கார்த்திகை தீபம் அப்டேட்: கார்த்திக்கை வேலையில் இருந்து தூக்க பிளான் போட்ட ஆனந்த்

Karthigai Deepam Today's Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 25, 2024, 05:15 PM IST
  • கார்த்திகை தீபம் : இன்றைய எபிசோட்.
  • பிளான் போடும் அருள், ஆனந்த்.
  • தீபா கையை பிடித்தும் இழுக்கும் கார்த்திக்.
கார்த்திகை தீபம் அப்டேட்: கார்த்திக்கை வேலையில் இருந்து தூக்க பிளான் போட்ட ஆனந்த் title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘கார்த்திகை தீபம்’ சீரியல்.

கார்த்திகை தீபம் : இன்றைய எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கம்பெனியில் தொழிலாளி ஒருவருக்கு அடி பட கார்த்திக் அவருக்கு உதவி செய்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

பிளான் போடும் அருள், ஆனந்த்

அதாவது, கார்த்திக் அடிபட்ட தொழிலாளருக்கு உதவி செய்ததை வைத்து அவன் வேலையே செய்ய மாட்டுறான் என்று சொல்லி வேலையில் இருந்து தூக்கி வீட்டிற்கு அனுப்ப பிளான் போடுகின்றனர் அருண் மற்றும் ஆனந்த். 

பிறகு இந்த விஷயத்தை தொழிலாளர்களிடம் சொல்ல அதற்கு அனைவரும் மறுப்பு தெரிகின்றனர். கார்த்திக் தம்பி எங்களுக்கு நல்லது தான் பண்ணாரு, அடி பட்டவருக்கு உதவியது தப்பா என்று கேட்கின்றனர், ஆனாலும் கார்த்தியை வேலையில் இருப்பது தூக்குவது உறுதி என்று சொல்கின்றனர். 

இதனால் தொழிலாளர்கள் கார்த்திக் தம்பியை வேலையில் இருந்து எடுத்தால் எங்களையும் வேலையில் இருந்து தூக்கி வீட்டிற்கு அனுப்புங்க என்று அதிர்ச்சி கொடுக்கின்றனர், பிரச்சனை வேற மாதிரி சென்று விட்டதால் அருண் ஆனந்த் எதுவும் செய்ய முடியாமல் தங்களது முடிவை கை விடுகின்றனர். 

மேலும் படிக்க | சிக்கலில் நடிகை தமன்னா.. சம்மன் அனுப்பிய சைபர் கிரைம்

தீபா கையை பிடித்தும் இழுக்கும் கார்த்திக்

அடுத்து கார்த்திக் டயார்டாக வீட்டிற்கு வர தீபா வேலை எப்படி போச்சு என்று கேட்டு கை, கால் பிடித்து விடவா? தலையை பிடித்து விடவா என்று கேட்க கார்த்திக் வேண்டாம் என்று மறுக்கிறான், இதனால் வேலை செய்து களைப்பில் வந்த புருஷனுக்கு எதுவும் செய்ய முடியலையே என்று தீபா வருத்தமாக வெளியே கிளம்ப கார்த்திக் கையை பிடித்து இழுத்து காதல் பார்வையுடன் பார்க்கிறான். 

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

காணத்தவறாதீர்கள்

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

கார்த்திகை தீபம்: சீரியலை எங்கு பார்ப்பது?

கார்த்திகை தீபம் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | விகரமின் 'வீர தீர சூரன்' சூட்டிங் ஆரம்பம்: படக்குழுவினர் யாரெல்லாம் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News