சனி பகவானின் வக்ர நிவர்த்தி: இந்த ராசிகள் மீது மகாலட்சுமியின் அருள் மழை

Saturn Transit: அனைத்து கிரகங்களின் ராசி மாற்றங்களும், நிலை மாற்றங்களும் அனைத்து 12 ராசிகளின் வாழ்க்கையையும் பாதிக்கிறது. ஜூலை மாதம் சனி பகவான் வக்ர நிலைக்கு, அதாவது இயல்பு நிலைக்கு எதிரான நிலைக்கு மாறினார். தற்போது அக்டோபர் 23 ஆம் தேதி அவர் மகர ராசியில் மீண்டும் தனது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார். இதன் பலனும் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் தெரியும். எனினும், சில ராசிக்காரர்களுக்கு இந்த காலத்தில் பம்பர் அதிர்ஷ்டம் காத்துக்கொண்டு இருக்கிறது. இந்த காலத்தில் இவர்களுக்கு சனி பகவானுடன் மகாலட்சுமியின் அருளும் கிடைக்கும். அக்டோபர் 23, ஞாயிற்றுக்கிழமை, சனி பகவான் மகர ராசியில் காலை 4:19 மணிக்கு தனது சொந்த ராசியான மகரத்தில் இயல்பு நிலைக்கு மாறினார். 

 

1 /5

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்தக் காலத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். தொழிலில் நல்ல வாய்ப்புகளைப் பெறலாம். புத்திசாலித்தனமாக நடக்க வேண்டிய நேரம் இது. யார் வேண்டுமானாலும் தவறான அறிவுரை கூறலாம். இதனால் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். நீதிமன்ற விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும்.

2 /5

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் மிகவும் சிறப்பாக இருக்கும். சில நல்ல வாய்ப்புகள் அமையும். இந்த நேரத்தில் வெளிநாடு செல்லும் ஆசை நிறைவேற அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. அதே நேரத்தில், ஒரு புதிய ஒப்பந்தம் வணிகத்தில் உறுதிப்படுத்தப்படலாம். காதல் துணையுடன் சில விரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. காரணமின்றி வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.

3 /5

விருச்சிக ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் தொழிலில் பலன் பெறலாம். அதே நேரத்தில், வருமான அதிகரிப்புக்கான வாய்ப்புகளும் உள்ளன. உடன்பிறந்தவர்களுடன் உறவு மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். இந்த நேரத்தில் வாக்குவாதங்களில் இருந்து விலகி இருப்பது நல்லது. இந்த நேரத்தில் பயணம் செய்வதை தவிர்க்கவும்.

4 /5

இந்தக் காலத்தில் பல நன்மைகளைப் பெறலாம். இந்த நேரத்தில் நீண்ட நாட்களாக வாட்டி வதைத்த பிரச்சனைகளிலிருந்து உங்களுக்கு நிவாரணம் கிடைக்கும். தகராறு தீரும் வாய்ப்பு உள்ளது. கடின உழைப்பில் எந்த குறையும் இருக்க வேண்டாம். சோம்பலில் இருந்து விலகி இருப்பது நல்லது. மூத்தவர்களுடன் நல்ல உறவைப் பேணுங்கள்.

5 /5

மீன ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் சாதகமாக இருக்கும். இந்த நேரத்தில், கடின உழைப்பின் முழு பலனைக் காணலாம். உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். காதலில் ஸ்திரத்தன்மை இருக்கும். குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்படும். போட்டித் தேர்வுகளில் சுப முடிவுகள் கிடைக்கும்.  (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)