தலைமை பயிற்சியாளர் ஆனதும் கம்பீர் வைத்துள்ள முதல் கோரிக்கை!

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளரான பிறகு ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரிடம் கவுதம் கம்பீர் தனது முதல் கோரிக்கையை விடுத்துள்ளார்.

1 /6

இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள கம்பீர் தலைமையில் இந்திய அணி இந்த மாத இறுதியில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது.

2 /6

டி20 உலக கோப்பையை வென்ற அணியில் இடம் பெற்று இருந்த ரோஹித், கோலி, பும்ரா ஆகிய மூத்த வீரர்கள் இந்த தொடரில் விளையாட மாட்டார்கள் என்று தகவல் வெளியானது.

3 /6

இந்நிலையில், இலங்கை சுற்றுப்பயணத்திற்குப் பிறகு அனைத்து வீரர்களுக்கும் நீண்ட இடைவெளி கிடைக்கும் என்பதால் மூத்த வீரர்கள் இந்த தொடரில் விளையாட வேண்டும் கம்பீர் வலியுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

4 /6

இலங்கை சுற்றுப்பயணத்திற்கு பிறகு வங்கதேசத்துக்கு எதிராக சொந்த மண்ணில் இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. செப்டம்பர் மாத இறுதியில் இந்த தொடர் நடைபெறுகிறது.

5 /6

மேலும், தனிப்பட்ட காரணங்களுக்காக இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகுவதாக ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். அதேசமயம் டி20 தொடரில் பங்கேற்க உள்ளார்.

6 /6

இந்த வார இறுதிக்குள் இலங்கை சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று அணி தேர்வுக்கான மீட்டிங் நடைபெற்று வருகிறது.