சித்ரா பவுர்ணமி நெருங்குகிறது! பொம்மிக்கு என்ன ஆகும்? நினைத்தாலே இனிக்கும் சீரியல் அப்டேட்

Ninaithale Inikkum Serial Latst Episode: பொம்மிக்காக பிச்சைக்காரனாக மாறிய சித்து, நடக்க போவது என்ன? நினைத்தாலே இனிக்கும் சீரியல் அப்டேட் 

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 3, 2023, 12:58 PM IST
  • சித்ரபவுர்ணமிக்குக் பிறகு பொம்மியின் கதி என்ன?
  • பொம்மிக்கு கிடைத்த சொத்துகள்
  • நினைத்தாலே இனிக்கும் மெகா சீரியலில் சொத்துப் பிரச்சனை
சித்ரா பவுர்ணமி நெருங்குகிறது! பொம்மிக்கு என்ன ஆகும்? நினைத்தாலே இனிக்கும் சீரியல் அப்டேட் title=

Zee Tamil Ninaithale Inikkum: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தாலே இனிக்கும்.. இந்த சீரியலில் பொம்மி சித்ரா பௌர்ணமி வரை மட்டுமே உயிரோடு இருப்பாள் என சித்தர் சொன்னதையடுத்து சித்தார்த் அவளை காப்பாற்ற போராடி வருகிறான். சித்துவும் கிருஷ்ணவேணியும் இதுபற்றி பேசி கொண்டிருக்க பொம்மிக்கு இந்த விஷயம் தெரிய வந்து விடுகிறது. 

சித்ரபவுர்ணமிக்குக் பிறகு பொம்மியின் கதி என்ன?

தான் இனி உயிரோடு இருப்பது சில நாட்கள் தான் என்று தெரிந்த பொம்மி. இறப்பதற்குள் தன் மனதைக் கவர்ந்த சித்துவுடன் சேர்ந்து சந்தோஷமாக வாழ வேண்டும் என முடிவெடுக்கிறாள். இதையடுத்து இருவருக்கும் முதலிரவு நடக்கிறது. இருவரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று எதிர்பார்த்தால் அங்கு ஒரு டிவிஸ்ட்.

பொம்மிக்கு கிடைத்த சொத்துகள்

சொத்துக்கள் அனைத்தையும் பொம்மி மீது தாத்தா தெய்வநாயகம் எழுதி வைத்துவிடுகிறார். இதனால், குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பொம்மி மீது எரிச்சலும், கோபமும் ஏற்படுகிறது.  

இது ஒருபுறம் என்றால், மறுபுறம் பத்மநாபன் பொம்மி மீது இருக்கும் கோபத்தில் கிருஷ்ணவேணியை பிடித்து வெளியே தள்ளுகிறார். அமைதியாக இருந்தால் தானே சொத்தை எழுதி கொடுப்பேன் என பொம்மி பத்மநாபனிடம் சொல்கிறாள். அதற்கும் கோபப்படும் பத்மநாபன், என் சொத்தை நீ என்ன எழுதி தருவது என கோபப்படுகிறான்.

மேலும் படிக்க | அமுதாவும் அன்னலட்சுமியும்: எறிந்த நிலையில் செந்திலின் துணிகள்.. நடந்தது என்ன?

சொத்துப் பிரச்சனை 

இப்படி கொடுத்தாலும் வம்பு, கொடுக்காவிட்டால் பிரச்சனை என சொத்துப் பிரச்சனை ஒரு புறம் என்றால், சித்ரா பவுர்ணமிக்குள் இறந்துவிடுவாள் பொம்மி என்று சித்தர் சொன்ன விஷயம் உண்மையானால்? என அனைவரும் கலக்கத்தில் இருப்பது, இந்த சீரியலை பார்க்கும் ரசிகர்களுக்கும் பதட்டத்தை ஏற்படுத்துகிறது. 

நினைத்தாலே இனிக்கும் மெகா சீரியல்

நினைத்தாலே இனிக்கும் மெகாத் தொடர், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 2021 ஆகஸ்டு மாதம் 23 ஆம் நாள் முதல் திங்கள் முதல் சனி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த சீரியல் ஆகும். தற்போது, இதன் ஒளிபரப்பு நேரம் மாற்றியமைக்கப்பட்டு, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 10 மணிக்கு டெலிகாஸ்ட் செய்யபப்டுகிறது.

 குடும்பம் சார்ந்த தொலைக்காட்சி நாடகத் தொடரான நினைத்தாலே இனிக்கும் தொடர், ஜீ வங்களா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'மிதை' என்ற தொடரின் மறு ஆக்கம் ஆகும்.

நினைத்தாலே இனிக்கும் மெகா சீரியல் குழு

தமிழில் இந்தத் மெகாத் தொடரை என். பிரியன் இயக்க, சுவாதி சர்மா மற்றும் ஆனந்த் செல்வன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர்கள், நடிகைகள் மாறலாம், ஆனால், பொம்மி, சித்து, பத்மநாபன்,  கிருஷ்ணவேணி, சித்தர், தெய்வநாயகம் என கதாபாத்திரங்கள் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளதால், வெற்றிகரமான சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது.

நினைத்தாலே இனிக்கும் கதை சுருக்கம்
பொம்மி என்ற நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இளம் பெண், இனிப்பு விற்பனையாளராக வேலை பார்க்கிறார். சித்தார்த் குடும்பத்திற்கு இனிப்புகளை விற்கச் செல்லும் பொம்மி காலப்போக்கில், அவர்களின் ஒரு குடும்ப உறுப்பினர் போல மாறி, பிறகு குடும்பத்தில் ஒருவராகிறார். சித்தார்த் என்னும் சித்துவின் மனைவியாகிறார் பொம்மி.

மேலும் படிக்க | தெய்வம் தந்த பூவே அப்டேட்: வினய், மித்ரா இடையே மீண்டும் மோதல், நடக்க போவது என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News