செல்வராகவன் படத்தில் நடிக்க இருந்த தனுஷ்-அஜித்..! தடைப்பட்டதற்கு இதுதான் காரணம்..!

கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களாக விளங்கும் அஜித்-தனுஷ் ஆகிய இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.   

Written by - Yuvashree | Last Updated : Aug 18, 2023, 05:35 PM IST
  • அஜித் மற்றும் தனுஷ் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருந்தனர்.
  • இதில் பரத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருந்தார்.
  • ஆனால் இந்த படம் தடைப்பட்டு போனது.
செல்வராகவன் படத்தில் நடிக்க இருந்த தனுஷ்-அஜித்..! தடைப்பட்டதற்கு இதுதான் காரணம்..!  title=

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் முக்கியமானவர்களாக விளங்குபவர்கள், தனுஷ் மற்றும் அஜித். இருவரும் தங்களுக்கான கதைப்பாணியை தேர்ந்தெடுத்து அதன்படி பயணிப்பவர்கள். இவர்கள் இருவரும் செல்வராகவனின் ஒரு படத்தில் நடிக்க இருந்ததாக பிரபல நடிகர் ஒருவர் கூறியிருக்கிறார். 

ஒரே படத்தில் அஜித்-தனுஷ்? 

நடிகர்கள் தனுஷும் அஜித்தும் பிரபல இயக்குநர் செல்வராகவன் இயக்கும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க இருந்ததாக நடிகர் பரத் கூறியிருக்கிறார். ‘காதல்’ படம் மூலம் தமிழ்நாடு முழுதும் பிரபலமடைந்த இவர், தற்போது புது இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களின் படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். 

இவர் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட போது, அஜித்-தனுஷ் இணையும் ஒரு படம் குறித்து பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. செல்வராகவன், தனது சகோதரர் தனுஷை வைத்து 3க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியிருக்கிறார். இவர், தனுஷையும் அஜித்குமாரையும் வைத்து ஒரு படத்தை  இயக்க இருந்தாராம். நடிகர் பரத்தும் அந்த படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக இருந்ததாம். ஆனால் ஒரு சில காரணங்களுக்காக இந்த படத்தின் பணிகள் ஆர்மபிக்கும் முன்னரே முடிவடைந்து விட்டதாக பரத், அந்த நேர்காணலில் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க | தடைப்பட்ட ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி மீண்டும் நடக்கிறது! எந்த தேதியில் தெரியுமா..?

முடிவு பெறாத படங்கள்...

தனுஷ் மற்றும் அஜித்தை வைத்து செல்வராகவன் இயக்க இருந்த படத்தின் பணிகள் 2004ஆம் ஆண்டே தொடங்க இருந்தது. இந்த படத்திற்கு ‘காசிமேடு’ என்று பெயரிடப்பட்டிருந்தது. ஆனால், சில நிதிப்பிரச்சனை காரணமாகத்தான் இந்த படத்தின் பணிகள் ஆரம்பிக்காமலேயே நிறுத்தப்பட்டு விட்டன. இதே படத்தை நடிகர் விஜய்யை வைத்து அவர் 2010ஆம் ஆண்டில் இயக்க இருந்தார். அப்போதும் இதே நிதி பிரச்சனை காரணமாக இப்படம் நிறுத்தப்பட்டு விட்டது . 

செல்வராகவனின் இந்த படம் மட்டுமல்ல, இதையடுத்து பல படங்கள் தொடங்காமலேயே முடிக்கப்பட்டு விட்டன. தனுஷ் மற்றும் சோனியா அகர்வாலை வைத்து செல்வராகவன் ‘டாக்டர்ஸ்’ என்ற படத்தை இயக்க இருந்தார். இதற்கு போட்டோ ஷூட் பணிகள் வரை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இந்த படத்தின் பணிகள் அத்துடன் நிறுத்தப்பட்டு விட்டன. செல்வராகவனின் படங்களில் இயக்கப்பட்டு வெளிவந்ததை விட, பாதியில் நிறுத்தப்பட்டவைதான் எண்ணிக்கையில் அதிகம் என்ற கருத்து தமிழ் சினிமாவில் நிலவி வருகிறது. 

இணைந்து நடித்தால் எப்படியிருக்கும்..? 

அஜித்-தனுஷ் ஆகிய இருவருமே நடிப்பு என்று வந்துவிட்டால் அடித்து நொருக்குபவர்கள். அஜித்திற்கு ஆக்‌ஷன்-க்ளாஸ் காட்சிகள் கை வந்த கலை என்றால், தனுஷிற்கு எது கொடுத்தாலும் அல்வா சாப்பிடுவது போல. தமிழ் சினிமாவில் தற்போது பல நட்சத்திரங்கள் ஒன்றிணைந்து ஒரு படத்தில் நடிப்பது ட்ரெண்டாகி வருகிறது. ஆனாலும், முன்னணி ஹீரோக்களாக இருப்பவர்கள் அவர்களது போட்டி நடிகர்களுடன் படங்களில் இணைவதில்லை. இவர்கள் இணைந்து நடித்தால் “திரை தீ பிடிக்கும்..வெடிவெடிக்கும்..” கதையாகிவிடும் என்பதாலோ என்னவோ அதற்கான வாய்ப்பு வராமலேயே போயுள்ளது. இந்த நிலையில் தனுஷும் அஜித்தும் சேர்ந்து நடித்தால் கண்டிப்பாக அந்த கதை எமோஷன் மற்றும் ஆக்‌ஷன் நிறைந்த கதையாக இருக்கும் என கருதப்படுகிறது. 

மேலும் படிக்க | ஜெயிலர் படத்தை பார்த்தவுடன் ரஜினி கூறியது என்ன..? நெல்சன் பகிர்ந்த சுவாரஸ்யம்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News