நெஞ்சு வலியில் துடிக்கும் ஜெகதீஷ் - மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்!

Mari Zee Tamil mega serial update: நெஞ்சு வலியில் துடிக்கும் ஜெகதீஷ்.. தாரா கொடுத்த அதிர்ச்சி, மாரி செய்ய போவது என்ன? பரபரப்பான திருப்பங்களுடன் மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

Written by - RK Spark | Last Updated : Jun 6, 2023, 11:02 AM IST
  • கண்ணு பட்டுடும் என்று மாரியை அவமானப்படுத்தி விட்டு செல்கிறாள்.
  • மன்னிப்பு கேட்கிறது தான் கஷ்டமா இருக்கு என வருத்தப்படுகிறாள்.
  • மாரி சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
நெஞ்சு வலியில் துடிக்கும் ஜெகதீஷ் - மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்! title=

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இந்த சீரியலில் சூர்யாவும் மாரியும் ஹோட்டல் ரூமுக்கு வந்து தங்கி உள்ள நிலையில் இன்றைய எபிசோட்டில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. சூர்யா மாரியை ரெஸ்டாரன்ட்டுக்கு சாப்பிட அழைத்துச் சென்றபோது அங்கு மாரி நூடுல்ஸ் சாப்பிடத் தெரியாமல் சாப்பிட அதைப் பார்த்து எல்லோரும் சிரிக்க பிறகு சூர்யா மாரிக்கு நூடுல்ஸை எப்படி சாப்பிட வேண்டும் என்பதை கற்றுக் கொடுக்கிறான். அதன் பிறகு சூர்யாவின் நண்பன் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தையுடன் வர மாரி குழந்தையை வாங்கி கொஞ்ச அவனது நண்பன் இன்னும் நல்ல விஷயம் எதுவும் இல்லையா என கேட்க உடனே அவரது மனைவி மாரியின் கையில் இருந்து குழந்தையை பிடுங்கிக் கொண்டு குழந்தைக்கு கண்ணு பட்டுடும் என்று மாரியை அவமானப்படுத்தி விட்டு செல்கிறாள். 

மேலும் படிக்க | அன்று அழகு நடிகை..இன்று அன்பான அம்மா..நடிகை ரம்பா குறித்த குட்டி கதை இதோ..!

maari

இங்கே வீட்டில் ஆடிட்டர் ஜெகதீஷ்க்கு போன் செய்து சங்கர பாண்டி மாரியின் பெயரில் இருக்கும் சொத்துக்களை சூர்யாவின் பெயருக்கு மாற்ற வேண்டும் என சொன்னதையும் பிறகு தாராவும் இதையே பேசியதையும் சொல்ல அவர் அதிர்ச்சி அடைந்து போனை வைக்கிறார். அதன் பிறகு சூர்யா மாரியை காணாமல் ஹோட்டல் முழுக்க தேட மாரி பார்க் ஒன்றில் உட்கார்ந்து வருத்தப்பட்டு கொண்டு இருக்க சூர்யா என்னுடைய நண்பனின் மனைவி தெரியாமல் பேசிட்டாங்க, அதுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்குறேன் என மன்னிப்பு கேட்க மாரி நீங்க எதுக்கு மன்னிப்பு கேட்கறீங்க ஹஸ்பண்ட் சார், எனக்கு நீங்க மன்னிப்பு கேட்கிறது தான் கஷ்டமா இருக்கு என வருத்தப்படுகிறாள். அடுத்ததாக தாரா ஜெகதீஷ்க்கு பால் எடுத்துக் கொண்டு சென்று கொடுக்க ஜெகதீஷ் அதை தட்டி விட்டு சொத்தை மாற்ற முயற்சி செய்த விஷயத்தை கேட்டு சத்தம் போடுகிறார். உடனடியா இந்த வீட்டை விட்டு வெளியே போ என சொல்கிறார். 

இங்கே ஓட்டலுக்கு வரும் ஹாசினி ஒரு ஆளை வைத்து சூர்யாவுக்கு ஜூஸில் வயகரா மாத்திரையை கலந்து கொடுக்க அதை குடித்த சூர்யா மாரியிடம் நெருக்கமாக பழகுகிறான். நீ இன்னைக்கு ரொம்ப அழகா இருக்க என மாரியை நெருங்கி செல்கிறான். இந்த நேரம் பார்த்து மாரிக்கு தனது ஞானத்தின் மூலம் ஜெகதீஷ்க்கு மாரடைப்பு ஏற்பட்டு அவர் கீழே சரிந்து விழுவது போன்ற காட்சி தோன்றுகிறது. இதனால் மாரி சூர்யாவை சம்மதிக்க வைத்து உடனடியாக அங்கிருந்து வீட்டுக்கு கிளம்புகிறாள். அதற்கேற்றார் போல இங்கே ஜெகதீஷ் மற்றும் தாராவுக்கும் இடையே சண்டை பெரிதாக ஜெகதீஷ் நெஞ்சை பிடித்துக் கொண்டு உட்கார்ந்து ஒரு கட்டத்தில் தாராவிடம் மாத்திரை கேட்க மாத்திரையை கையில் எடுக்கும் தாரா நானா இந்த வீட்டை விட்டு போகணும்? நீங்க இந்த உலகத்தை விட்டு போங்க என சொல்லி மாத்திரைகளை கீழே கொட்டி விடுகிறாள். இதனால் ஜெகதீஷ் சரிந்து கீழே விழுகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன என்பது குறித்து அறிய மாரி சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | சாலை விபத்தில் உயிரிழந்த பிரபல மலையாள நடிகர்..மீள முடியா துயரத்தில் ரசிகர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News