விஷம் குடிக்கும் விஜய்... விக்ரம், மகாவுக்கு தெரியவரும் காதல் விவகாரம் - திருப்பங்களுடன் சண்டக்கோழி சீரியல்

Zee Tamil Sandakozhi Serial Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் சண்டகோழி சீரியலில் இந்த வாரம் நடக்கப்போவது என்ன என்பதை இதில் காணலாம்.   

Written by - Sudharsan G | Last Updated : Jun 7, 2023, 04:24 PM IST
  • விஜய் விஷம் குடித்ததை அடுத்து ஐஸ்வர்யாவும் தற்கொலை முயற்சி.
  • மருத்துவமனையில் இரு குடும்பத்தினருக்கும் தகராறு ஏற்படுகிறது.
  • மூன்று பேரில் விஜயை காதலிப்பது யார் என்ற சந்தேகமும் எழுகிறது.
விஷம் குடிக்கும் விஜய்... விக்ரம், மகாவுக்கு தெரியவரும் காதல் விவகாரம் - திருப்பங்களுடன் சண்டக்கோழி சீரியல் title=

Zee Tamil Sandakozhi Serial Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல், சண்டக்கோழி. இந்த சீரியலில் கடந்த வாரம் ஐஸ்வர்யாவுக்கு நிச்சயம் நடந்து முடிந்த நிலையில் இந்த வாரம் இந்த சீரியலில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது ஐஸ்வர்யாவுக்கு நிச்சயம் முடிந்ததால் விஜய் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்ய இந்த விஷயம் அறியும் விக்ரம் அவனை மருத்துவமனையில் அனுமதிக்க உறவினர்கள் மூலமாக இது குறித்த தகவல் மகா குடும்பத்துக்கு தெரிய வருகிறது. 

தற்கொலைக்கு முயன்ற ஐஸ்வர்யா

இதனால் ஐஸ்வர்யாவை தவிர்த்து எல்லாரும் விஜயை பார்க்க ஹாஸ்பிடல் கிளம்புகின்றனர். வீட்டில் தனியாக இருக்கும் ஐஸ்வர்யா, விஜயின் இந்த நிலைக்கு நான் தான் காரணம் என தற்கொலைக்கு முயல மகா அவளை காப்பாற்றுகிறாள். 

Zee Tamil Serialஇனி எந்த உறவும் இல்லை

இதனையடுத்து ஹாஸ்பிடலில் மகா விக்ரமிடம் விஐய் குறித்து விசாரிக்க அது அப்படியே வாக்குவாதமாக மாறி கடைசியில் கடும் சண்டையில் சென்று முடிகிறது, இரண்டு குடும்பமும் இனி எந்த உறவும் இல்லை என பிரிந்து செல்கின்றனர். 

மேலும் படிக்க | புஷ்பா செய்த சதியால் சக்திக்கு அதிர்ச்சி..மீனாட்சி பொண்ணுங்க தொடரில் இத்தனை ட்விஸ்டா!

விஜயை காதலிப்பது யார்?

இப்படியான நிலையில் அடுத்ததாக ஐஸ்வர்யா யாருக்கும் தெரியாமல் விஜயை சந்திக்க அப்போது விஜய் அவளின் போன் நம்பரை வாங்கி தொடர்ந்து அவளிடம் பேச தொடங்குகிறான், விக்ரம் விஜயிடம் நீ யாரை காதலிக்கிற என்று கேட்க அவன் ஐஸ்வர்யா சம்மதம் சொல்லாததால் உண்மையை மறைத்து விட விக்ரம் போன் கால்களை டிராக் செய்து பார்க்க மகா வீட்டில் இருந்து அடிக்கடி போன் வந்திருக்கு என்பதை கண்டு பிடிக்கிறான். அதே சமயம் மூன்று பேரில் விஜயை காதலிப்பது யார் என்ற சந்தேகமும் எழுகிறது. \

Zee Tamil Serial

மிஸ் பண்ணாதீங்க!

அதே போல் விக்ரம் கேட்கும் கேள்விகளால் ஒரு கட்டத்தில் மகாவுக்கும் ஐஸ்வர்யாவின் காதல் குறித்து தெரிய வருகிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன? விஜய் ஐஸ்வர்யா காதல் என்னவாகும் என்ற கோணத்தில் சீரியல் கதைக்களம் நகர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே சண்டக்கோழி சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | ‘நண்பன்னாலே நல்லவன்தான்..’தளபதி முதல் நண்பன் வரை-நட்புணர்வை உலகிற்கு உணர்த்திய படங்கள்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News