ஜெகதீஷ்க்கு 60-ம் கல்யாணம், மாரி எடுத்த முடிவு - மாரி சீரியல் அப்டேட்!

Maari Zee Tamil mega serial update: ஜெகதீஷ்க்கு 60-ம் கல்யாணம், மாரி எடுத்த முடிவு! பரபரப்பான திருப்பங்களுடன் மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

Written by - RK Spark | Last Updated : May 30, 2023, 10:28 AM IST
  • எனக்கும் இந்த ஊர் பிடிச்சி போச்சு என்றால் முத்துப்பேச்சி.
  • முத்துபேச்சியும் சந்தோசம் அடைகிறாள்.
  • மாரி சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
ஜெகதீஷ்க்கு 60-ம் கல்யாணம், மாரி எடுத்த முடிவு - மாரி சீரியல் அப்டேட்! title=

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி.  இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் முத்துப்பேச்சி அடுத்தமுறை நீங்க திருவிழாவுக்கு வரும் போது மூன்று பேராக அதாவது குழந்தையுடன் வர வேண்டும் என சொல்லிய நிலையில் இன்றைய எபிசோடில் நடக்க போவது என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது.  அதாவது, முத்துப்பேச்சி மாரி மற்றும் சூர்யாவை இங்கேயே இருந்துடுங்க என சொல்ல மாரி சூர்யாவுக்கு ஆபீஸ் வேலையெல்லாம் இருக்கு, நீங்க எங்க கூட வந்திருக்கலாம்ல என்று அழைக்க முத்துப்பேச்சி எனக்கும் இந்த ஊர் பிடிச்சி போச்சு, உங்கள பார்க்க வருவேன், ஆனால் உங்களோட தங்க முடியாது என சொல்ல துர்கா நான் ஊருக்கு வரல, இங்க பெரியம்மா கூடவே இருக்கேன் என்று சொல்ல முத்துபேச்சியும் சந்தோசம் அடைகிறாள். 

மேலும் படிக்க | யாசகர்களுக்கு ஸ்டார் உணவகத்தில் விருந்து: விஜய் ஆண்டனிக்குக் குவியும் பாராட்டு 

அதனை தொடர்ந்து மாரி, சூர்யா, ஹாசினி ஆகியோர் ஊருக்கு  கிளம்பி செல்ல மாரி முத்துப்பேச்சி குழந்தை பற்றி சொன்னதையே நினைத்து கொண்டு செல்கிறாள், சூர்யா என்னாச்சி என கேட்க துர்கா பற்றி பேசி சமாளிக்கிறாள். அதன் பிறகு திடீரென கார் ரிப்பேர் ஆகி நிற்க அங்கு குழந்தை ஒன்று தொட்டிலில் அழுது கொண்டிருக்க மாரி குழந்தையை தூக்கி சமாதானம் செய்கிறாள். பிறகு அந்த குழந்தையின் அம்மா வந்து அவ்வளவு சீக்கிரம் குழந்தை அமைதியாகாது, ஆனால் உங்க கிட்ட சீக்கிரம் சமாதனம் ஆகிருச்சு என சொல்ல மாரி தாய்மையை உணர்கிறாள், சூரியாவும் இதை பார்த்து பீல் செய்கிறான். அதன் பிறகு எல்லாரும் சென்னை வந்து விட சூர்யா நடந்த விசயங்களை நினைத்து பீல் செய்ய மாரி ரூமில் இருக்க தேவியம்மா முன்னாடி தோன்றுகிறார். 

maari

அப்போது மாரி ஊரில் நடந்த விசயங்களை சொல்ல தேவி நாளைக்கு ஜெகதீஷ்க்கு 60-ம் பிறந்த நாள், நீங்க தான் முதலில் வாழ்த்து சொல்லணும் என சொல்லி கொண்டிருக்க ஸ்ரீஜா மாரியும் தேவியம்மாவும் பேசி கொண்டிருப்பதை ஒட்டு கேட்கிறாள். பின்னர் சூர்யா ரூமுக்குள் நுழைய தேவியம்மா மறைந்து விடுகிறார். மாரி சூர்யாவிடம் மாமாவுக்கு நாளைக்கு 60-ம் பிறந்த நாள் என்ற விசயத்தை சொல்ல அவன் இதை பெருசா கொண்டாடணும் என சொல்கிறான். இன்னொரு பக்கம் ஸ்ரீஜா ஜாஸ்மின், சங்கர பாண்டியிடம் தேவியம்மாவும் மாரியும் பேசிய விசயத்தை சொல்ல அவர்கள் தாராவுக்கு போன் செய்து விசியம் சொல்ல தாரா நான் நேரில் வரேன் என சொல்கிறாள். பிறகு மாரி, சூர்யா, ஹாசினி நகை கடைக்கு சென்று நகை வாங்குகின்றனர். மாரி மாமாவுக்கும் தேவி அம்மாவுக்கும் 60-ம் கல்யாணம் நடத்த போவதாக சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மாரி சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | கேப்டன் மில்லர் லுக்கில் மும்பை சென்ற நடிகர் தனுஷ்..எதற்காக தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News