ஆக்சிடென்ட் பண்ணவாரு ஒருத்தரு! ஆனா சரண்டர் ஆனது இன்னொருத்தரு! வீரா சீரியல் அப்டேட்

Veera Serial Update : போலீசில் சரண்டர் ஆன டிரைவர்.. வீரா கேட்ட கேள்வியால் ராமச்சந்திரன் கொடுத்த பதில் - வீரா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 5, 2024, 02:28 PM IST
  • போலீசில் சரண்டர் ஆன டிரைவர்...
  • வீரா கேட்ட கேள்வியால் ராமச்சந்திரன் கொடுத்த பதில்
  • வீரா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
ஆக்சிடென்ட் பண்ணவாரு ஒருத்தரு! ஆனா சரண்டர் ஆனது இன்னொருத்தரு! வீரா சீரியல் அப்டேட் title=

தமிழ் சின்னத் திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புத்தம் புதிய சீரியல் வீரா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ராமச்சந்திரன் வீட்டுக்கு போலீஸ் வந்து நின்ற நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் . 

அதாவது ஹாஸ்பிடலில் போலீஸ் வீராவை ஸ்டேஷனுக்கு அழைக்கின்றனர். கொலை செய்தவன் சரண்டர் ஆகிட்டான் என்று சொல்ல வீரா ஸ்டேஷனுக்கு கிளம்பி செல்கிறாள். 

மாறன் ஹாஸ்பிடல் இருக்க பாண்டியனை பார்க்க ஆட்டோ டிரைவர்கள் வந்திருக்க வள்ளி போன் போட்டு அவனை வீட்டுக்கு கூப்பிட அவன் போலீஸ்ல சரண்டர் ஆகணும் என்று மாறும் சொல்ல அவன் சரண்டர் ஆயிட்டான் இன்று வள்ளி பொய் சொல்ல மாறன் வீட்டிற்கு கிளம்பி செல்கிறான்.

அடுத்து ஸ்டேஷனில் வீரா காத்திருக்க மாறன் வீட்டில் உட்கார்ந்து இருக்க வீரா முன்னாடி சரண்டர் ஆன டிரைவர் வந்து நிற்கிறார். மறுபக்கம் மாறன் கேசவனை பார்த்து ஷாக் ஆகிறார். நீ சரண்டர் ஆகலையா என்று இங்கே மாறன் சத்தம் போட மறுப்பக்கம் வீரா ஆக்சிடென்ட் செய்தது இவர் கிடையாது என வாக்குவாதம் செய்கிறாள். 

மேலும் படிக்க | முத்துப்பாண்டிக்கு வார்னிங் கொடுத்த டிஎஸ்பி - அண்ணா சீரியல் அப்டேட்!

இங்கே மாறன் கேசவை பிடித்து தர தரதரவென இழுக்க வள்ளி மாறனின் காலில் விழுந்து அப்பாவை நினைச்சு பாரு என்று தடுத்து நிறுத்த வெளியூர் சென்று வந்த ராமச்சந்திரன் ஏர்போட்டில் இறங்கியதும் ஆக்சிடென்ட் விஷயம் கேள்விப்பட்டு நேராக போலீஸ் ஸ்டேஷன் வருகிறார். 

வீரா அவரிடம் பணக்காரங்கன்னா என்ன வேணாலும் பண்ணலாமா ஆக்சிடென்ட் பண்ணவாரு ஒருத்தரு ஆனா சரண்டர் ஆனது இன்னொருத்தரு என்று சத்தம் போட ராமச்சந்திரன் உனக்கான நியாயம் கிடைக்கும் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய வீரா சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க  | நினைத்தேன் வந்தாய்: எழிலால் பசியில் கிடக்கும் பிள்ளைகள்.. சுடர் செய்த அசத்தலான வேலை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News