எழிலை கட்டிப்பிடித்த சுடர்..கடுப்பான மனோகரி! நினைத்தேன் வந்தாய் குளுகுளு எபிசோட்..

Ninaithen Vandhai Serial Update : எழிலுடன் லிஃப்ட்டில் சிக்கிய சுடர்.‌.. கட்டிபிடி வைத்திருந்தால் கடுப்பான மனோகரி! என்ன நடந்தது? நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட் அப்டேட்.  

Written by - Yuvashree | Last Updated : Mar 7, 2024, 02:25 PM IST
  • ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் தொடர், நினைத்தேன் வந்தாய்
  • இன்றைய எபிசோடில் ஒரு குளுகுளு காட்சிகள்தான்
  • என்ன நடக்க இருக்கிறது? இங்கு பார்ப்போம்!
எழிலை கட்டிப்பிடித்த சுடர்..கடுப்பான மனோகரி! நினைத்தேன் வந்தாய் குளுகுளு எபிசோட்.. title=

Ninaithen Vandhai Serial Update Today : தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினேத்தேன் வந்தாய். 

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சுடர் எழிலுக்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு ஹாஸ்பிடல் கிளம்பிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, ஒரு பெண் பிரசவ வலியில் துடிக்க அவளுடைய கணவன் வராமல் இருக்க நீ வந்தா தான் ஆபரேஷன் நடக்கும் என சொல்லி விட அவன் வந்த பிறகு நீ எல்லாம் எதுக்கு கல்யாணம் பண்ண என திட்டுகிறான். 

இதையடுத்து தமிழ் சாப்பாடு கொண்டு வர எழில் நீ‌ எதுக்கு வந்த என்று கேட்க ராமையா இல்லாததால் சாப்பாடு கொண்டு வந்ததாக சொல்கிறாள். ஆனால் ஏழில் நீ இங்க எல்லாம் வர கூடாது என திட்டி லிப்டுக்குள் செல்ல சுடரும் உள்ளே வந்து விடுகிறாள். 

Ninaithen Vandhai

திடீரென்று லிஃப்ட் ஆஃப் ஆக எழில் மனோகரிக்கு போன் போட்டு விஷயத்தை சொல்ல அவள் கூட தமிழ் இருப்பதை தெரிந்து பயங்கர கடுப்பாகிறாள். வேகவேகமாக லிப்டை ரெடி பண்ண லிஃப்ட் ஆன் ஆனதும் கேட்ட சத்தத்திற்கு பயந்து தமிழ் எழிலை கட்டி பிடிக்க கதவு திறக்க இதை பார்த்து மனோகரி மேலும் அதிர்ச்சி அடைகிறாள். 

மேலும் படிக்க | Ajith Kumar : அஜித்குமார் மருத்துவமனையில் அனுமதி! அய்யய்யோ என்னாச்சு? ரசிகர்கள் பதற்றம்..

தமிழை பிடித்து நீ வேணும்னு தான் இதையெல்லாம் பண்ணியிருக்க என்று திட்ட சுடர் எனக்கு என்ன ஆசையா என பதிலடி கொடுத்து அங்கிருந்து நகர்கிறாள். 

Ninaithen Vandhai

இரவு இடி மின்னலுடன் மழை பெய்ய அஞ்சலிகள் பயத்தில் தூங்காமல் வெளியே வர இங்கே ரூமில் இந்துமதி தாலியை பார்த்து தூக்கம் வராமல் இருக்கும் சுடரும் எழுந்து வர அஞ்சலியை பார்த்து பயப்படாத என்கூட வந்து படுத்துக்க என்று கூட்டிச்சென்று இந்துமதியை போல அஞ்சலியை தூங்க வைக்கிறாள். 

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | பிக்பாஸ் பூர்ணிமா நடித்துள்ள 'நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News