மீண்டும் இணைந்த தனுஷ்-ஐஸ்வர்யா.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

தனுஷ்-ஐஷ்வர்யா ஜோடி இருவரும் பிரிந்துவிட்டதாக அறிவித்த பிறகு தற்போது இருவரும் அவர்களது மகனுடன் சந்தோஷமாக இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது.  

Written by - RK Spark | Last Updated : Aug 22, 2022, 01:59 PM IST
  • தனுஷ் ஐஸ்வர்யா ஜோடி கடந்த ஆண்டு விவாகரத்து பெற்றனர்.
  • விவாகரத்து பெற்றாலும் ஒருவரை ஒருவர் குறை கூறாமல் இருந்து வருகின்றனர்.
  • சமீபத்தில் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது.
மீண்டும் இணைந்த தனுஷ்-ஐஸ்வர்யா.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்! title=

தமிழ் சினிமாவில் எளிமையான தோற்றத்தில் நடித்து தற்போது முன்னணி நடிகர்களுள் ஒருவராக திகழ்பவர் நடிகர் தனுஷ். தற்போது ஹாலிவுட் வரை இவரது புகழ் பரவிவிட்டது.  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை, நடிகர் தனுஷ் காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் கோலாகலமாக திருமணம் செய்துகொண்டார்.  இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்கிற இரு மகன்கள் உள்ளனர், சமீபத்தில் இந்த ஜோடி தாங்கள் இருவரும் பிரியப்போவதாக அறிவித்திருந்தது அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.  

அவர்கள் பிரியப்போவதாக அறிவித்த பிறகு அவரது ரசிகர்கள் பலரும் தனுஷ் ஐஸ்வர்யாவுக்காக நிகழ்ச்சி ஒன்றில் பாடிய வீடியோவை பகிர்ந்து வருத்தம் தெரிவித்தனர்.  இருவரும் விவாகரத்து பெறவில்லையென்றாலும், பிரிந்து தனித்தனியே வாழந்து வந்தனர்.  தனுஷ் -ஐஸ்வர்யா விவாகரத்து குறித்து பல வதந்திகள் வெளிவரத் தொடங்கியது, இருப்பினும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் அவர்களது விவகாரத்திற்கான காரணம் குறித்து இதுவரை எதையும் கூறவில்லை.  இரண்டு பெரும் தனித்தனி பாதையில் அவர்களது பணிகளில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டனர்.  

dhanush

மேலும் படிக்க | விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த தொகுப்பாளினி பிரியங்கா

இந்நிலையில் பிரிவிற்கு பிறகு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் பரவி அவர்களது ரசிகர்களை நெகிழ்ச்சியடிய செய்திருக்கிறது.  இவர்களின் மூத்த மகன் யாத்ரா பள்ளியில் ஸ்போர்ட்ஸ் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்.  அந்த விழாவில் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கலந்து கொண்டுள்ளனர், யாத்ராவை அரவணைத்துக்கொண்டு தனுஷும், ஐஸ்வர்யாவும் மகிழ்ச்சியோடு இருக்கின்றனர்.  அந்த புகைப்படத்தில் அவர்களுடன் பாடகர் விஜய் யேசுதாஸ் மற்றும் அவரது குடும்பத்தினரும் இடம்பெற்றுள்ளனர்.  அதேசமயம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவரது சமூக வலைதள பக்கத்தில் மகனை பாராட்டி மட்டுமே பதிவிட்டிருக்கிறார், இருவரும் ஒன்றாக இருக்கும் படத்தை அவரது சமூக பக்கத்தில் அவர் பகிர்ந்துகொள்ளவில்லை.

மேலும் படிக்க | பொன்னியின் செல்வன் படத்திற்கும் வாரிசு படத்திற்கும் ஏற்பட்ட திடீர் உறவு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News