தீபா வைத்த கோரிக்கை, கார்த்திக் எடுத்த முடிவு...! கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்

கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில், பல்லவி என்ற பெயருக்கு பதிலா தீபா கார்த்திக் என்று பெயர் இருக்கட்டும் என்று சொல்ல கார்த்திக்கும் தீபாவின் ஆசைப்படியே பெயரை போடுவதாக சொல்கிறான். மறுநாள் அபிராமி, தர்மலிங்கம் வீட்டு வாசல் உட்பட எல்லா இடங்களிலும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.   

Written by - Karthikeyan Sekar | Last Updated : Feb 9, 2024, 02:33 PM IST
  • கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு
  • தீபா கார்த்திக் என்று பெயர் இருக்கட்டும்
  • பல்லவி பேச்சுக்கு ஓகே சொன்ன கார்த்தி
தீபா வைத்த கோரிக்கை, கார்த்திக் எடுத்த முடிவு...! கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம், இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் மற்றும் அருண் என இருவருக்கும் இடையே வாக்குவாதம் உருவாக அபிராமி சத்தம் போட்டு சண்டையை நிறுத்தி ரூமுக்கு அனுப்பி வைத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

Add Zee News as a Preferred Source

அதாவது, ஐஸ்வர்யா மாயாவுக்கு போன் செய்து நீங்க சொன்ன மாதிரியே இந்த பிரச்சனையில் அருண் எனக்கு சப்போர்ட்டா பேசுனாரு, எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கு என நன்றி கூறி போனை வைக்கிறாள். இதனையடுத்து கார்த்திக் தீபாவுக்காக விழா நடத்த உள்ள நிலையில் அதற்கான போஸ்டரை வீட்டிற்கு எடுத்து வந்து தீபாவிடம் காட்டுகிறான். 

மேலும் படிக்க | Lover Review: டாக்ஸிக் காதலுக்கு எடுத்துக்காட்டு..‘லவ்வர்’ படம் எப்படியிருக்கு? திரை விமர்சனம் இதோ!

இதை பார்த்த தீபா பல்லவி என்ற பெயருக்கு பதிலா தீபா கார்த்திக் என்று பெயர் இருக்கட்டும், இதுக்கு காரணமாக இருந்தது நீங்க தான் என்று சொல்ல கார்த்திக்கும் தீபாவின் ஆசைப்படியே பெயரை போடுவதாக சொல்கிறான். மறுநாள் அபிராமி, தர்மலிங்கம் வீட்டு வாசல் உட்பட எல்லா இடங்களிலும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. 

இதை பார்த்து கடுப்பாகும் ஐஸ்வர்யா இதை தடுக்க ஏதாவது செய்யணும் என்று பிளான் போடுகிறாள், கார்த்திக் தர்மலிங்கத்திற்கு போன் செய்து வெளியே வந்து பார்க்க சொல்ல அவர்களும் போஸ்டரை பார்த்து சந்தோசப்படுகின்றனர். இதுக்காக தான் இவ்வளவு நாளா காத்திட்டு இருந்தேன், அது இன்னைக்கு உங்களால் நடந்திருக்கு மாப்பிள்ளை என்று ஆனந்த கண்ணீர் விடுகிறார். 

தீபாவும் இங்கே போஸ்டரை பார்த்து சந்தோசப்படுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | கோடிக்கணக்கில் பணம் கொடுத்தாலும் இந்த விஷயத்தை பண்ண மாட்டேன் - ஜீவி பிரகாஷ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Karthikeyan Sekar

I am Karthikeyan, a Senior Sub-Editor at Zee Tamil News Channel, bringing 10 years of experience in the media industry. I have extensive experience working in both news television and online website platforms.

...Read More

Trending News