ஐபிஎல் 2025ல் க்ளென் மேக்ஸ்வெல்லை குறிவைக்கும் 3 அணிகள்!

Glenn Maxwell In Ipl 2025: ஐபிஎல் 2025ல் மெகா ஏலம் நடைபெற உள்ளது. இதனால் ஒவ்வொரு அணிகளும் யாரை தக்க வைப்பது, யாரை விடுவிப்பது என்ற குழப்பத்தில் உள்ளனர்.

 

1 /8

ஆஸ்திரேலியா வீரர் ​​க்ளென் மேக்ஸ்வெல் தற்போது ஆர்சிபி அணியில் விளையாடி வருகிறார். இன்னும் 3 ஆண்டுகள் அவர் ஐபிஎல்லில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

2 /8

ஆர்சிபி அணி அவரைத் தக்க வைத்துக் கொள்ளாமல், ஏலத்தில் மீண்டும் எடுக்க முயற்சி செய்யக்கூடும். ஒருவேளை க்ளென் மேக்ஸ்வெல் ஏலத்தில் வந்தால் அவரை 3 அணிகள் குறிவைத்துள்ளன.   

3 /8

சென்னை சூப்பர் கிங்ஸ் சிஎஸ்கே அணியை ஆர்சிபி தோற்கடித்து பிளே ஆப்க்கு சென்றுள்ளதால் இரு அணிகளுக்கும் இடையே நல்ல போட்டி உருவாகி உள்ளது.   

4 /8

க்ளென் மேக்ஸ்வெல் ஒருவேளை சென்னை அணிக்கு வந்தால் அவரது ஆல் ரவுண்டர் திறமை சேப்பாக்கம் மைதானத்தில் உதவிகரமாக இருக்கும். சிஎஸ்கே சில சீசன்களுக்கு முன்பே அவரை குறிவைத்தது.  

5 /8

குஜராத் டைட்டன்ஸ் க்ளென் மேக்ஸ்வெல்லை ஆர்சிபி விடுவித்தால் அவரை தங்கள் அணியில் எடுக்க குஜராத் டைட்டன்ஸ் அதிகம் முயற்சி செய்யும். டேவிட் மில்லருக்கு பதில் ஜிடி அவரை குறிவைக்கும்.  

6 /8

குஜராத் அணிக்கு நம்பர் 4 மற்றும் நம்பர் 3ல் விளையாட அனுபவம் வாய்ந்த வீரர் தேவை. மேலும் அவரது சுழற்பந்து வீச்சு அணிக்கு கூடுதல் சாதகமாக அமையும்.   

7 /8

ராஜஸ்தான் ராயல்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அவர்களது அணியில் சிறந்த ஆல் ரவுண்டர்கள் இல்லை. இதனாலேயே சில போட்டிகளில் தோல்வி அடைகின்றனர்.   

8 /8

மேக்ஸ்வெல் ராஜஸ்தான் அணியில் எடுக்கப்பட்டால் நம்பர் 4ல் சிறப்பாக விளையாட கூடும். ஷிம்ரோன் ஹெட்மியர் அல்லது ரோவ்மேன் பவல் ஆகியோருடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும்.