விஜய் வழியை பின் தொடரும் சிம்பு! இந்த விசயத்திலுமா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிலம்பரசன் டிஆர் பத்துதல படத்தின் வெற்றியை தொடர்ந்து, இன்று தனது வீட்டில் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து உரையாடினார்.   

Written by - RK Spark | Last Updated : Apr 18, 2023, 06:05 PM IST
  • ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்த சிம்பு.
  • தனது வீட்டில் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து உரையாடினார்.
  • புகைப்படம் எடுத்துக்கொண்டு தனது அன்பை பகிர்ந்து கொண்டார்.
விஜய் வழியை பின் தொடரும் சிம்பு! இந்த விசயத்திலுமா? title=

நடிகர் சிலம்பரசன் இன்று சென்னையில் உள்ள தனது வீட்டில் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து உரையாடினார். பின்பு அவர்களுக்கு பிரியாணி விருந்து வைத்து தன் கையாலேயே பரிமாறியிருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளன.  கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ படத்தில் உடல் எடை காரணமான நடிகர் சிம்பு பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டார். இதையடுத்து தீவிர உடற்பயிற்சியின் மூலம் உடல் எடையை குறைத்த சிம்புவின் நடிப்பில் 2021-ம் ஆண்டு ‘ஈஸ்வரன்’ படம் வெளியானது. படம் ஓரளவு வரவேற்பை பெற்றது. அடுத்து வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த ‘மாநாடு’ சிம்புவுக்கு மிகப் பெரிய கம்பேக்காக அமைந்தது. மாநாடு படத்தின் வெற்றி சமயத்தில் ரசிகர்களை சந்திக்க அவர் திட்டமிட்டார்.  ஆனால் அப்போது கொரோனா பரவல் காரணமாக அந்த சந்திப்பு ரத்தானது.

மேலும் படிக்க: நடிகை இலியானா கர்ப்பம்..‘எப்புட்ரா’? ஷாக் ஆன ரசிகர்கள்

அடுத்து கடந்த ஆண்டு ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் நடித்திருந்தார். அந்தப் படமும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று தந்தது. இதையடுத்து கடந்த மார்ச் 30-ம் தேதி சிம்புவின் ‘பத்து தல’ படம் வெளியாகி அவரது நடிப்பு பாராட்டப்பட்டது. இந்நிலையில், தொடர் படங்களின் வெற்றியால் குஷியிலிருக்கும் சிம்பு இன்று சென்னையில் ரசிகர்களை சந்தித்து பேசியுள்ளார். இதையடுத்து ரசிகர்களுக்கு பிரியாணி விருந்து பரிமாறியிருக்கிறார். ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ஏராளமான ரசிகர்களும் கலந்துகொண்ட இந்நிகழ்வில், ரசிகர் மன்ற மாவட்ட தலைவர்கள் மற்றும் ரசிகர்களுடன் கலந்துரையாடி புகைப்படம் எடுத்துக்கொண்டார் சிம்பு.

சிம்பு  அடுத்ததாக கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்க உள்ளார்.  இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  தேசிங்கு பெரியசாமி ரஜினியிடம் கதை சொல்லி ஓகே செய்து வைத்திருந்ததாகவும், பிறகு அந்த படம் கைவிடப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது.  சமீபத்தில் தாய்லாந்து சென்று வந்த சிம்பு மிகவும் புத்துணர்ச்சியுடன் காணப்படுகிறார்.  

மேலும் படிக்க: அடங்கேப்பா... ரிலீஸ்க்கு முன்பே வசூலை குவிக்கும் பொன்னியின் செல்வன் 2!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News