விபத்தா..? கொலையா..? 19 வருடங்கள் கடந்தும் தீர்க்க முடியா மர்மமாக செளந்தர்யாவின் மரணம்..!

HBD Soundarya: பிரபல நடிகை செளந்தர்யாவிற்கு பிறந்தநாள் இன்று. இவர் 2004ஆம் ஆண்டு விமான விபத்தில் உயிரிழந்தார். ஆண்டுகள் பல கடந்தும் இன்றளவும் தீர்க்க முடியாத மர்மமாக விளங்குகிறது இவரது மர்மம். 

Written by - Yuvashree | Last Updated : Jul 18, 2023, 01:40 PM IST
  • தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக விளங்கியவர் சௌந்தர்யா.
  • 12 வருடங்களில் 100 படங்கள் நடித்தார்.
  • சௌந்தர்யாவுக்கு இன்று பிறந்தநாள்.
விபத்தா..? கொலையா..? 19 வருடங்கள் கடந்தும் தீர்க்க முடியா மர்மமாக செளந்தர்யாவின் மரணம்..! title=

தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழி படங்களில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர், சௌந்தர்யா. இவரது உண்மையான பெயர் சௌமியா. இவர், 20 வருடங்களுக்கு முன்னர் இந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக விளங்கியவர். 2004ஆம் ஆண்டு நடந்த ஹெலிக்காப்டர் விபத்தில்  உயிரிழந்தார். இவருக்கு இன்று பிறந்தநாள். இந்த நாளில் இவர் மரணத்தில் ஏற்பட்டுள்ள அவிழ்க்க முடியாத முடிச்சு குறித்தும் அவர் நடித்த படங்கள் குறித்தும் பார்ப்போம். 

மூன்று திரையுலகின் முன்னணி நடிகை..

நடிகை சௌந்தர்யா, கர்நாடகாவில் பிறந்து வளர்ந்தவர். இவரது அப்பா, கன்னட திரையுலகில் மிகப்பெரிய தொழிலதிபராகவும் தயாரிப்பாளராகவும் விளங்கியவர். நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் தனது மருத்துவ படிப்பை பாதிலேயே நிறுத்திவிட்டு நடிக்க ஆரம்பித்தார். ஆரம்ப கால சினிமா வாழ்க்கையின் போது கன்னட படங்களில் நடித்து வந்த இவர், கொஞ்சம் கொஞ்சமாக பிறமொழி படங்களிலும் நடிக்க தொடங்கினார். தெலுங்கு, தமிழ், இந்தி மற்றும் மலையாள திரையுலகில் பிரபல நடிகையாக விளங்கினார். குறிப்பாக கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் மொழியில் முன்னணி நடிகையாக திகழ்ந்தார். 

மேலும் படிக்க | ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மானை விட அதிகம் சம்பளம் வாங்கும் அனிருத்..!

12 வருடத்தில் 100க்கும் மேற்பட்ட படங்கள்..!

மூன்று திரையுலகிலும் ஒரு ரவுண்டு வந்த செளந்தர்யா, தன் இளமை காலத்திலேயே சினிமாவில் நடிக்க வந்து விட்டதால் இவருக்கு தொடர்ந்து படவாய்ப்புகள் குவிந்து கொண்டே இருந்தது. இவர் நடித்த படங்களும் தொடர்ந்து ஹிட் அடித்தன. இவர், 12 வருடத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டார். ரஜினிகாந்துடன் அருணாச்சலம் மற்றும் படையப்பா ஆகிய படங்களிலும் நடிகர் கமல்ஹாசனுடன் காதலா காதலா ஆகிய படத்திலும் நடித்துள்ளார். இதே போல கன்னடம் மற்றும் மலையாளத்திலும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். 

கடைசி படம்..!

ஃபேண்டசி-த்ரில்லர் பாணியில் உருவான படம், மதுமதி. இதில், நடிகை செளந்தர்யா கதாநாயகியாக நடித்திருந்தார். தமிழில் மதுமதி என்ற பெயரிலும் தெலுங்கில் ஸ்வேதா நாகு என்ற பெயரிலும் இப்படம் வெளியானது. இந்த படத்தில் அபாஸ், சரத்பாபு, பிரம்மானந்தர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். விபத்தில் சிக்குவதற்கு முன்னர் இவர் நடித்த கடைசி படம் இது. 

உயிரிழப்பு..

திரையுலகையே ஆட்சி செய்து வந்த சௌந்தர்யா, 2004ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். இவர் கட்சியில் இணைந்த நேரம் தேர்தல் நடைபெற இருந்தது. அதனால், தேர்தல் பிரச்சாரங்கள் மக்களை சந்தித்தல் என பிசியாக இருந்தார். பிற கட்சிப்பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்திற்காக சௌந்தர்யா தனது சகோதரருடன் ஹெலிக்காப்டரில் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக இவர்கள் பயணம் செய்து கொண்டிருந்த விமானம் காந்தி க்ரிஷி விஜயன் கேந்த்ரா என்ற பகுதியில் விபத்துக்குள்ளானது. தரையிரங்குவதற்கு 100 அடி இருக்கும் போது இந்த விபத்து நேர்ந்து விமானம் வெடித்தது. இன்று வரை இவரது சாவில் மர்மம் இருப்பதாக பலர் சந்தேகிக்கின்றனர். இவர் பாஜக-வில் இணைந்தது கர்நாடக அரசியலில் ஆதிக்கம் செலுத்திய சில கட்சிகளுக்கு பிடிக்கவில்லை இதுகுறித்து அவர்கள் செளந்தர்யாவை பலமுறை எச்சரித்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது. எனவே, இந்த விபத்து சிலரது திட்டமிட்ட சதியாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இறக்கும் போது அவர் கர்பிணியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கடைசியாக கேட்ட இரண்டு பொருட்கள்..

நடிகை சௌந்தர்யா, தான் இறப்பதற்கு முன்னர் தனது அண்ணனின் மனைவியிடம்  (அண்ணி) பேசியுள்ளார். அப்போது தனக்கு காட்டன் புடவையும் குங்குமமும் வேண்டும் என கேட்டாராம். இதை, சௌந்தர்யாவின் அண்ணி சமீபத்தில் ஒரு நேர்காணலில் நினைவு கூர்ந்தார். நடிகை குறித்து உருக்கமாக பேசிய அவர், இந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டார்.

மேலும் படிக்க | ‘மயக்க மருந்து கொடுத்து என்னை கெடுக்க பார்த்தார்’ பிரபல நடிகை பகிர்ந்த ‘பகீர்’ அனுபவம்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News