பல கோடிகளுக்கு அதிபதி... ஆனாலும் சரத்பாபுவின் கடைசி ஆசை நிறைவேறவில்லையா? - முழு விவரம்

Actor Sarath Babu: நடிகர் சரத்பாபு உடல்நலக்குறைவால் நேற்று உயிரிழந்த நிலையில், அவரின் நிறைவேறாத கடைசி ஆசை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Written by - Sudharsan G | Last Updated : May 23, 2023, 05:41 PM IST
  • மறைந்த நடிகர் சரத்பாபுவின் உடலுக்கு இன்று இறுதி மரியாதை செய்யப்பட்டது.
  • அவர் செப்சிஸ் என்ற அரிய நோயால் அவதிப்பட்டு வந்தார்.
  • பிரபலங்கள், திரையுலகினர் அவரின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.
பல கோடிகளுக்கு அதிபதி... ஆனாலும் சரத்பாபுவின் கடைசி ஆசை நிறைவேறவில்லையா? - முழு விவரம் title=

Actor Sarath Babu Last Wish: தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து, ரசிகர்களிடம் அதிகம் பரிட்சயமான நடிகர் சரத்பாபு, நீண்ட நாள்களாக உடல்நலக்குறைவு காரணமாக ஹைதராபாத் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார். 

அவரின் மறைவுயொட்டி திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்தனர். தொடர்ந்து, அவரது உடல் சென்னை தி.நகரில் உள்ள அவரின் வீட்டுற்கு கொண்டுவரப்பட்டு, அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதையொட்டி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், பிரபலங்கள் என பலரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். இறுதி மரியாதை கிண்டியில் உள்ள மின்மயானத்தில் இன்று மதியம் நடைபெற்றது. 

அவரது மறைவையொட்டி பலரும் அவரின் பிரபலமான 'செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்' பாடலை தங்களின் சமூக வலைதளப்பக்கங்களில் பதிவிட்டு தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மேலும், அண்ணாமலை, முத்து ஆகிய படங்களில் ரஜினியுடன் நடித்திருந்த காட்சிகளையும் பதிவிட்டு வருகின்றனர். சரத்பாபு தமிழ் சினிமா ரசிகர்களின் மனங்களில் இருந்து மறக்கவே முடியாத ஆளுமையாக நிலைபெற்றுவிட்டதாகவும் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். 

மேலும் படிக்க | மறைந்த நடிகர் சரத்பாபுவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் நடிகர் சூர்யா & கார்த்தி

இந்நிலையில், நடிகர் சரத்பாபுவுக்கு என்று கடைசி ஆசை இருந்ததாகவும், அது நிறைவேறாமல் அவர் காலமாகிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. இந்த தகவல்கள் அவரது ரசிகர்கள் கவலை ஆழ்த்தியுள்ளது, இதையும் அவர்கள் சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர். 

சரத்பாபுவுக்கு தொடக்கத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டபோது, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக அவர் பெங்களூருவுக்கு அழைத்துச்செல்லப்பட்டு, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இருப்பினும், அவர் உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாததால் அவரை பெங்களூருவில் இருந்து ஹைதராபாத்திற்கு அவரது குடும்பத்தினர் கொண்டு சென்றனர். அங்கு கடந்த ஒருமாத காலமாக தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 

அவர் செப்சிஸ் என்ற அரிய நோயால் அவதிப்பட்டு வந்தார். அவரது சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் ஆகியவை ஒவ்வொன்றாக செயலிழக்க ஆரம்பித்தன. இதனால் அவருக்கு வென்டிலேட்டர் கருவி மூலம் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்ததாக தெரிகிறது. எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் 1.30 மணியளவில் அவர் காலமானதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

பல கோடி சொத்துக்கு அதிபதியான நடிகர் சரத்பாபு, தனது கடைசி ஆசையை நிறைவேறாமல் காலமாகியுள்ளார். திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு ஆந்திராவில் உள்ள ஹார்ஸ்லி மலைப்பகுதியில் தனது கடைசி நாட்களை கழிக்க அங்கு வீடு கட்ட விரும்பியுள்ளார், சரத்பாபு. ஹார்ஸ்லி ஹில்ஸில் உள்ள தனது நிலத்தில், கட்டுமானப் பணிகளை ஏற்கனவே தொடங்கிவிட்டதாக தகவல்கள் கூறப்படுகிறது. ஆனால் வீட்டின் கட்டுமானப் பணிகள் முடிவதற்குள் அவர் உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது. ஹார்ஸ்லி மலைப்பகுதியில் குடியேற வேண்டும் என்பதே அவரின் கடைசி ஆசையாக இருந்துள்ளது, ஆனால் அது நிறைவேறவில்லை என கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | சரத்பாபு குறித்து உருக்கமாக பேசிய நடிகர் ரஜினிகாந்த்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News