சித்தரிடம் ஆசிர்வாதம் வாங்க செல்லும் கார்த்திக் - தீபா..! அங்கு அவர் கொடுத்த ரியாக்ஷன் இதுதான்

கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்: கார்த்தி தீபா இருவரும் கோயிலுக்கு செல்ல, அங்கு வரும் சித்தர் அவர்கள் மணமக்களாக வந்திருப்பதை பார்த்து ஆசீர்வாதம் செய்கிறார். இதற்கு முன்பு நட்சத்திரா போடும் திட்டம் அடுத்த பரபரப்பை கிளப்பியுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : May 22, 2023, 10:42 AM IST
  • கோவிலுக்கு செல்லும் கார்த்தி - தீபா
  • ஆசிர்வதிக்கும்போது சித்தரின் ரியாக்ஷன்
  • அடுத்ததாக நக்ஷத்திரா போடும் பிளான்
சித்தரிடம் ஆசிர்வாதம் வாங்க செல்லும் கார்த்திக் - தீபா..! அங்கு அவர் கொடுத்த ரியாக்ஷன் இதுதான் title=

கார்த்தி சமாதானம்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் எல்லோரும் தீபாவை திட்டிக் கொண்டு இருக்க, தடுத்து நிறுத்தும் கார்த்திக் நடந்தது நடந்து போச்சு, எதுவாக இருந்தாலும் அம்மா எடுக்கும் முடிவுதான் இறுதி முடிவு என சொல்கிறான். அதன் பிறகு எல்லோரும் வீட்டுக்கு கிளம்பலாம் என சொல்ல, கோவிலுக்கு போயிட்டு பாலும் பழமும் சாப்பிட்டு விட்டு தான் வீட்டுக்கு செல்ல வேண்டும் அதுதான் சம்பிரதாயம் என்று சொல்கிறாள் மீனாட்சி. 

மேலும் படிக்க | காவடியுடன் மாஸ் என்ட்ரி கொடுத்த ஷண்முகம் - அண்ணா சீரியல் முதல் எபிசோட் அப்டேட்!

கோயிலுக்கு செல்லும் கார்த்தி - தீபா

ஐஸ்வர்யா இந்த கல்யாணமே உண்மையான கல்யாணம் கிடையாது இதுல சம்பிரதாயம் வேற தேவையா என கேள்வி கேட்க செல்பி பாட்டி எல்லாமே முறைப்படி தான் நடந்திருக்கு அதனால இந்த சடங்கு சம்பிரதாயத்தையும் செய்து தான் ஆக வேண்டும் என்று சொல்கிறார். உடனே கார்த்தி சடங்கு என்று சொல்றாங்க அதனால அதை மதிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நீங்க அம்மாகிட்ட எதுவும் சொல்ல வேண்டாம். நாங்க கோவிலுக்கு போயிட்டு வரோம். நீங்க அதற்கு முன்னாடி வீட்டுக்கு போயிடுங்க. அம்மா கேட்டா கோவிலுக்கு போயிட்டு வந்துகிட்டு இருக்காங்கன்னு மட்டும் சொல்லுங்க என சொல்லிவிட்டு கார்த்திக், தீபா, மீனாட்சி மற்றும் செல்ஃபி பாட்டி ஆகிய நால்வரும் கோவிலுக்கு கிளம்புகின்றனர். 

நட்சத்திரா போடும் திட்டம்

அதன் பிறகு நட்சத்திரா, நாம முன்னாடியே அபிராமி கிட்ட இந்த விஷயத்தை சொல்லிடலாம் என சொல்ல... ஐஸ்வர்யா கார்த்திக் சொல்ல வேண்டாம்னு சொல்லி இருக்கான். நீ கொஞ்சம் பொறுமையா இரு, தீபாவை பார்த்த அடுத்த நொடியே அபிராமி அவளை கழுத்த புடிச்சு வெளியே தள்ளிடுவாங்க. அப்புறம் கார்த்திக்கு உன்னை கல்யாணம் பண்ணி வச்சிடுவாங்க என சொல்கிறாள். பிறகு இவர்கள் வீட்டுக்கு கிளம்ப..மறு பக்கம் கோவிலுக்கு செல்லும் மீனாட்சி கடவுளுக்கு நன்றி சொல்லிக்கொண்டு செல்ல, தீபா கார்த்தியை பார்த்தபடியே ஃபீல் செய்து கொண்டே செல்கிறாள். 

சித்தரிடம் ஆசிர்வாதம்

எல்லோரும் கோவிலுக்கு வந்ததும் தீபா தாலியை கழட்டி வைத்து கோவில்தான் என்பது தெரிய வருகிறது. கார்த்திக் கோயிலுக்கு வெளியே நிற்க மீனாட்சி அவனை சமாதானம் செய்து கோவிலுக்குள் அழைத்துச் செல்கிறாள்.  பிறகு தீபா இது எதுக்கும் நான் காரணம் கிடையாது, எல்லாம் நீ நடத்தி வைத்தது தான் என கடவுளிடம் வேண்ட, ஐயர் சித்தர் ஒருவர் வந்திருக்கிறார் அவரிடம் ஆசீர்வாதம் வாங்கிக் கொள்ளுங்கள் என சொல்கிறார். கார்த்திக், தீபா சித்தரிடம் ஆசிர்வாதம் வாங்க செல்கின்றனர். அபிராமியை மகனின் கல்யாணத்தில் இருக்கக் கூடாது என சொன்ன சித்தர் இவர்களைத் திருமண கோலத்தில் பார்த்து சிரித்துவிட்டு ஆசிர்வாதம் செய்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க |  தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் இணைந்த அருண்ராஜா காமராஜ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News