கடைசி நேரத்தில் ட்விஸ்ட் அடித்த வாரிசு படக்குழு! முக்கிய மாற்றம்!

வாரிசு படக்குழு தனது படத்தை 11ம் தேதி வெளியிடாமல் 10ம் தேதியன்று அதாவது இன்றைய தினம் இரவு ஒரு சிறப்பு காட்சியினை வெளியிட திட்டமிட்டு இருக்கிறது.  

Written by - RK Spark | Last Updated : Jan 10, 2023, 11:15 AM IST
  • ஜன. 11 நள்ளிரவு 1 மணிக்கு துணிவு ரிலீஸ்.
  • ஜன. 11 அதிகாலை 4 மணிக்கு வாரிசு ரிலீஸ்.
  • இரு படங்களின் டிக்கெட்டுகளுக்கும் கடும் கிராக்கி.
கடைசி நேரத்தில் ட்விஸ்ட் அடித்த வாரிசு படக்குழு! முக்கிய மாற்றம்! title=

இந்த ஆண்டின் பொங்கல் பண்டிகை ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்ட காலமாக அமையவிருக்கிறது.  தமிழ் சினிமாவின் இரண்டு பெரிய நட்சத்திரங்களான விஜய் மற்றும் அஜித்தின் படங்கள் வெளியாகவுள்ளது.  கடந்த சில வாரங்களாகவே வாரிசு பொங்கலா, துணிவு பொங்கலா என்று சமூக வலைதளங்களில் சண்டையிட்டு வருகின்றனர்.  பொங்கல் பண்டிகை தினத்தில் படத்தை வெளியிடுவதாக முதலில் வாரிசு படக்குழு தான் அறிவித்தது, அதன் பின்னர் தான் துணிவு படக்குழு படத்தின் வெளியீட்டை அறிவித்தது.  அதன் பின்னர் இரண்டு படங்களும் ஜனவரி 12ம் தேதியன்று வெளியாகப்போவதாக கூறப்பட்டது.  இதனை தொடர்ந்து வாரிசு படத்தின் ட்ரைலர் வெளியானதும், துணிவு படக்குழு படத்தை ஜனவரி 11ம் தேதியன்று வெளியிடுவதாக அறிவித்தது.  வாரிசு படத்தை கண்டு துணிவு படம் அஞ்சுகிறதா என நெட்டிசன்கள் கிண்டலடித்து வந்தனர்.

மேலும் படிக்க |  வாரிசு படத்திற்கு விஜய் வாங்கிய சம்பளம்..! குஷ்பூ-வுக்கு மட்டும் லட்சத்தில்

இதனையடுத்து அன்று இரவே வாரிசு படக்குழுவும் தங்கள் படத்தை ஜனவரி 11ம் தேதியன்று வெளியிடப்போவதாக அறிவித்தது.  இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாவதால் திரைகளை ஒதுக்குவதில் சிக்கல் இருந்துகொண்டே வந்தது.  வாரிசு படத்திற்கு அதிகாலை 4 மணிக்கு முதல் கட்சியும், துணிவு படத்திற்கு இரவு 1 மணிக்கு முதல் காட்சியும் ஒதுக்கப்பட்டது.  வாரிசு படத்திற்கு முன்னதாக துணிவு படத்திற்கு திரையை ஒதுக்கியது விஜய் தரப்புக்கும், படக்குழுவும் மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.  அதுமட்டுமல்லாது இதனால் படத்தின் முதல் காட்சிக்கான வசூலிலும் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும் படக்குழுவினர் கருதிய நிலையில் தற்போது ஒரு பெரிய முடிவை வாரிசு படக்குழு எடுத்திருக்கிறது.

அதாவது வாரிசு படக்குழு தனது படத்தை 11ம் தேதி வெளியிடாமல் 10ம் தேதியன்று அதாவது இன்றைய தினம் இரவு ஒரு சிறப்பு காட்சியினை வெளியிட திட்டமிட்டு இருக்கிறது.  இந்த முதல் காட்சிக்கு ஊடகங்களை சேர்ந்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பிரத்யேக அழைப்பு விடுக்கப்பட்டு, இவர்களுக்கு படத்தை திரையிட்டு காட்டவுள்ளது.  இதுவரையில் இதுபோன்று எந்தவொரு பெரிய நடிகரின் படத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டதில்லை, இதுபோன்று சிறப்பு காட்சி வெளியிடப்படுவது இதுவே முதன்முறையாகும்.  அதுமட்டுமல்லாது இதுவரை விஜய்யின் திரை பயணத்திலும் இதுபோன்று செய்யப்படுவது இதுவே முதல் முறை என்றும் கூறப்படுகிறது.  இந்த செய்தி ஊடகங்களில் விவாத பொருளாக மாறினாலும் மாறலாம் என்பதில் சிறிதும் சந்தேகத்திற்கிடமில்லை.

மேலும் படிக்க |  துணிவு vs வாரிசு டிக்கெட் விலை! ரூ.750 - ரூ.2000..! ரசிகர்களுக்கு பிம்பிலிக்கா பிலாபி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News