமின்றி தயாரிக்க போகும் இயக்குனர் அஜய் கூறுகையில், இந்த படத்தை நான்தான் தயாரிக்க வேண்டும் என்று அருள்நிதி விரும்பினார், டிமாண்டி காலனி படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டம் தீட்டி வந்தோம், என்னுடைய இயக்குனர் பணியை தொடங்கி வைத்ததே அருள்நிதி தான்.  அதனால் அவருக்காக அடுத்து உருவாக்கப்போகும் படத்தை மிக பிரம்மாண்டமாக அமைக்க வேண்டும் என்று எண்ணினேன்.  பின்னர் அவரிடம் கதையை சொன்னேன், அவருக்கு மிகவும் பிடித்துப்போய்விட்டது, இது மிகவும் அருமையான, தனித்துவமான கதையாக இருக்கிறது என்று கூறியதாக தெரிவித்தார்.

demontecolony

மேலும் பேசியவர், கோப்ரா படத்தின் மூலம் வெங்கி என்னுடன் கிட்டத்தட்ட 4 வருடங்களாக பணியாற்றி வந்தார்.  அதுமட்டுமல்லாது அவர் பல பெரிய இயக்குநர்களோடும் பணிபுரிந்துள்ளார், தமிழில் ராஜேஷ் சார், மலையாளத்தில் அன்வர் ரஷீத் சார் ஆகியோருடன் அவர் பணியாற்றியுள்ளார்.  அதனால் அவர் இந்த படத்தை இயக்க பொருத்தமாக இருப்பார் என்று நான் கருதினேன்.  மேலும் கடந்த 6 மாதங்களாக இப்படத்திற்கான கதையை தேடிக்கொண்டு இருந்தேன், தற்போது தான் இதன் முழு கதையை உருவாக்கினேன்.  ஜூலை மாத இறுதியில் இப்படத்தின் பணிகள் தொடங்கப்படும்.  மேலும் இந்த படம் முதல் பாகத்தின் தொடர்ச்சியாகத்தான் இருக்கும், அதில் நடித்த பெரும்பான்மையான நடிகர்கள் இதில் நிச்சயம் இருப்பார்கள்.  இருப்பினும் கூடுதலாக சில நடிகர்களும் இடம்பெறுவார்கள் என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க | ஏகே62 அரசியல் படமா? உண்மை பின்னணி என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News