கொல்லப்படும் சாமியாடி! மாரி மீது பழி! முத்துப்பேச்சியின் பதிலடி - மாரி சீரியல் அப்டேட்

Mari Zee Tamil mega serial update: கோவில் குளத்தின் அருகே சாமியாடி செத்து கிடக்கும் சாமியாடி! மாரி மீது விழும் பழி, முத்துப்பேச்சி கொடுத்த பதிலடி - மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 18, 2023, 11:37 AM IST
  • மாரில் சீரியலில் பரபரப்பு
  • கொல்லப்படும் சாமியாடி! மாரி மீது பழி!
  • முத்துப்பேச்சியின் பதிலடி என்ன தெரியுமா?
கொல்லப்படும் சாமியாடி! மாரி மீது பழி! முத்துப்பேச்சியின் பதிலடி - மாரி சீரியல் அப்டேட் title=

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. தெய்வத்தின் அருள் பெற்ற ஒரு பெண் மற்றும் அவரைச் சுற்றி நடக்கும் கதையாக புனையப்பட்டுள்ள சீரியல் மாரி. பல எதிர்பார்க்காத திருப்பங்களுடன் ஜீ தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் மாரி சீரியல் பல சீரியல் ரசிகர்களின் மனங்களில் இடத்தை பிடித்துள்ளது. பரபரப்பான கதைக்களத்துடன் நகர்ந்து வரும் இந்த தொடரின் லேட்டஸ்ட் எபிசோடில் என்ன நடக்கும்?

இதற்கு முந்தைய எபிசோடில் என்ன நடந்தது?

நேற்றைய எபிசோட்

துர்கா முத்துபேச்சியுடன் ஜீப்பில் வந்து கொண்டிருக்க முத்தபேச்சி கையில் இருந்து போட்டோ கீழே விழுந்த நிலையில் துர்கா அதை எடுத்து யாருடைய போட்டோ என்று பார்க்கலாம் கொடுத்து விடுகிறாள். மேலும் முத்துபேச்சி துர்காவை வீட்டின் அருகே இறக்கி விட்டு கூடவே அவரும் வர, துர்கா நீங்க எதுக்கு வரீங்க என கேட்கிறாள். 

லேட்டஸ்ட் எபிசோட்

முத்துப்பேச்சி எனக்கும் உங்க பெரியமம்மாவை பார்க்கணும்னு ஆசையா இருக்கு என சொல்ல நீங்க நினைச்ச உடனே அவங்களை பார்க்க முடியாது, அவங்க இப்போ பூஜையில் இருப்பாங்க. அப்பாய்ன்மெண்ட் வாங்கணும் என சொல்லி உங்க பேர் என்ன என்று கேட்க முத்துபேச்சி தனது பெயர் முத்து என்று சொல்கிறார். 

பிறகு உள்ளே சென்று மாரியை சந்தித்து ஒரு ஏமாளி வந்தாங்க, அவங்களோட வந்துட்டேன் என துர்கா பேசி கொண்டிருக்க அங்கு முத்துப்பேச்சி போட்டோ இருக்க துர்கா இது யார் என கேட்க மாரி இவங்க தான் முத்துபேச்சி என்று சொல்கிறாள். உடனே அங்கு வரும் முத்துப்பேச்சி அந்த ஏமாளி நான் தான் சொல்ல துர்கா மாரி பின்னாடி ஒளிந்து கொள்கிறாள். 

மேலும் படிக்க | மாரி சீரியல் அப்டேட்: பூட்டியிருந்த கோயிலை திறந்த மாரி-பஞ்சாயத்தை கூட்டிய சர்க்கரை!

ராசாத்தியின் பழக்கம்

பிறகு முத்துப்பேச்சி நீ என்னை பெரியம்மானே கூப்பிடு என சொல்லி முத்தம் கொடுக்க துர்கா உடனே அதை துடைத்து எனக்கு யார்னா முத்தம் கொடுத்தா பிடிக்காது உடனே துடைச்சிடுவேன் என்று சொல்ல ராசாத்தி பழக்கமும் இது தான் என்பது ஞாபகத்துக்கு வருகிறது. 

அதன் பிறகு, இந்த எபிசோடில் முத்துப்பேச்சி துர்கா காலில் கொலுசு இல்லாமல் இருப்பதை பார்த்து ராசாத்தி குழந்தையாக இருக்கும் போது போட்ட தங்க கொலுசை எடுத்து போட்டு விடுகிறாள். மறுபக்கம் சாமியாடி வீட்டுக்கு ஒருவர் வந்து ஊர் தலைவர் அழைத்ததாக சொல்லி கூட்டி போக அங்கே சங்கரபாண்டி ஊர் தலைவர் ஆகியோர் ஒன்று சேர்ந்து மதுபானத்தில் விஷத்தை கலந்து கொடுத்து சாமியாடியை குடிக்க வைக்கின்றனர். 

சாமியாடி வீட்டில் அவர் வரவில்லை என பதற்றமாக இருக்க இந்த விசியம் முத்துப்பேச்சிக்கும் தெரிய வந்து அவர் சாமியாடி வீட்டுக்கு வந்து ஆறுதல் சொல்லி கொண்டிருக்க அப்போது வரும் ஒருவன் கோவில் குளத்தின் அருகே சாமியாடி செத்து கிடப்பதாக சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். 

அதனைத்தொடர்ந்து எல்லாரும் குளத்தின் அருகே கூட சக்கரை மாரி செய்த வேலையால் அம்மன் கோபப்பட்டு சாமியாடி உயிரை காவு வாங்கி விட்டதாக சொல்ல முத்துப்பேச்சி அதற்கு மறுப்பு தெரிவிக்கிறார். ஊர் தலைவர் இதுக்கெல்லாம் காரணம் மாரி தான், அவங்க ஊர்ல அவளை அபச குணம்
பிடிச்சவனு தள்ளி தான் வைத்திருந்தாங்க, அவ இந்த ஊர்ல இருந்தா கோவில் திருவிழா நடக்காது என சொல்கிறார். 

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பதை அறிந்து கொள்ள மாரி சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

காணத்தவறாதீர்கள்..

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மாரி சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | மாரிக்கு எதிராக சக்கரையுடன் கூட்டு சேரும் ஜாஸ்மின்! மாரி சீரியல் லேட்டஸ்ட் எபிசோட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News