படத்துக்காக காத்திருக்கும் ஜாண்டி ரோட்ஸ்... நன்றி சொன்ன சூர்யா

சூர்யா தயாரித்திருக்கும் ஓ மை டாக் படத்தை காண்பதற்கு காத்திருப்பதாக ஜாண்டி ரோட்ஸ் தெரிவித்துள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Apr 21, 2022, 05:43 PM IST
  • தமிழ் படத்துக்காக காத்திருக்கும் ஜாண்டி ரோட்ஸ்
  • நன்றி தெரிவித்த சூர்யா
  • வைரலாகும் ஜாண்டி ட்வீட்
படத்துக்காக காத்திருக்கும் ஜாண்டி ரோட்ஸ்... நன்றி சொன்ன சூர்யா title=

நடிகர் அருண் விஜய் தற்போது ‘ஓ மை டாக்’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். சூர்யாவின் 2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தில் அருண் விஜய், அவரது தந்தை விஜயகுமார், அவரது மகன் அர்னவ் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று தலைமுறையினர் இப்படத்தில் நடிப்பதால் படத்துக்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஷரோவ் சண்முகம் இயக்கியிருக்கும் இப்படமானது அர்னவக்கும் அர்னவ் வளர்க்கும் நாய்க்கும் இடையே உள்ள பாசத்தை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது. அமேசான் பிரைமில் வெளியாகியிருக்கும் இப்படத்து ரசிகர்கள் தங்கள் ஆதரவை கொடுத்துவருகின்றனர்.

o my dog

இந்நிலையில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இப்படத்தை பார்க்க ஆர்வமாக இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார்.

மேலும் படிக்க | பேன்சி நம்பர் வாங்க ரூ.11 லட்சம் செலவழித்த ஆர்ஆர்ஆர் பிரபலம் - மலைக்க வைக்கும் லைஃப் ஸ்டைல்

இதுகுறித்து அவர், செல்ல பிராணியை விரும்புபவனாக இப்படத்தை பார்ப்பதற்கு காத்துக்கொண்டிருக்கிறேன் என பதிவிட்டார்.

 

அதற்கு நடிகரும், தயாரிப்பாளருமான சூர்யா, நன்றி. உங்கல் மகள் இந்தியா ஜாண்டிக்கும் படம் பிடிக்கும் என நம்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News