எழில் முடிவால் வருத்தமான கனகவல்லி! சுடர் கழுத்தில் தொங்கும் தாலி! எகிறும் சஸ்பென்ஸ்!

Ninaithen Vandhai Today's Episode Update: எழில் கல்யாணத்தை நிறுத்த சுடர் எடுத்த சபதம்.. அடுத்து நடக்க போவது என்ன? நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட் அப்டேட் 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 26, 2024, 02:07 PM IST
  • எழில் கல்யாணத்தை நிறுத்த சுடர் எடுத்த சபதம்
  • அடுத்து நடக்க போவது என்ன?
  • நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட் அப்டேட்
எழில் முடிவால் வருத்தமான கனகவல்லி! சுடர் கழுத்தில் தொங்கும் தாலி! எகிறும் சஸ்பென்ஸ்! title=

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய்.

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் எழில் மனோகரியை திருமணம் செய்து கொண்டதாக சொன்ன நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, எழில் இந்து போட்டோவை வைத்து கொண்டு நான் எப்படி இப்படி ஒரு முடிவு எடுத்தேன்னு எனக்கே தெரியல என்று வருத்தப்பட்டு பேசுகிறாள். இதை சுடர் மறைந்திருந்து கேட்கிறாள். மறுபக்கம் மனோகரி தனது அப்பாவுக்கு போன் செய்து எழில் தன்னை திருமணம் செய்து கொள்வதாக சொன்ன விஷயத்தை சொல்லி சந்தோசப்படுகிறாள். 

அடுத்து குழந்தைகளும் மனோகரி அப்பாவை திருமணம் செய்து கொள்ள போவதில் விருப்பமில்லாமல் இருக்க சுடர் என்னாச்சி என்று கேட்க அப்பாவுக்கும் மனோகரி ஆன்டிக்கும் கல்யாணமாகிறது எங்களுக்கு சுத்தமா புடிக்கல என்று சொல்ல சுடர் அப்படினா எப்படியாவது இந்த கல்யாணத்த நிறுத்திடலாம் என்று சபதம் எடுக்கிறாள். 

மேலும் படிக்க | கோட் பாடல்: பவதாரிணியின் ஏஐ குரலில் பாடல் உருவானது எப்படி?

பிறகு சுடர் இந்து மற்றும் தீபாவை சந்தித்து எழில் சார் இப்படி கைதாக அந்த மனோகரி தான் காரணமாக இருப்பாங்கன்னு எனக்கு சந்தேகமாக இருக்கு என்று சொல்கிறாள். மறுபக்கம் கனகவல்லி எழில் முடிவால் வருத்தமாக இருக்க ராமையா என்னமா எழில் ஐயா இப்படியொரு முடிவு எடுத்துட்டாரு என்று பேச அவர் அமைதியாகவே இருக்கிறாள். 

பிறகு ராமையா வெளியே வர சுடர் எதிரே வர ராமையா சுடரிடம் இதையே சொல்லி புலம்ப சுடர் இந்த கல்யாணம் நடக்காது, எப்படியாவது நிறுத்திடுவேன் என்று சொல்ல ராமையா எந்த உதவியா இருந்தாலும் என்கிட்ட கேளு நான் செய்யுறேன் என்று சொல்கிறார். 

இறுதியாக எழில் சாப்பிடாமல் இருக்க செல்வி சாப்பாடு கொண்டு போக சுடர் அதை வாங்கி கொண்டு எழில் ரூமுக்குள் நுழைகிறாள். எழிலை சாப்பிட சொல்ல சுடர் சாப்பிட சொல்ல எழிலும் சாப்பிட சுடர் தண்ணீர் எடுக்க கீழே குனியும் போது கழுத்தில் இருக்கு தாலி கீழே தொங்க எழில் அதை பார்த்து விடுவானா இல்லையா என்ற பில்டப் எகிறுகிறது. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தான் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

நினைத்தேன் வந்தாய்: சீரியலை எங்கு பார்ப்பது?

நினைத்தேன் வந்தாய் சீரியல் 2024 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | ‘கோட்’ படத்தின் பட்ஜெட் மட்டும் இத்தனை கோடியா? வாயை பிளக்க வைக்கும் தொகை..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News