சின்ன பட்ஜெட் படங்களையும் வெளியிடுங்கள் - உதயநிதியிடம் கோரிக்கை வைத்த இயக்குநர்

சிறிய பட்ஜெட் படங்களையும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட வேண்டுமென இயக்குநர் சீனு ராமசாமி கோரிக்கை வைத்துள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : May 23, 2022, 06:58 PM IST
  • உதயநிதி ஸ்டாலினிடம் இயக்குநர் சீனுராமசாமி கோரிக்கை
  • நெஞ்சுக்கு நீதி படத்துக்கு குவியும் பாராட்டு
  • அதிக படங்களை வெளியிடும் ரெட் ஜெயண்ட் மூவிஸ்
 சின்ன பட்ஜெட் படங்களையும் வெளியிடுங்கள் - உதயநிதியிடம் கோரிக்கை வைத்த இயக்குநர் title=

நடிகரும், சேப்பாக்கம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பல வருடங்களாக ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தை நடத்திவருகிறார்.

பீஸ்ட், டான், எதற்கும் துணிந்தவன், ராதே ஷ்யாம் உள்ளிட்ட பெரிய படங்களை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். அடுத்ததாக கமல் நடிப்பில் உருவாகியிருக்கும் விக்ரம் படத்தையும் உதயநிதியே வெளியிடுகிறார். அதுமட்டுமின்றி இன்னும் பல படங்களை அவர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Udhayanidhi

அதேசமயம், திமுக ஆட்சிக்கு வந்ததும் உதயநிதி ஸ்டாலின் அனைவரையும் மிரட்டி படத்தை வாங்கி வெளியிடுகிறார் என்ற குற்றச்சாட்டை எதிர்க்கட்சியினர் வைத்துவருகின்றனர். 

இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக விக்ரம் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர், நான் கமல் ஹாசனை மிரட்டவில்லை. மிரட்டினாலும் பயப்படக்கூடிய ஆள் அவர் இல்லை என பேசியிருந்தார்.

மேலும் படிக்க | மீண்டும் இணைகிறது ஜெய் பீம் கூட்டணி... இந்த முறை எந்த சம்பவம்?

இந்நிலையில் இயக்குநர் சீனுராமசாமி உதயநிதியிடம் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 

Udhayanidhi

“வெளிவர முடியாமல் தவிக்கும் கதையம்சம் நிறைந்த சிறுபட்ஜெட் படங்களை வாங்கி வெளியிட்டால் அதில் உயிராகும் நடிகர்கள் இயக்குனர்கள் புதிய கலைஞர்கள் நன்றியோடு உங்களை என்றும் மறவாது வாழ்த்துவர். இப்பெருமையினை சொல்லி மகிழும் தருணத்தை  எதிர்நோக்கி.... வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார்.

 

முன்னதாக அருண்ராஜா காமராஜா இயக்கத்தில் உதயநிதி நடித்த நெஞ்சுக்கு நீதி படத்துக்கு பலரும் பாராட்டு தெரிவித்துவருகின்றனர். அந்தப் படம் குறித்தும் இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “கண்ணே கலைமானே படத்தின் சமயத்தில் உதயநிதியை மக்கள் அன்பன் என அழைத்தேன்.

மேலும் படிக்க | வடக்கா தெற்கா - பேட்டியில் கமல் ஹாசன் சொல்வது என்ன?

அதை மெய்ப்பிக்கும் விதமாக சிறப்பாக இருந்து நெஞ்சுக்கு நீதி அன்று நான் சொன்னது போல  இதுபோன்ற கதை கருத்தாழமிக்க மக்களிடையே வாழும் படங்களில்  நடித்தால் கலையும் எதிர்கால முற்போக்கு கருத்துலகமும் கைவிடாது” என்றும் குறிப்பிட்டிருந்தார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News