நாகசைதன்யாவுடன் வாழ்ந்த வீட்டை வாங்கிய சமந்தா

திருமணமானபோது நாகசைதன்யாவுடன் வசிப்பதற்காக வாங்கிய வீட்டை மீண்டும் அதிக விலை கொடுத்து வாங்கியிருக்கிறார் சமந்தா.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 29, 2022, 03:51 PM IST
  • அதிக விலை கொடுத்து சமந்தா வாங்கிய புதிய வீடு
  • திருமணமானபோது நாகசைதன்யாவுடன் வாழ்ந்த வீடு
  • முரளி மோகன் தெரிவித்த சுவாரஸ்ய தகவல்
நாகசைதன்யாவுடன் வாழ்ந்த வீட்டை வாங்கிய சமந்தா title=

நாகசைதன்யாவுடன் சமந்தா விவகாரத்து பெற்றுவிட்டாலும், அவர்கள் இருவரைப் பற்றிய புதிய தகவல்கள் இணையத்தில் நாள்தோறும் றெக்கைக் கட்டி பறந்து கொண்டே இருக்கிறது. இப்போது, தெலுங்கு திரைப்பட உலகின் மூத்த நடிகர்களில் ஒருவரான முரளி மோகன், சமந்தா பற்றி தெரிவித்திருக்கும் தகவல் வைரலாகியிருக்கிறது. நாகசைதன்யாவுடன் சமந்தா திருமணமான புதியதில், இருவரும் ஒன்றாக இருக்க வீடு ஒன்றை வாங்கியுள்ளனர். அந்த வீட்டில் இருந்து கொண்டே, மிகவும் ஆடம்பரமான வீடு ஒன்றை கட்டிக் கொண்டிருந்த வேளையில் மணமுறிவு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றுக் கொண்டனர்.

மேலும் படிக்க | ராகவா லாரன்ஸ் பாதையில் விஜய் சேதுபதி! கை கொடுக்குமா திகில்

இதன் பின்னர், அந்த வீட்டையும் சமந்தா மற்றும் நாகசைதன்யா விற்பனை செய்தனர். சிறிது காலம் பிரேக் எடுத்துக் கொண்ட சமந்தா, தீவிரமாக திரைப்படத் துறையில் மீண்டும் நடிக்க களமிறங்கினார். புஷ்பா படத்தில் ‘ஊ சொல்றியா மாமா’ பாடலுக்கு கிளாமரில் குத்தாட்டம் போட்ட அவர், அடுத்ததாக தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் என அடுத்தடுத்து புதிய படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படியான சூழலில் நாகசைதன்யாவுடன் ஒன்றாக வாழ்ந்த வீட்டை மீண்டும் அதிக பணம் கொடுத்து வாங்கியிருக்கிறாராம் நடிகை சமந்தா. பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் மற்றும் தயாரிப்பாளர் முரளி மோகன், நாகசைதன்யாவுடன் வாழ்ந்த வீட்டை சமந்தா வாங்கிய தகவலை பகிர்ந்து கொண்டார்.

விவகாரத்துக்குப் பின்னர் பல வீடுகள் தேடியும், சமந்தாவுக்கு பிடித்தமான வீடுகள் அமையவில்லையாம். மீண்டும் அதே வீட்டை வேண்டும் என்று கேட்கும்போது, அந்த வீட்டை வாங்கியவர் அதிக விலை கூறியிருக்கிறார். விலையைப் பற்றி கவலைப் படாத சமந்தா, வீடு வாங்கியவர் கேட்ட பணத்தை கொடுத்து அந்த வீட்டை மீண்டும் வாங்கியதாக முரளி மோகன் தெரிவித்திருக்கிறார். வீடு வாங்கியவர் தனக்கு தெரிந்தவர் என்பதால், அவரிடம் பேசி இந்த வீட்டை சமந்தாவுக்கு வாங்கிக் கொடுத்தாகவும் முரளி மோகன் கூறியிருக்கிறார். தற்போது அந்த வீட்டில் தாயுடன் சமந்தா தங்கியிருக்கிறாராம். 

மேலும் படிக்க | பிக்பாஸ் அனிதா சம்பத் வாங்கியுள்ள புதிய பிரம்மாண்ட வீடு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News