இனிமேல்தான் பெரிய சிக்கலே இருக்கு! சீதாவுக்கு ஷாக் கொடுக்கும் நான்சி! சீதாராமன் சீரியல்!

Sita Raman Serial Update News In Tamil : லேடி இன்ஸ்பெக்டரை சிக்க வைத்த ராம்.. அம்பலமான நான்சியின் வில்லத்தனம் - சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட்... 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 19, 2024, 12:47 PM IST
  • லேடி இன்ஸ்பெக்டரை சிக்க வைத்த ராம்!
  • அம்பலமான நான்சியின் வில்லத்தனம்!
  • சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட்...
இனிமேல்தான் பெரிய சிக்கலே இருக்கு! சீதாவுக்கு ஷாக் கொடுக்கும் நான்சி! சீதாராமன் சீரியல்! title=

Sita Raman Serial Update News In Tamil : திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன். இந்த சீரியல், பலரின் ஏகோபித்த ஆதரவையும் பெற்ற மெகா சீரியல்களில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரபபகும் சீதா ராமன் சீரியலின் நேற்றைய எபிசோடில், எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை செய்த பெண்களை கைது செய்த லேடி இன்ஸ்பெக்டரை பார்க்க ராம் ஸ்டேஷனுக்கு கிளம்பினார். இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 

போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற ராம், இன்ஸ்பெக்டரிடம் பேசுகிறார். ஆனால், இன்ஸ்பெக்டரோ எங்கள் கடமையை செய்யவிடுங்கள் என்று  என்று ராமை வெளியே அனுப்புகிறார். ராம், கூட வந்த கான்ஸ்டபிளை வைத்து லேடி இன்ஸ்பெக்டரின் வண்டியின் இன்ஜினை பஞ்சராக்கி விடுகிறார். 

லேடி இன்ஸ்பெக்டர், ராம் தன்னை வேலை செய்ய விடாமல் தடுப்பதாக சொல்லி மீடியாவிடம் சொல்கிறார். அதையடுத்து மீடியா ராமிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைக்கிறது. ராம் கான்ஸ்டபிளை மிரட்டி பணத்தைக் கொண்டு வர சொல்ல அந்த லேடி கான்ஸ்டபிள் பணத்தை கொண்டு வந்து கொடுக்கிறார். 

சீதாவும் அங்கு வந்துவிட இவங்க பணத்தை வாங்கிகிட்டு எங்க எக்ஸ்போர்ட் கம்பெனில வேலை செய்றவங்களா, இல்ல வேலை செய்ய வந்தவர்களை வேலை செய்ய விடாமல் தடுக்கிறாங்களா என்று கேள்வி கேட்டு, உண்மையை உடைக்கிறார்.

மேலும் படிக்க | நினைத்தேன் வந்தாய்: லிப்டுக்குள் சிக்கிய அஞ்சலி.. மகளைக் காப்பாற்ற போராடிய எழில்

அதனை அடுத்து லேடி இன்ஸ்பெக்டர் கைது செய்யப்படுகிறார். இறுதியில் இதெல்லாம் செய்தது நான்சி தான் என்ற விஷயம் அனைவருக்கும் தெரிய வருகிறது. 

பிறகு வீட்டுக்கு வந்த சீதா, நான்சியிடம் இனிமே என்கிட்ட வச்சிக்காத என்று சொல்கிறாள். ஆனால், அசராத நான்சியோ, இது சும்மா ட்ரைலர் தான் இனிமேல்தான் பெரிய சிக்கலே இருக்கு எனச் சொல்லி ஷாக் கொடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | மாரியை பழி தீர்க்க சதித்திட்டம்! சீமந்தத்திற்கு முன்னதாக குட்டு வெளிப்படுமா? மாரி சீரியல் அப்டேட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News