மத்திய அரசு ஊழியர்களுக்கு டாப் அப்டேட்: ஊதிய உயர்வுடன் 8வது ஊதியக்குழு... அடுத்த மாதம் முக்கிய முடிவு

8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களைப் பாதிக்கும் பல்வேறு பிரச்சனைகளைக் கையாளும் ஜேசிஎம் திட்டத்தின் உச்ச அமைப்பான கூட்டு ஆலோசனை அமைப்புகளின் தேசிய கவுன்சில் (JCM) அடுத்த மாதம் ஒரு கூட்டத்தை நடத்தும் என்று கூறப்படுகிறது. 8வது ஊதியக் குழு அமைப்பது குறித்த தெளிவு அந்த கூட்டத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.

8th Pay Commission: 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 1.92 ஆக நிர்ணயிக்கப்பட்டு அது அமல்படுத்தப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் (Basic Salary) ரூ.18,000 -இல் இருந்து சுமார் ரூ.34,560 ஆக உயரக்கூயடும். அதாவது 92% உயர்வாக இருக்கும். ஓய்வூதியதாரர்களின்(Pensioners) ஓய்வூதியத்திலும் நல்ல ஏற்றம் இருக்கும். ஓய்வு பெற்றவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9,000 -இலிருந்து ரூ.17,280 ஆக உயரலாம். பணவீக்கம், விலைவாசி மற்றும் பிற பொருளாதார காரணிகளால் பாதிக்கப்பட்டுள்ள மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இது மிகப்பெரிய நிவாரணத்தை அளிக்கும்.

1 /11

2 /11

8வது ஊதியக்குழு குறித்த செய்திக்காக மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் நீண்ட நாட்களாக காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு தற்போது இது குறித்த ஒரு முக்கிய அப்டேட் உள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

3 /11

JCM இன் திட்டம், முதலாளி மற்றும் ஊழியர்களுக்கு இடையே உள்ள அனைத்து பிரச்சனைகளையும் அமைதியான முறையில் தீர்ப்பதற்கு ஊழியர்கள் தரப்பு மற்றும் அதிகாரி தரப்பு பிரதிநிதிகளுக்கு இடையே ஆக்கபூர்வமான உரையாடலுக்கான ஒரு தளமாக செயல்பட்டு வருகிறது.

4 /11

மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் 8வது ஊதியக் குழுவின் உருவாக்கம் குறித்து அடுத்த மாதம் சில தெளிவுகளைப் பெறக்கூடும் என்று நம்புகின்றது. NC-JCM இன் செயலாளர் (ஊழியர்கள் தரப்பு) ஷிவ் கோபால் மிஸ்ரா, 8வது ஊதியக் குழு அமைப்பது குறித்த தெளிவு அடுத்த மாதக் கூட்டத்தில் எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறினார். "இந்த விஷயத்தை நாங்கள் நிச்சயமாக எழுப்புவோம்," என்று அவர் தெரிவித்ததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கூட்டு ஆலோசனை அமைப்புகளின் தேசிய கவுன்சில் (ஜேசிஎம்) ஏற்கனவே, ஊதியக் குழுவை விரைவில் அமைக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி இரண்டு குறிப்பாணைகளை சமர்ப்பித்துள்ளது.

5 /11

ஜூலை மாதம் மத்திய பட்ஜெட் தாக்கலின் போது, மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கௌபாவிடம் முதல் குறிப்பாணை வழங்கப்பட்டது. இரண்டாவது மெமோராண்டம் ஆகஸ்ட் 30 அன்று கேபினட் செயலாளராக பொறுப்பேற்ற டி.வி.சோமநாதனிடம் சமர்ப்பிக்கப்பட்டது என்று மிஸ்ரா தெரிவித்துள்ளார். ஜூலை 23ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2024-25ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டுக்கு முன்னதாக, 8வது ஊதியக் குழுவை மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவிக்கக்கூடும் என்று பல்வேறு ஊகங்கள் இருந்தன. எனினும், இது நடக்கவில்லை.  

6 /11

பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை என்றாலும், அப்போதைய மத்திய நிதித்துறை செயலாளர் டி.வி.சோமநாதன், பட்ஜெட்டுக்கு பிந்தைய பேட்டியில், இந்த விஷயத்தில் அரசாங்கம் விரைவில் முடிவெடுக்கும் என்று சுட்டிக்காட்டினார். டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சோமநாதன், அடுத்த ஊதியக் குழுவை 2026 -இல் தான் அமைக்க வேண்டும். இன்னும் கால அவகாசம் உள்ளது என்றும் கூறியுள்ளார்.

7 /11

8வது ஊதியக்குழுவில் மத்திய அரசு ஃபிட்மெண்ட் ஃபாக்டரை 1.92 ஆக நிர்ணயிக்கக்கூடும் என நம்பப்படுகின்றது. எனினும், ஊழியர் சங்கங்கள் இதை 3.68 ஆக அதிகரிக்க வேண்டும் என கூறி வருகின்றன.  

8 /11

ஊதிய உயவு: 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 1.92 ஆக நிர்ணயிக்கப்பட்டு அது அமல்படுத்தப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் (Basic Salary) ரூ.18,000 -இல் இருந்து சுமார் ரூ.34,560 ஆக உயரக்கூயடும். அதாவது 92% உயர்வாக இருக்கும்.  

9 /11

ஓய்வூதியதாரர்களின்(Pensioners) ஓய்வூதியத்திலும் நல்ல ஏற்றம் இருக்கும். ஓய்வு பெற்றவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9,000 -இலிருந்து ரூ.17,280 ஆக உயரலாம். பணவீக்கம், விலைவாசி மற்றும் பிற பொருளாதார காரணிகளால் பாதிக்கப்பட்டுள்ள மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இது மிகப்பெரிய நிவாரணத்தை அளிக்கும்.

10 /11

முன்னதாக பிப்ரவரி 2014 இல் UPA அரசாங்கத்தால் 7வது ஊதியக் குழு அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரைகள் ஜனவரி 2016 முதல் நடைமுறைக்கு வந்தன. 2026 -இல் 10 ஆண்டு கணக்குபடி இது நிறைவடையும் நிலையில், 8வது உதியக்குழுவிற்கான கோரிக்கைகள் நீண்ட நாட்களாக எழும்பி வருகின்றன.  

11 /11

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அடுத்த ஊதியக்கமிஷனுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.