இனி ஒரே வீட்டில் பாக்யா, ராதிகா..பாக்கியலட்சுமியில் டுவிஸ்ட்

இந்த வாரம் பாக்கியலட்சுமி சீரியலில் நடக்கவிருக்கும் நிகழ்வுகள் குறித்து ப்ரோமோ இன்று வெளியாகியுள்ளது. அதில், ராதிகாவின் அம்மா கொடுத்த அட்வைஸ் காரணமாக ராதிகா பையை தூக்கிக்கொண்டு கோபி இருக்கும் வீட்டுக்கே சென்றுவிடுகிறார்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 17, 2023, 02:29 PM IST
  • பாக்கியலட்சுமி சீரியலில் புதிய டுவிஸ்ட்.
  • பெண்களுக்கு ஊக்கம் கொடுக்கும் பாக்கியலட்சுமி சீரியல்.
  • ராதிகாவின் அம்மா கொடுத்த அட்வைஸ்.
இனி ஒரே வீட்டில் பாக்யா, ராதிகா..பாக்கியலட்சுமியில் டுவிஸ்ட் title=

திரைப்படங்களுக்கு நிகராக சீரியல்களை களமிறங்கி பலரையும் கவர தொடங்கிவிட்டன. அந்த வகையில் தற்போது விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று தான் பாக்கியலட்சுமி. இரவு ஒளிபரப்பாகும் இந்த சீரியலுக்கு இல்லத்தரசிகள் மட்டுமல்ல பல ஆண் மகன்களும் அடிமை என்றே கூறலாம். பாக்கியாவிற்கும், எழிலுக்கும் எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதேபோல கோபிக்கும் ஏரளமான ஆண் ரசிகர்கள் உள்ளனர். 

அதன்படி பெண்களுக்கு ஊக்கம் கொடுக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது நடக்கவிருக்கும் நிகழ்வுகள் குறித்து ப்ரோமோ இன்று வெளியாகியுள்ளது. அதன்படி மகள் தன்னை விட்டு சென்ற துக்கத்தில் குடி போதையில் தடுமாறிய கோபியை செழியன் தனது வீட்டுக்கு அழைத்து வந்த நிலையில், பாக்கியா அமைதியாக வருத்தத்தோடு உட்கார்ந்திருந்தார்.மேலும் கோபி அங்கேயே தங்கி விடுகிறார், அத்துடன் யா கோபியா என சூழ்நிலை வந்தால் நாங்க எல்லோரும் உன் பக்கம்தான் நிற்போம் என்று குடும்பத்தினர் கூறுகிறார்.

மேலும் படிக்க | சமந்தாவுக்கு அதிர்ச்சி கொடுத்த சாகுந்தலம்..மொத்த கலெக்‌ஷனே இவ்வளவுதானா?

இதனிடையே ராதிகா விடியற்காலை வரை தூங்காமல் நடந்து கொண்டே கோபியை எதிர்பார்த்து இருந்த நிலையில், அவருடைய அம்மா வந்து ராதிகாவிற்க்கு ஆறுதல் கூறுகிறார். பிறகு மறுநாள் காலையிலும் ராதிகா கோபியை தேடிக்கொண்டு போன் பண்ணியப்படியே வெளியே வந்து பார்க்க அவருடைய கார் பாக்யாவின் வீட்டின் அருகில் நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைகிறார். உடனே வீட்டிற்க்குள் சென்று ராதிகா தன் அம்மாவிடம் கோபி பாக்யா வீட்டில் இருக்கும் விஷயத்தை சொல்ல, மறுபுறம் செழியன் மற்றும் ஈஸ்வரி கோபியை பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது எழில் இன்னும் அவர வச்சுக்கிட்டு இருக்கீங்க என்று சொல்ல ஈஸ்வரி உடனே இனி கோபி இங்கேதான் இருப்பான் என்கிறார். இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

இதைக் கேட்டு வெளியே வரும் பாக்கியா அப்ப நான் என்ன பண்ணனும் அத்த என்று கேட்கிறார். இன்றைய ப்ரோமோவில், ராதிகாவின் அம்மா கொடுத்த அட்வைஸ் காரணமாக ராதிகா பையை தூக்கிக்கொண்டு கோபி இருக்கும் வீட்டுக்கே சென்றுவிடுகிறார். நீங்க இருக்கும் இடத்தில் தான் நானும் இருப்பேன் என்று கூறுகிறார். இதனால் குடும்பத்தினர் ஷாக்கானார்கள். இதனுடன் ப்ரோமோ முடிவடைகிறது.

மேலும் படிக்க | ராஷ்மிகாவின் புகைப்படத்தை வச்சு செய்யும் நெட்டிசன்கள் - ஏன் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News