நியூ என்ட்ரி கொடுக்கும் மாயா.. பழனிக்கு காத்திருந்த அதிர்ச்சி

Amudhavum Annalakshmiyum August 15 Update: நியூ என்ட்ரி கொடுக்கும் மாயா.. பழனிக்கு காத்திருந்த அதிர்ச்சி - அமுதாவும் அன்னலட்சுமியும் இன்றைய எபிசோட் அப்டேட் 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 15, 2023, 12:16 PM IST
  • அமுதாவும் அன்னலட்சுமியும்: சீரியலை எங்கு பார்ப்பது?
  • அமுதவும் அன்னலட்சுமியும் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.
  • இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.
நியூ என்ட்ரி கொடுக்கும் மாயா.. பழனிக்கு காத்திருந்த அதிர்ச்சி title=

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்: தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘அமுதாவும் அன்னலட்சுமியும்' சீரியல்.

அமுதாவும் அன்னலட்சுமியும்: இன்றைய எபிசோட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் அமுதா பரிகாரம் செய்து கொண்டிருக்க, மாணிக்கம் போன் செய்ய அமுதா பதட்டத்துடன் போனை எடுத்த நிலையில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, மாணிக்கம் செந்தில் கண் விழித்து விட்டான் என சொல்ல, அமுதாவும் அன்னலட்சுமியும் ஆஸ்பிடலுக்கு வந்து செந்திலை பார்த்து மகிழ்கின்றனர். 

மேலும் படிக்க | என்ட்ரி கொடுக்கும் சண்முகத்தின் அம்மா.. சூடு பிடிக்கும் அண்ணா சீரியல்

பழனியும் மாணவனின் தந்தையிடம் அப்படி இப்படின்னு எவ்ளோ தடுத்து அந்த பணத்தை ரெடி பண்ணி கொண்டு போய் கொடுத்து அந்த செந்திலை காப்பாத்திட்டாலே நான் தோத்துட்டேனே என்று சொல்ல ரகுபதி விடுங்க சார் சாதாரண பிச்சைக்கார குடும்பம், நமக்கு இன்னொரு சான்ஸ் கிடைக்காமையா போகும்? எனக்கு வர ஆத்திரத்துக்கு அந்த அமுதா செந்தில் அன்னலட்சுமி அத்தனை பேரையுமே அந்த வீட்டை விட்டு அடிச்சு துரதத்தணும்னு தான் ஆசை அதுக்காக தான் காத்திருக்கேன் என்று சொல்ல மாணவனின் தந்தை இதுல வேணா அந்த அமுதா ஜெயிச்சி இருக்கலாம் இன்னொரு சான்ஸ் கிடைக்காம போகும் கிடைக்கட்டும் அப்ப வச்சு செஞ்சிடலாம் என்று சொல்ல பழனி மைண்ட் வாய்ஸில் அமுதா இன்னொரு சான்ஸ் கிடைக்கட்டும் டி அப்ப நான் உன்னை ஜெயிச்சு காட்றேன் என்று மனதுக்குள் சொல்லிக் கொள்கிறான். 

ஆஸ்பத்திரியில் செந்தில் தலையில் கட்டுடன் நிமிர்ந்து இருக்க அமுதா ஜூஸ் போட்டு குடுத்துக் கொண்டிருக்க அன்னலட்சுமி பக்கத்தில் இருக்க அப்போது செந்தில் ஸ்கூல் போலயா அமுதா என்று கேட்க இல்லைங்க லீவு சொல்லிட்டேன் உங்க பக்கத்தில் இருந்து பார்த்துக்கொள்வதை விட எனக்கு வேற என்ன முக்கியம் என்று சொல்ல அப்படி எல்லாம் எதுவும் யோசிக்காத உன் படிப்பு தான் முக்கியம் என்று சொல்ல அன்னலட்சுமி ஆமாம் நீ படிக்கணும் என்று சொல்ல கண்டிப்பா அத்தை எனக்கு படிப்பு முக்கியம் அதே சமயம் இவங்க உடலும் முக்கியம் என சொல்கிறாள். 

அப்போது மாணிக்கம் டாக்டரை அழைத்துக் கொண்டு உள்ளே வர டாக்டர் ரிப்போர்ட் எல்லாம் பார்த்துவிட்டு ஒன்னும் இல்ல ஓரளவுக்கு நல்லா ரெக்கவர் ஆயிடுச்சு நீங்க வேணா டிஸ்சார்ஜ் பண்ணி கூட்டிட்டு போலாம் என்று சொல்ல உடனே சந்தோஷமாக அமுதா சரிங்க சார் நான் இப்பவே டிஸ்சார்ஜ் பண்ணிக்கிறேன் தாராளமா கூட்டிட்டு போங்க மண்டையில் அடிபட்டு இருக்கிறதுனால கொஞ்சம் உஷாரா பாத்துக்கோங்க டேப்லட் மட்டும் கண்டிப்பா கொடுத்துடுங்க ஏதாவது இருந்துச்சுன்னா ஹாஸ்பிடலுக்கு வாங்க என்று சொல்ல சரிங்க டாக்டர் என்று சொல்ல அன்னலட்சுமி அப்பா இனிமே நமக்கு வந்த பிரச்சனை எல்லாம் தீர்ந்துடுச்சு, இனி நிம்மதியா இருக்கலாம் என்று சொல்ல அமுதா சிரிக்கிறாள். 

இன்டர் கட்டில் கோவிலில் மாயா என்ற கதாபாத்திரம் அறிமுகமாகிறது. மாயா கோவில் பூசாரியிடம் பூஜை கொடியை கொடுத்து பூஜை பண்ண சொல்ல பூசாரி யார் பேருக்கு என்று கேட்க செந்தில் என்று பெயரை சொல்ல மாயா கதாபாத்திரத்திற்கு அறிமுகம் செய்யப்படுகிறது. 

சாமி கும்பிட்டு விபூதியை எடுத்து நெற்றியில் வைத்துக்கொண்டு கோவிலை சுற்றி ஒரு இடத்தில் வந்து அமர்கிறாள். ஆட்டோவில் செந்தில் அமுதா அன்னலட்சுமி மூவரும் வந்து கொண்டிருக்க அப்போது அமுதா அத்த கோயிலுக்கு போயிட்டு அவங்க பேர்ல ஒரு அர்ச்சனை பண்ணிட்டு போயிடலாமா என்று சொல்ல தாராளமா என்று சொல்ல ஆட்டோ கோவில் வந்து நிற்கிறது. 

அந்த கோயிலில் பின் பகுதியில் மாயா அமர்ந்திருக்க செந்தில் அமுதா அன்னலட்சுமி மூவரும் கோயிலுக்கு வர அதை மாயா பார்க்காமல் அமர்ந்திருக்கிறாள். கோயிலுக்கு உள்ளே வந்த மூவரும் கோயில் சாமி கும்பிட்டு அமுதா செந்திலுக்கு விபூதி வச்சு விட அப்போது அன்னலட்சுமி ஒரு தேங்காய் வாங்கி வர செந்திலை சுற்றி போடலாம் என்று செந்திலை சுற்றி போடுவது அப்போது மாயா எழுந்து வரும்போது அமுதா தேங்காய்வை வாங்கி உடைக்க, அப்போது ஒரு சில் அதிலிருந்து சிதறி போய் மாயா நெற்றியில் படுகிறது. ஆனால் மூவரும் இதை கவனிக்காமல் அங்கிருந்து கிளம்பி செல்கின்றனர். 

அடுத்ததாக மாயா செந்தில் ட்ரீட்மெண்ட் எடுத்த ஹாஸ்பிடல் வந்து நர்ஸ் உடையில் ரூமிலிருந்து வர அப்போது மாயா ஏதாவது முக்கியமான கேஸ் வந்ததா என்று கேட்க செந்தில் குறித்து கேட்க போட்டோ ஏதாவது இருக்கா என்று கேட்கிறாள், கையெழுத்தை எடுத்து காண்பிக்கின்றனர். இவளது முகம் மாறுகிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன என்பதை குறித்து அறிய அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | சீதா ராமன் அப்டேட்: சீதாவின் வலையில் சிக்கிய மகா.. சுபாஷால் நடந்த மேஜிக்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News