44 வயதாகியும் திருமணம் செய்யாத பிரபாஸ்..காரணம் என்ன? ராஜமெளலி கூறிய பதில்..

பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் 40 கலை கடந்தும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். இதற்கான காரணம் குறித்து பிரபல இயக்குனர் ஒருவர் பேசியிருக்கிறார்.   

Written by - Yuvashree | Last Updated : Jun 13, 2024, 12:58 PM IST
  • பிரபாசிற்கு 44 வயதாகிறது
  • இன்னும் திருமணம் செய்யாதது ஏன்?
  • ராஜமௌலி கூறிய பதில்!
44 வயதாகியும் திருமணம் செய்யாத பிரபாஸ்..காரணம் என்ன? ராஜமெளலி கூறிய பதில்.. title=

தென்னிந்திய திரை உலகை தாண்டி இந்திய அளவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராகவும், உலக அளவில் பிரபலமான நடிகராகவும் இருப்பவர் பிரபாஸ். டோலிவுட்டில், ஆக்சன் நாயகனாக இருந்த இவர் அவ்வப்போது காதல் படங்களிலும் நடித்து வந்தார். இவருக்கு ரசிகர்கள் ரிபெல் ஸ்டார் எனும் பட்டத்தையும் கொடுத்திருக்கின்றனர். இவன் நடிப்பில் வெளிவந்த பெரும்பாலான படங்கள் சண்டை படங்களாகவும் அல்லது சாகசம் நிறைந்த படங்களாகவோ தான் இருந்திருக்கின்றன. இவர் நடித்த சில படங்கள் தமிழிலும் ரீமேக் செய்யப்பட்டு வெளிவந்திருக்கின்றன. தெலுங்கு பட தயாரிப்பாளரின் மகனான இவர், சென்னையில் தான் பிறந்தார். 2002 ஆம் ஆண்டு திரையுலத்திற்குள் நுழைந்த இவர் படிப்படியாக முன்னணி நடிகராக வளர்ந்து விட்டார். 

பாகுபலி பட நாயகன்: 

அனைத்து ஹீரோக்களின் வாழ்க்கையிலும் அவர்களின் வாழ்வையே புரட்டிப்போடும் ஒரு படம் வெளியாகும். அப்படி பிரபாஸுக்கு வெளியான படம் தான் பாகுபலி. அதுவரை பெரிதாக தென்னிந்திய அளவில் பிரபலமாகாமல் இருந்த இவர், பாகுபலி படம் மூலமாக அப்படத்தின் நாயகனாகவே உலக அளவில் அறியப்பட்டார்.  இந்த படத்தை ராஜமௌலி இயக்கியிருந்தார். எந்திரன் படத்திற்கு பிறகு இந்திய சினிமாவில் அதிக பட்ஜெட்டில் வெளிவந்த படம் இது என்று கூறப்பட்டது. இந்த படத்திற்கு பிறகு அவருக்கு பாலிவுடிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 

பாகுபலி படம் மூலம் பெரிய பட்ஜெட் ஹீரோவாக மாறிய இவர், தொடர்ந்து 100 கோடி குறைவாக இருக்கும் படத்தில் நடிப்பதே இல்லை. ஆனால் அவர் நடிக்கும் படங்கள் பல தொடர்ந்து சரிவை சந்தித்து வந்தன. கடைசியாக பிரபாஸ் நடித்திருந்த சலார் படமும் தமிழ்நாட்டில் தோல்வியடைந்தது. தற்போது இவர் நடிப்பில் கல்கி 2898 எனும் படம் உருவாகி வருகிறது. 

மேலும் படிக்க | சலார் படத்தில் பிரபாஸ் வாங்கிய சம்பளம் மட்டும் இவ்வளவா..!

திருமணம் செய்து கொள்ளவில்லை: 

சல்மான் கான் தொடங்கி சிம்பு வரை பல முன்னணி நடிகர்கள் 40களை கடந்தும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கின்றனர். அப்படி திருமணம் செய்து கொள்ளாதவர்கள் ஒருவர் பிரபாஸ். இவருக்கு தற்போது 44 வயதாகிறது. இந்த வயதிலும் இவர் ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று ரசிகர்களும் கேள்வி எழுப்பு வருகின்றனர். இதற்கு ராஜமௌலி ஒரு பதிலை அளித்திருக்கிறார். 

பிரபாசின் திருமணம் குறித்து பேசி இருக்கும் ராஜமௌலி, அவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாததற்கு காரணம் சோம்பேறித்தனம் தான் என்றும், இவர் இப்படி சோம்பேறியாக இருப்பதால் ஒரு பெண்ணை கண்டுபிடித்து பெற்றோரிடம் பேசுவது அவருக்கு அதிக வேலையாக இருப்பதாகவும் அதனால் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என நினைப்பதாகவும் கூறியிருக்கிறார். 

காதல் தோல்வியா? 

நடிகர் பிரபாஸ் அனுஷ்காவும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அனுஷ்காவும் தனது நாற்பதுகளை கடந்தும் இன்னும் திருமணம் செய்து  கொள்ளாமல் இருக்கிறார். இந்த காதல் தோல்வி காரணமாகத்தான் இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லையோ என ரசிகர்கள் சந்தேகித்து வருகின்றனர். 

மேலும் படிக்க | Prabhas : நடிகர் பிரபாஸிற்கு திருமணம்!? மணப்பெண் இவரா? வைரலாகும் இன்ஸ்டா பதிவு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News