அம்பேத்கரை பிராமணர் என்று அழைக்கலாம்: மீண்டும் சர்ச்சை பேச்சு!!

அம்பேத்கர், பிரதமர் மோடி போன்றோரை பிராமணர் என்று அழைப்பதில் எந்த தவறும் இல்லை என பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது!  

Last Updated : Apr 30, 2018, 03:26 PM IST
அம்பேத்கரை பிராமணர் என்று அழைக்கலாம்: மீண்டும் சர்ச்சை பேச்சு!! title=

குஜராத் மாநிலம் காந்திநகரில் நடைபெற்ற பிராமணர் தொடர்பான நிகழ்ச்சியில் சட்டப்பேரவை சபாநாயகர் ஆர்.திரிவேதி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, அவர் கூறியதாவது:

நன்கு கற்றறிந்தவர்களை பிராமணர் என அழைப்பதில் எந்தத் தவறும் இல்லை.  அந்த வகையில் பி.ஆர். அம்பேத்கரை பிராமணர் என்று அழைப்பதில் தனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. இந்த கூற்றுப்படி பிரதமர் மோடியையும் பிராமணர் என்று அழைக்கலாம் இவ்வாறு அவர் பேசினார். 

 

 

பா.ஜ.க. தலைவர்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதை தவிர்க்குமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தி வரும் நிலையில், பிராமணர் பற்றிய பேச்சு சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

Trending News